03-19-2005, 10:54 PM
அழகானதொரு கட்டுரையை அல்லது கருத்தை முன் வைத்த மதன் மட்டும் சயந்தனுக்கு முதற் கண் என் நன்றிகள்.
மேலேயுள்ள கருத்துகளில் எனக்கும் அதிகம் உடன்பாடு உண்டு.
இங்கே என்னை வருத்தும் சில விடயங்களை நான் அனுபவித்தேன்.
அதில் கடந்த மாதம் <b>நிழல் யுத்தம்</b> மற்றும் <b>அழியாத கவிதை </b>ஆகிய குறும்படங்கள் கொழும்பில் <b>மிஸ்டர் அன்ட் மிஸிஸ் ஐயர் </b>திரைப்படத்தோடு விபவி கலாசாச்சார மையம் திரையிட்டது.
திரைப்படங்களை பார்த்து விட்டு என்னிடம் ஒரு பார்வையாளர் கேட்ட கேள்வி:
<span style='color:brown'>உங்கள் படத்தில் வரும் தமிழ், பொதுவான ஒரு தமிழாக இல்லை.
உங்கள் படத்தில் பொதுவான ஒரு தமிழை பாவிக்க வேண்டும்.
இது எல்லோருக்கும் புரியாது என்றார்.
நாம் பேசும் தமிழை நாமே ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் நமது பேச்சு வழக்கு மதிப்பிற்குரியதாக மாறாமல் கேலிக்குரியதாக நம்மவர்களாலேயே பார்க்கப்படுகிறது.
நீங்கள் பேசும் தமிழை உங்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறீர்களே,
அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் அந்த பொதுத் தமிழைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்றேன்.
அவர் பேசாமல் மழுப்ப முயன்றார்.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் கூட தமிழ் மொழியில் மட்டுமல்ல சிங்கள மொழியிலும் ஏன் ஏனைய மொழிகளிலும் பேச்சு வழக்குகளில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டினேன்.
அங்கே வந்திருந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தனியாக சந்தித்து என்னிடம் அது என்ன தமிழ்? என்ன பிரச்சனை?
என்று கேட்டார்.
நான் அவரிடம் சொன்னேன்.
தான் பேசுவதையே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவராக அவரது கேள்வி இருக்கிறது என்றேன்.
அவர் சிரித்தார்.
பக்கத்தில் இருந்தவர் சொன்னார்:
எங்களுடயவர்களுக்கு எழுத்துத் தமிழில் திரைப்படத்தில் பேசினால்தான் புரியும்.
இக் கருத்தில்தான் இருக்கிறது இலங்கை சினிமா .........
இது போன்றவர்களால்தான்,
இலங்கைத் தமிழ் சினிமா ஒன்று உருவாவது தடைப்பட்டது என்றேன்.
பின்னர் ஐலண்ட் பத்திரிகையில் கீழ் வரும் பந்தி
<b>As I like it</b>
பகுதியில் இடம் பெற்றிருந்தது.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_island.1.jpg' border='0' alt='user posted image'>
The Island wednesday 2nd March 2005
எமது தமிழை நாம் கொச்சை படுத்தாத வரை
நமது தமிழ் மட்டுமல்ல
உலகத் தமிழும் வளரும்.
அதைத் தடுக்க யாராலும் முடியாது.</span>
மேலேயுள்ள கருத்துகளில் எனக்கும் அதிகம் உடன்பாடு உண்டு.
இங்கே என்னை வருத்தும் சில விடயங்களை நான் அனுபவித்தேன்.
அதில் கடந்த மாதம் <b>நிழல் யுத்தம்</b> மற்றும் <b>அழியாத கவிதை </b>ஆகிய குறும்படங்கள் கொழும்பில் <b>மிஸ்டர் அன்ட் மிஸிஸ் ஐயர் </b>திரைப்படத்தோடு விபவி கலாசாச்சார மையம் திரையிட்டது.
திரைப்படங்களை பார்த்து விட்டு என்னிடம் ஒரு பார்வையாளர் கேட்ட கேள்வி:
<span style='color:brown'>உங்கள் படத்தில் வரும் தமிழ், பொதுவான ஒரு தமிழாக இல்லை.
உங்கள் படத்தில் பொதுவான ஒரு தமிழை பாவிக்க வேண்டும்.
இது எல்லோருக்கும் புரியாது என்றார்.
நாம் பேசும் தமிழை நாமே ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் நமது பேச்சு வழக்கு மதிப்பிற்குரியதாக மாறாமல் கேலிக்குரியதாக நம்மவர்களாலேயே பார்க்கப்படுகிறது.
நீங்கள் பேசும் தமிழை உங்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறீர்களே,
அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் அந்த பொதுத் தமிழைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்றேன்.
அவர் பேசாமல் மழுப்ப முயன்றார்.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் கூட தமிழ் மொழியில் மட்டுமல்ல சிங்கள மொழியிலும் ஏன் ஏனைய மொழிகளிலும் பேச்சு வழக்குகளில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டினேன்.
அங்கே வந்திருந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தனியாக சந்தித்து என்னிடம் அது என்ன தமிழ்? என்ன பிரச்சனை?
என்று கேட்டார்.
நான் அவரிடம் சொன்னேன்.
தான் பேசுவதையே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவராக அவரது கேள்வி இருக்கிறது என்றேன்.
அவர் சிரித்தார்.
பக்கத்தில் இருந்தவர் சொன்னார்:
எங்களுடயவர்களுக்கு எழுத்துத் தமிழில் திரைப்படத்தில் பேசினால்தான் புரியும்.
இக் கருத்தில்தான் இருக்கிறது இலங்கை சினிமா .........
இது போன்றவர்களால்தான்,
இலங்கைத் தமிழ் சினிமா ஒன்று உருவாவது தடைப்பட்டது என்றேன்.
பின்னர் ஐலண்ட் பத்திரிகையில் கீழ் வரும் பந்தி
<b>As I like it</b>
பகுதியில் இடம் பெற்றிருந்தது.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_island.1.jpg' border='0' alt='user posted image'>
The Island wednesday 2nd March 2005
எமது தமிழை நாம் கொச்சை படுத்தாத வரை
நமது தமிழ் மட்டுமல்ல
உலகத் தமிழும் வளரும்.
அதைத் தடுக்க யாராலும் முடியாது.</span>

