06-20-2003, 02:58 PM
சோகம்
மனத்தினுள்
வைத்துக் கட்டிவிட்டு
முகத்தினால் வெளிப்படுத்தும்
மாயாஜாலம்!
தோளை விட்டிறங்க மறுக்கும்
சிறு குழந்தை
உதடுகளில் மலரும்
சிரிப்பு மலர்களைப் பறித்தெடுக்கும்
இயற்கையின் கரம்!
இயற்கை
மனிதனோடு ஆடும் விளையாட்டு!
வாழ்க்கைப் பயணத்தில்
சிலர் வலிந்து போட்டுக்கொள்ளும்
நித்திரைக் குளிகை!
இன்பத்தின்
ஒப்பற்ற அளவுகோல்!
அப்பாவிகளுக்கு
அடக்குமுறையாளர்
அளித்த பரிசு!
-த.நிலவன்
மனத்தினுள்
வைத்துக் கட்டிவிட்டு
முகத்தினால் வெளிப்படுத்தும்
மாயாஜாலம்!
தோளை விட்டிறங்க மறுக்கும்
சிறு குழந்தை
உதடுகளில் மலரும்
சிரிப்பு மலர்களைப் பறித்தெடுக்கும்
இயற்கையின் கரம்!
இயற்கை
மனிதனோடு ஆடும் விளையாட்டு!
வாழ்க்கைப் பயணத்தில்
சிலர் வலிந்து போட்டுக்கொள்ளும்
நித்திரைக் குளிகை!
இன்பத்தின்
ஒப்பற்ற அளவுகோல்!
அப்பாவிகளுக்கு
அடக்குமுறையாளர்
அளித்த பரிசு!
-த.நிலவன்

