03-20-2005, 07:30 AM
அவளுக்கு கல்யாணம்
என் கை பிடித்து
என் கண் பார்த்துக் காதல்
சொன்ன கண்மணிக்கு
கல்யாணம்
கூடித் திரிந்து
ஆடிச் சிரித்து
பேசிப் பழகி
பறக்கும் முத்தம் தந்து
நாளை சந்திப்போம் என்று
சொல்லிப் போன என்
தேவதை
முகூர்த்தம் பார்த்து
பந்தலிட்டு
மணவறையில் இருக்க
மணமகளாய் கோலம்
பூண்டு போகிறாள்
என்னவள்!
மனம் விட்டுப் பேசி
என் மடிமீது சாய்ந்து
மணமாலை சூடப் போகும்
என்நாள் என எனைக்
கேட்டவள்
தேதி குறித்து விட்டு
என்னைத்
தேடுகிறாள் தன்
திருமண அழைப்பிதழ்
கொடுப்பதற்கு!
கொஞ்சிப் பேசிய
காலம் இன்னும்
கசிந்து கொண்டிருக்கிறது
இதயத்தின் ஓரமாய்
என் இனியவள்
மனதிலோ மாறுதல்
ஏதும் இன்றி
மங்களக் காட்சிகள்
இதயத்திரையில்
மௌனமாய்
என்னை
அழ வைத்து விட்டு
நானத்தின்
நடையோடு நாயகி
வலம் வரப் போகிறாள்
இதயத்தில் எழுதி
வைத்த காதலை
அழிப்பதென்பது கடினம்
என்று பலர் சொல்லக்
கேட்டதுண்டு
நியத்தில் அது
சுலபம் என்று
நிரூபித்து விட்டாள்
என்னவள்
சிரித்துக் கொண்டு
என் செல்லப்பூ
வாழ்க்கைக்குப் போகும
;போது நான் மட்டும்
எப்படி அழுது கொண்டு
வாசலில் நிற்பது
மறப்போம் என்ற
சொல்லைக் கேட்ட போது
இதயத்தில் விட்டு விட்டு
வந்தது வலி
ஆனால்
மணக்கப் போகிறாய்
என்ற சொல்லைக்
கேட்ட போது இதயத்தில்
விழுந்ததடி இடி
சரி !
அன்பே
விட்டுக் கொடுத்த
இந்தக் காதலனின்
வாழ்த்துத் தான்
நிறைவான வாழ்த்து
வாழி!
www.eelakkathir.de
என் கை பிடித்து
என் கண் பார்த்துக் காதல்
சொன்ன கண்மணிக்கு
கல்யாணம்
கூடித் திரிந்து
ஆடிச் சிரித்து
பேசிப் பழகி
பறக்கும் முத்தம் தந்து
நாளை சந்திப்போம் என்று
சொல்லிப் போன என்
தேவதை
முகூர்த்தம் பார்த்து
பந்தலிட்டு
மணவறையில் இருக்க
மணமகளாய் கோலம்
பூண்டு போகிறாள்
என்னவள்!
மனம் விட்டுப் பேசி
என் மடிமீது சாய்ந்து
மணமாலை சூடப் போகும்
என்நாள் என எனைக்
கேட்டவள்
தேதி குறித்து விட்டு
என்னைத்
தேடுகிறாள் தன்
திருமண அழைப்பிதழ்
கொடுப்பதற்கு!
கொஞ்சிப் பேசிய
காலம் இன்னும்
கசிந்து கொண்டிருக்கிறது
இதயத்தின் ஓரமாய்
என் இனியவள்
மனதிலோ மாறுதல்
ஏதும் இன்றி
மங்களக் காட்சிகள்
இதயத்திரையில்
மௌனமாய்
என்னை
அழ வைத்து விட்டு
நானத்தின்
நடையோடு நாயகி
வலம் வரப் போகிறாள்
இதயத்தில் எழுதி
வைத்த காதலை
அழிப்பதென்பது கடினம்
என்று பலர் சொல்லக்
கேட்டதுண்டு
நியத்தில் அது
சுலபம் என்று
நிரூபித்து விட்டாள்
என்னவள்
சிரித்துக் கொண்டு
என் செல்லப்பூ
வாழ்க்கைக்குப் போகும
;போது நான் மட்டும்
எப்படி அழுது கொண்டு
வாசலில் நிற்பது
மறப்போம் என்ற
சொல்லைக் கேட்ட போது
இதயத்தில் விட்டு விட்டு
வந்தது வலி
ஆனால்
மணக்கப் போகிறாய்
என்ற சொல்லைக்
கேட்ட போது இதயத்தில்
விழுந்ததடி இடி
சரி !
அன்பே
விட்டுக் கொடுத்த
இந்தக் காதலனின்
வாழ்த்துத் தான்
நிறைவான வாழ்த்து
வாழி!
www.eelakkathir.de

