06-20-2003, 03:04 PM
கொடியபகை கொன்றொழிக்க
எழுந்திடுவோம் வாடா
ஊரினிலே பகையிருக்க உறங்குவதோ தமிழா?
வீறுமும்புலிப் படையிணையத் தயங்குவதோ தமிழா
அகதி என்றால் தமிழன் என்ற விதியழிப்போம் எழடா
அண்ணன் படை இணைந்து எங்கள் ஊர்பிடிக்க வாடா
கோயில் குளங்கட்டிக் குடியிருந்த ஊரில்
கொடியபடை கொலுவிருக்கும் நிலை வரலாமோடா?
சூரியக்கதிர் சுட்டெரிக்க நீ தூசா? பஞ்சா?
சூரியனைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய் எழடா
வலிகாமம் இருந்துவரும் வாடையிளங் காற்றில்
வானரங்கள் மேனியதன் முடைநாற்றம் வீசும்
கோப்பாயில் துயிலுமில்லப் புூச்செடிகள் யாவும்
கொடியவனின் காலணியால் மிதிபட்டு வாடும்
பாயும் புலிக்கொடி பறந்திட்ட கோட்டையிலே
பகைவனின் கொடியது பறந்தாடும் இந்த
நிலை வந்தபோதும் நீளுமா உன் உறக்கம்
நாளை கோவணமும் இழக்கின்ற கேவலத்தை நீக்க
கொடியபகை கொன்றொழிக்க எழுந்திடுவோம் வாடா
ஏழுகடல் ஆண்டுவந்த சோழமகன் நீயடா
சோதனைகள் கண்டுமனம் சோம்பிப்போவ தேனடா?
ஆயுதத்தை ஏந்திடடா இந்தநிலை மாறும்
எங்கள் அண்ணன் புலிக்கொடி மீண்டும் யாழில் ஆடும்.
செ. இரும்பொறை
எழுந்திடுவோம் வாடா
ஊரினிலே பகையிருக்க உறங்குவதோ தமிழா?
வீறுமும்புலிப் படையிணையத் தயங்குவதோ தமிழா
அகதி என்றால் தமிழன் என்ற விதியழிப்போம் எழடா
அண்ணன் படை இணைந்து எங்கள் ஊர்பிடிக்க வாடா
கோயில் குளங்கட்டிக் குடியிருந்த ஊரில்
கொடியபடை கொலுவிருக்கும் நிலை வரலாமோடா?
சூரியக்கதிர் சுட்டெரிக்க நீ தூசா? பஞ்சா?
சூரியனைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய் எழடா
வலிகாமம் இருந்துவரும் வாடையிளங் காற்றில்
வானரங்கள் மேனியதன் முடைநாற்றம் வீசும்
கோப்பாயில் துயிலுமில்லப் புூச்செடிகள் யாவும்
கொடியவனின் காலணியால் மிதிபட்டு வாடும்
பாயும் புலிக்கொடி பறந்திட்ட கோட்டையிலே
பகைவனின் கொடியது பறந்தாடும் இந்த
நிலை வந்தபோதும் நீளுமா உன் உறக்கம்
நாளை கோவணமும் இழக்கின்ற கேவலத்தை நீக்க
கொடியபகை கொன்றொழிக்க எழுந்திடுவோம் வாடா
ஏழுகடல் ஆண்டுவந்த சோழமகன் நீயடா
சோதனைகள் கண்டுமனம் சோம்பிப்போவ தேனடா?
ஆயுதத்தை ஏந்திடடா இந்தநிலை மாறும்
எங்கள் அண்ணன் புலிக்கொடி மீண்டும் யாழில் ஆடும்.
செ. இரும்பொறை

