04-06-2005, 01:55 PM
<b>ஜேர்மனியில் பெண்ணை வெட்டிக் கொன்றவர் கடவுளுடன் பேசியதாக கூறுகிறார்</b>
ஜேர்மனியின் ஸ்ருகாட் நகரின் அல்லலோயா மத தேவாலயத்தில் வாளால் பெண்ணொருவரை வெட்டிக் கொன்று, மேலும் மூவரையும் காயப்படுத்திய தமிழர், தான் கடவுளுடன் பேசியதாக பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
சுமார் 65 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, 25 வயதான இந்நபர், கண்மூடித்தனமாக மேற்கொண்ட வாள் வீச்சில் 43 வயதான பெண்மணியொருவர் உயிரிழந்ததோடு, மேலும் மூவர் மிக மோசமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் பெண்ணொருவரும் அடங்குகிறார். பாதிக்கப்பட்ட அனைவரும் தமிழர்களென்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் கொலையாளியை கைது செய்த வேளையில் கூட, கையில் வாள் காணப்பட்டதுடன் கைத்துப்பாக்கியொன்றையும் வைத்திருந்தார்.
விசாரணைகளின்போது, பிரஸ்தாப நபர் மனக் குழப்பத்தில் இருந்தார் என பொலிஸ் தரப்பு பேச்சாளர் கூறுகிறார்.
கடந்த வருடம், மகனொருவரால் தாயின் தலை துண்டிக்கப்பட்டமை, பேர்ளினுக்கருகிலுள்ள காடொன்றில் சுற்றுலாப் பயணிகளை தாக்கும் மாற்றுருக் கொள்ளும் நபரொருவரின் சம்பவம், வாளொன்றை கொள்வனவு செய்த ஒருவர் ஆயுத கடை உரிமையாளரைக் கொன்ற சம்பவம் உட்பட தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளன. :evil: :oops:
thinakural..
ஜேர்மனியின் ஸ்ருகாட் நகரின் அல்லலோயா மத தேவாலயத்தில் வாளால் பெண்ணொருவரை வெட்டிக் கொன்று, மேலும் மூவரையும் காயப்படுத்திய தமிழர், தான் கடவுளுடன் பேசியதாக பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
சுமார் 65 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, 25 வயதான இந்நபர், கண்மூடித்தனமாக மேற்கொண்ட வாள் வீச்சில் 43 வயதான பெண்மணியொருவர் உயிரிழந்ததோடு, மேலும் மூவர் மிக மோசமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் பெண்ணொருவரும் அடங்குகிறார். பாதிக்கப்பட்ட அனைவரும் தமிழர்களென்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் கொலையாளியை கைது செய்த வேளையில் கூட, கையில் வாள் காணப்பட்டதுடன் கைத்துப்பாக்கியொன்றையும் வைத்திருந்தார்.
விசாரணைகளின்போது, பிரஸ்தாப நபர் மனக் குழப்பத்தில் இருந்தார் என பொலிஸ் தரப்பு பேச்சாளர் கூறுகிறார்.
கடந்த வருடம், மகனொருவரால் தாயின் தலை துண்டிக்கப்பட்டமை, பேர்ளினுக்கருகிலுள்ள காடொன்றில் சுற்றுலாப் பயணிகளை தாக்கும் மாற்றுருக் கொள்ளும் நபரொருவரின் சம்பவம், வாளொன்றை கொள்வனவு செய்த ஒருவர் ஆயுத கடை உரிமையாளரைக் கொன்ற சம்பவம் உட்பட தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளன. :evil: :oops:
thinakural..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

