06-20-2003, 03:03 PM
ஒரு நாள்
காலையில் எழுந்து
காலைக் கடன் கழிக்கச் சென்றேன்
அனுமதி எடுக்க வேண்டியிருந்தது.
நேரமும் குறிக்கப்பட்டது
நேரத்தோடு குளிப்போமென்றால்
நோய்பிடித்த நாய்கள் நோட்டமிட்டன.
பாடசாலைக்குச் செல்லும்போது
பேய்கள் கனைக்கும் பச்சை வார்த்தை
நெஞ்சைக் கொல்லும்.
சோதனை என்று சோதனைச்சாவடி
நேரத்தை இழுக்கும்.
சோதித்து முடிந்ததும் முதல் பாடமும்
முடிந்துவிடும்.
எஞ்சிய பாடத்திற்கும் இடையிடையே
குண்டுச் சத்தம் மனதைக் குழப்பும்.
வீடு வரும்போது ஆறுமணியும் ஆகும்
வீட்டில் படிப்பதற்கும்
விளக்கெரிக்க முடியாது.
நித்திரை கொள்வதற்கு சப்பாத்துவிடாது
இவ வளவும் என் வீட்டில், என் வீதியில்
எனது ஊரில் ஏன் இப்படி ஆனது
எதனால் இப்படிப்போனது ஓ. ஓ
அன்று நான் சிந்திக்கவில்லை
அப்படியானால் இன்று?
-
கலைச்செல்வன
காலையில் எழுந்து
காலைக் கடன் கழிக்கச் சென்றேன்
அனுமதி எடுக்க வேண்டியிருந்தது.
நேரமும் குறிக்கப்பட்டது
நேரத்தோடு குளிப்போமென்றால்
நோய்பிடித்த நாய்கள் நோட்டமிட்டன.
பாடசாலைக்குச் செல்லும்போது
பேய்கள் கனைக்கும் பச்சை வார்த்தை
நெஞ்சைக் கொல்லும்.
சோதனை என்று சோதனைச்சாவடி
நேரத்தை இழுக்கும்.
சோதித்து முடிந்ததும் முதல் பாடமும்
முடிந்துவிடும்.
எஞ்சிய பாடத்திற்கும் இடையிடையே
குண்டுச் சத்தம் மனதைக் குழப்பும்.
வீடு வரும்போது ஆறுமணியும் ஆகும்
வீட்டில் படிப்பதற்கும்
விளக்கெரிக்க முடியாது.
நித்திரை கொள்வதற்கு சப்பாத்துவிடாது
இவ வளவும் என் வீட்டில், என் வீதியில்
எனது ஊரில் ஏன் இப்படி ஆனது
எதனால் இப்படிப்போனது ஓ. ஓ
அன்று நான் சிந்திக்கவில்லை
அப்படியானால் இன்று?
-
கலைச்செல்வன

