06-20-2003, 03:08 PM
இளமை ஒளிர்கின்ற போராளியாய்
வாழ்ந்த காலத்தில்
சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்ததுன் மரணம்
எப்போதும் போலவே பேசிச்சிரித்தபடி
விடைபெற்ற பொழுதின் பின்
நீ வீரச்சாவடைந்தாய்
போராயுதங்கள் பற்றிய பரிச்சயம்
நன்கறிந்தும்
நீ அப்படி ஆனாய்
மரணத்தின் கொடுவலி உணர்தலில்லாமல்
உன் போர்முகம் சிதைந்து போயிற்று
சிதைந்தே போயிற்று.
நினைவுக் கூர்மைகள் மனம் நிறைய
பிரிவின் வலியும் துக்கமும் எழ
பற்றைகளிலும் மரக்கொப்புகளிலும்
உன்னுடலைத் தேடித்திரிந்த கணங்களை
விரித்த சாறத்தில் குருதி சொட்டச்சொட்ட
சின்ன ஒரு பொதியாய்
உன்னை அள்ளி எடுத்த பின்
ஆற்றப்படாத காயங்களினால் மனம் நோக
வலிகள் பெருகும் வார்த்தைகளோடு
உன்னை து}க்கிச் சென்றோம்.
இனி இப்போர் வெளியில்
விழிகள் நிலை குத்திச் செல்கையில்
உனது கணங்கள் மனதில் நிறையும்
மனதில் நிறையும்
நிறைந்தபடியே இருக்கும்.
தமிழ்மாறன
வாழ்ந்த காலத்தில்
சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்ததுன் மரணம்
எப்போதும் போலவே பேசிச்சிரித்தபடி
விடைபெற்ற பொழுதின் பின்
நீ வீரச்சாவடைந்தாய்
போராயுதங்கள் பற்றிய பரிச்சயம்
நன்கறிந்தும்
நீ அப்படி ஆனாய்
மரணத்தின் கொடுவலி உணர்தலில்லாமல்
உன் போர்முகம் சிதைந்து போயிற்று
சிதைந்தே போயிற்று.
நினைவுக் கூர்மைகள் மனம் நிறைய
பிரிவின் வலியும் துக்கமும் எழ
பற்றைகளிலும் மரக்கொப்புகளிலும்
உன்னுடலைத் தேடித்திரிந்த கணங்களை
விரித்த சாறத்தில் குருதி சொட்டச்சொட்ட
சின்ன ஒரு பொதியாய்
உன்னை அள்ளி எடுத்த பின்
ஆற்றப்படாத காயங்களினால் மனம் நோக
வலிகள் பெருகும் வார்த்தைகளோடு
உன்னை து}க்கிச் சென்றோம்.
இனி இப்போர் வெளியில்
விழிகள் நிலை குத்திச் செல்கையில்
உனது கணங்கள் மனதில் நிறையும்
மனதில் நிறையும்
நிறைந்தபடியே இருக்கும்.
தமிழ்மாறன

