09-09-2003, 07:54 AM
உண்மைதான் எழுத மறந்தது தொலைந்தது தான் பிறகு வராது. வேண்டுமானால் வேறு மொழியழகில் வந்தமரலாம்: நான் போகும் இடமெல்லாம் ஒரு பேனை ஒரு கொப்பி என்னோடு கூட எடுத்து செல்வேன். சிந்தனையில் என்ன உதித்தாலும் எழுதிவைத்து விடுவேன். இப்ப ஒரு 4 5 மாதமாக சத்தான சிந்தனைகள் எதையுமே காணம். கவிதை எழுதவேணும் என நினைத்து எழுதிய சில கவிதைகள் கூடுதலாக வசனங்களாக அமைந்து விடுகிற தன்மையை எனது கவிதைகளில் காணக் கூடியதாக உள்ளது. அதனால் எழுத வேணும் என நினைத்து எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
[b]Nalayiny Thamaraichselvan

