03-14-2005, 09:32 PM
கொஞ்சம் ஏட்டுக் கல்வி பயின்று, பின்னர் உலகத்தை ஓரளவிற்கு புரிந்துகொண்டாப் பிறகு கடவுள் எங்கை இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? இவ்வளவு நாளும் என்ன செய்தவர்? இப்ப என்ன செய்கிறார்? இனி என்ன செய்வார்? என்பது போன்ற சில கேள்விகள் மனதிலை எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது. (சிலர் இதனை விதண்டாவாதம் என்கிறார்கள்) இந்தக் காலத்திலை அநியாயம் செய்யுறவைதான் கடவுளை நல்லாய் பயன்படுத்துகிறார்கள். எங்கடை வளர்ப்புமுறை, வாழ்க்கை முறை என்பவற்றாலைதான் இந்தப் பிரச்சினை. அம்மா கோயிலுக்குப் போய் கும்பிட்டு பரீட்சைக்குப் போ என்று சொல்லாட்டி நான் கோயிலுக்குப் போய், திருநீறு, சந்தனம் சாத்திக்கொண்டு பரீட்சைக்குப் போயிருக்க மாட்டன். இது ஒரு சம்பவம் தான். இப்படித்தான் எங்கடை வாழ்க்கை முறையிலை கடவுள் நுழையிறார்.
ஆனால் தியானம் எண்டது நல்ல விடயம் தான். மனதை ஒருமுகப்படுத்தி எமது திறன்களை வளர்த்துக்கொள்வதென்றது முக்கியமானதொன்று. ஆனால் இதிலை கடவுளின்ரை பங்கு எண்டது எப்படி வருகுது? ஒவ்வொருவரும் தங்கடை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரி கடவுளை பிறக்கவைக்கிறார்கள், சிரிக்க வைக்கிறார்கள், அழவைக்கிறார்கள் கடைசிலை கடவுளை கொலையும் செய்துவிடுகிறார்கள்.
ஏன் காஞ்சி சங்கராச்சாரியர் எவ்வளவு பெரிய ஞர்னி (?). அவர் ஏன் உப்பிடியெல்லாம் செய்தவர்? இனி சொல்லுவார்கள் ஆண்டவன் சோதித்தவன் என்று. ஏற்றுக்கொள்ளக் கூடிய சாட்டுத்தான் :evil: :evil: :evil: .
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சினையுடன் மட்டுமல்லாமல் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் - கோழி முதலா முட்டை முதலா - கேள்வியைக் கொண்டுபோய்ப் பொருத்தலாம். அதாவது அந்தப் பிரச்சினையையே விவாதத்தாலை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம். ஆனால் நிஜத்திலை பிரச்சினை அப்படியே இருக்கும்.
கடவுள் இல்லை எண்டது தான் என்ரை கருத்து.
தப்பித்தவறி கடவுள் இருந்தாலும் அடியேன் அறியாமையால் செய்த பிழைகளை மன்னித்தருள்வார் என்று நம்புகிறேன்.
ஆனால் தியானம் எண்டது நல்ல விடயம் தான். மனதை ஒருமுகப்படுத்தி எமது திறன்களை வளர்த்துக்கொள்வதென்றது முக்கியமானதொன்று. ஆனால் இதிலை கடவுளின்ரை பங்கு எண்டது எப்படி வருகுது? ஒவ்வொருவரும் தங்கடை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரி கடவுளை பிறக்கவைக்கிறார்கள், சிரிக்க வைக்கிறார்கள், அழவைக்கிறார்கள் கடைசிலை கடவுளை கொலையும் செய்துவிடுகிறார்கள்.
ஏன் காஞ்சி சங்கராச்சாரியர் எவ்வளவு பெரிய ஞர்னி (?). அவர் ஏன் உப்பிடியெல்லாம் செய்தவர்? இனி சொல்லுவார்கள் ஆண்டவன் சோதித்தவன் என்று. ஏற்றுக்கொள்ளக் கூடிய சாட்டுத்தான் :evil: :evil: :evil: .
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சினையுடன் மட்டுமல்லாமல் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் - கோழி முதலா முட்டை முதலா - கேள்வியைக் கொண்டுபோய்ப் பொருத்தலாம். அதாவது அந்தப் பிரச்சினையையே விவாதத்தாலை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம். ஆனால் நிஜத்திலை பிரச்சினை அப்படியே இருக்கும்.
கடவுள் இல்லை எண்டது தான் என்ரை கருத்து.
தப்பித்தவறி கடவுள் இருந்தாலும் அடியேன் அறியாமையால் செய்த பிழைகளை மன்னித்தருள்வார் என்று நம்புகிறேன்.
--
--
--

