06-20-2003, 02:59 PM
கதை கூறுமிவர்
பள்ளி வாத்தி சொன்னதும்
ஞாபகமாய் என் நெஞ்சில் நிறைந்தது
காலை எழும்பு பாடம்படி
இன்று நான் அதை நினைக்கையில்
மனம் புல்லரித்தது
இன்று நான் காலையில் விழித்ததும்
சுடுதவன் கரமெடுத்து
தோழிற் சுமையுடன்
தொலை தூரம் நடக்கிறேன்
வால் மறையா அம்புலி
வடிவாய் எமைப் பார்த்தது
கையசைத்து நான் விடைபெற
கண்சிமிட்டாது நின்றது.
முகிலுடன் ஓடியே நான்
போகும் திசை தேடிவந்தது
இக்கதை கூறி
வெடிசுமந்தா னொருவீரன்
இப்பவும் நான்
அண்ணாந்து பார்க்கின்றேன்
வானத்து வெளியை
அதனுடன் நிலவை அதன் எழிலை
வாயிருந்தால் கூறிவிடும்
அந்த வாசமலர் போனதிசை
நேசமுடன் நாளை வந்து
கூறிவிடு நிலவே!
அவர்களே எங்களின்
இதயத்துக் கோயில்கள்
இ. தில்லைவெற்
பள்ளி வாத்தி சொன்னதும்
ஞாபகமாய் என் நெஞ்சில் நிறைந்தது
காலை எழும்பு பாடம்படி
இன்று நான் அதை நினைக்கையில்
மனம் புல்லரித்தது
இன்று நான் காலையில் விழித்ததும்
சுடுதவன் கரமெடுத்து
தோழிற் சுமையுடன்
தொலை தூரம் நடக்கிறேன்
வால் மறையா அம்புலி
வடிவாய் எமைப் பார்த்தது
கையசைத்து நான் விடைபெற
கண்சிமிட்டாது நின்றது.
முகிலுடன் ஓடியே நான்
போகும் திசை தேடிவந்தது
இக்கதை கூறி
வெடிசுமந்தா னொருவீரன்
இப்பவும் நான்
அண்ணாந்து பார்க்கின்றேன்
வானத்து வெளியை
அதனுடன் நிலவை அதன் எழிலை
வாயிருந்தால் கூறிவிடும்
அந்த வாசமலர் போனதிசை
நேசமுடன் நாளை வந்து
கூறிவிடு நிலவே!
அவர்களே எங்களின்
இதயத்துக் கோயில்கள்
இ. தில்லைவெற்

