03-21-2005, 05:17 PM
tamilini Wrote:நாங்கள் வாழ்கின்ற இந்த சமுதாயம் இப்பொழுதும் ஆணாதிக்க வெறிபிடித்ததாய் தான் இருக்கு முழுதாய் மாறிவிடவில்லை. எங்களது கருத்து பெண்கள் தன்னைவிட படித்த ஒரு ஆடவனை மணம்முடித்த பின்னர் எல்லாத்திற்கும் அவனில தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரலாம். ஒரு டாக்கடர் கண்டிப்பா தன் மனைவி சாதாரன தொழில் செய்ய விடமாட்டார் காரணம். கெளரவம் அது இது என்று. அந்தப்பெண்ணின் வாழ்வு அங்கு சார்ந்து வாழ வேண்டிய நிலையில போய் முடிகிறது. எங்களது படிப்பு தகுதிக்கு ஏற்ற வாறு ஒருவனை மணம் முடித்தால் அவனிற்கு நிகராய் பெண் வேலைக்கு போகலாம் சம்பாதிக்கலாம் அவனில சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட படித்த ஒருவர் என்றால் பிழைகள் செய்யும் போது சமநிலையில் இல்லாத ஒரு பெண் அதைத்தட்டிக்கேட்கிற வேளை கூட பிரச்சனைகள் உருவாகிறது. நீ என்ன என்னைக்கேக்கிறது நான் என்ன உனக்கு சொல்கிறது என்று. இப்படிப்பல. வருகிற சந்ததிகள் துறைசார் முறையில் இருவரது அறிவையும் பெறுவதற்காய் வாழ்கிற சந்ததி இன்னல்களை அனுபவிக்க முடியாது.
பெண்கள் படித்து தமக்கு சரிசமமாய் மாப்பிள்ளையைத்தேடலாம் அது வேறு. இன்றைய சூழ்நிலையில் ஆண் எப்படி தன்னைவிடப்படித்த ஒரு பெண்ணை மணம் முடிக்க தயங்குகிறானோ அப்படி பெண்ணும் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.
புரிந்துணர்வு இருந்தால் போதும் என்று. சொல்லில மட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தாங்கியவாறு நிறையப்பெண்கள் வாழ்கிறார்கள். இவை களையப்படவேணும் என்றால். பெண்கள் இவைகளை சிந்திக்கவேணும். டாக்டர் மாப்பிளை நல்ல காசுவரும். நல்லாய் வழலாம் என்று எண்ணுறவை கடைசியில நின்மதி சந்தோசம் தொலைத்துவிட்டு நிண்டு பிரியோசனம் இல்லை. :wink: :mrgreen: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்கள் கருத்து பெண்களை பலவீனமாகவே சிந்திக்கச் சொல்வதாக இருக்கிறது...! மீண்டும் சொல்கிறோம்...ஒருவர் டாக்டர் என்றால் அவருக்கு அனைத்தும் தெரியும் என்பதல்ல அர்த்தம்... கல்வி அறிவென்பது தேவைப்படும் இடத்துக்குப் பயன்படுத்தவே அன்றி...வீட்டில் உள்ளவர்களிடம் காட்டுவதற்கல்ல....ஒருவர் டாக்டர் ஆகும் போது அவரின் பெற்றோர் டாக்டர் ஆக இல்லாது இருப்பினும் அவர் பெற்றோரை சகோதரங்களை மதிப்பதில்லையா....அதே போல்தான் அவர் அவரின் துணையாக வருபவருக்கும் மதிப்பளிக்க வேண்டும்...! பெண்கள் இப்படியான சூழல்களை எதிர்கொள்ளப் பழக வேண்டுமே தவிர சூழ்நிலைக்களைக் கண்டு ஒதுங்கக் கூடாது....! இதைத்தான் கடந்த காலங்களிலும் செய்துவிட்டு இப்போ ஆண்கள் மீது ஆதிக்க குற்றம் சுமத்துகின்றனர்....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->