03-27-2005, 10:03 PM
மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு தொடர்கிறது; மூவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை சந்தனமடு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இவர்கள்மாவடிவேம்பைச் சேர்ந்த 41 வயதுடைய ஆறுமுகம் நாகலிங்கம் மற்றும் சித்தாண்டியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவலிங்கம் பாஸ்கரலிங்கம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இந்த சம்பவம் பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இருவரது சடலங்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.அஜ்மீரின் உத்தரவிற்கு அமைய உறவினரிடம் பிரேத பரிசோதனையின் பின்பு ஒப்படைக்கப்பட்டது.
இதே வேளை நேற்றிரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக இராணுவ தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் விடுதலைப் புலிகளோ தமது பகுதியில் இப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கின்றார்கள்.
தமது பிரதேசத்தில் இரண்டு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
தொடர்பாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், இரவு நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை படையினரின் சிறப்பு பிரிவினரே இதனை செய்திருக்கலாம் என சந்தேகமும் தெரிவித்துள்ளனர்.
தவிர நேற்றிரவு, ஐயன்கேனியில் 23 வயதுடைய சரவணமுத்து சிவராசா என்ற இளைஞர் அடையாளந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பிற்கு அருகே செங்கலடியில் 26 வயது இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்களினால் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரிடம் காணப்பட்ட தேசிய அடையாள அட்டையை வைத்து இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கொத்தியாபுல வைச் சேரந்த நடராசா சுவேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
BBC Tamil News
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை சந்தனமடு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
இவர்கள்மாவடிவேம்பைச் சேர்ந்த 41 வயதுடைய ஆறுமுகம் நாகலிங்கம் மற்றும் சித்தாண்டியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவலிங்கம் பாஸ்கரலிங்கம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இந்த சம்பவம் பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இருவரது சடலங்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.அஜ்மீரின் உத்தரவிற்கு அமைய உறவினரிடம் பிரேத பரிசோதனையின் பின்பு ஒப்படைக்கப்பட்டது.
இதே வேளை நேற்றிரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக இராணுவ தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் விடுதலைப் புலிகளோ தமது பகுதியில் இப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கின்றார்கள்.
தமது பிரதேசத்தில் இரண்டு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
தொடர்பாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், இரவு நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை படையினரின் சிறப்பு பிரிவினரே இதனை செய்திருக்கலாம் என சந்தேகமும் தெரிவித்துள்ளனர்.
தவிர நேற்றிரவு, ஐயன்கேனியில் 23 வயதுடைய சரவணமுத்து சிவராசா என்ற இளைஞர் அடையாளந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பிற்கு அருகே செங்கலடியில் 26 வயது இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்களினால் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரிடம் காணப்பட்ட தேசிய அடையாள அட்டையை வைத்து இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கொத்தியாபுல வைச் சேரந்த நடராசா சுவேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

