03-14-2005, 02:04 PM
நிவாரணப் பொருட்களுடன் எடுத்துவரப்பட்ட ஹெலிகொப்டர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
ஸ்ரீலங்காவில் இயங்கிவரும் இரண்டு அரசு சார்பற்ற நிறுவனங்களால் கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் மறைத்து இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த பொழுது விமானப்படையினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஹெலிகொப்டர்களும் திரும்பவும் நாட்டை விட்டு எடுத்துச்செல்லப்பட்டன.
மேற்படி இரண்டு ஹெலிக்கொப்டர்களில் "எவர்கிறீன்" எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனத்தால் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த ஹெலிக்கொப்டரை மேற்படி நிறுவனம் கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் சிங்கப்பூர் விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மற்றைய ஹெலிகொப்டரை இங்கு கொண்டு வந்திருந்த `ஹியூமெடிக்கா' எனப்படும் அரச சார்பற்ற அமைப்பு கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த ஹெலிகொப்டரை தென்னாபிரிக்காவுக்கு எடுத்துச் சென்றதாகச் சிரேஷ்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளரான கிறிஸ்வீன் (பிரித்தானியர் ஒருவர்) கட்டுநாயக்காவுக்கு கொண்டுவரப்படும் கடல்கோள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து வைக்கும் களஞ்சியசாலைக்குப் பொறுப்பாகச் செயல்பட்ட பொழுதே மேற்படி ஹெலிகொப்டர்கள்
ஸ்ரீலங்காவுக்கு எடுத்து வரப்பட்டதென்றும் பின்னர் அவற்றை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அக்களஞ்சியசாலையில் செயல்பட்ட விமானப்படையினரால் மேற்படி ஹெலிகொப்டர்கள் பாதுகாப்புத்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக விமான நிலையத்திலுள்ள நிவாரணப் பொருட்கள் வைக்கும் களஞ்சியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
<b>சிங்கள பத்திரிக்கை திவயின 10.03.2005</b>
ஸ்ரீலங்காவில் இயங்கிவரும் இரண்டு அரசு சார்பற்ற நிறுவனங்களால் கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் மறைத்து இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த பொழுது விமானப்படையினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஹெலிகொப்டர்களும் திரும்பவும் நாட்டை விட்டு எடுத்துச்செல்லப்பட்டன.
மேற்படி இரண்டு ஹெலிக்கொப்டர்களில் "எவர்கிறீன்" எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனத்தால் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த ஹெலிக்கொப்டரை மேற்படி நிறுவனம் கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் சிங்கப்பூர் விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மற்றைய ஹெலிகொப்டரை இங்கு கொண்டு வந்திருந்த `ஹியூமெடிக்கா' எனப்படும் அரச சார்பற்ற அமைப்பு கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த ஹெலிகொப்டரை தென்னாபிரிக்காவுக்கு எடுத்துச் சென்றதாகச் சிரேஷ்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளரான கிறிஸ்வீன் (பிரித்தானியர் ஒருவர்) கட்டுநாயக்காவுக்கு கொண்டுவரப்படும் கடல்கோள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து வைக்கும் களஞ்சியசாலைக்குப் பொறுப்பாகச் செயல்பட்ட பொழுதே மேற்படி ஹெலிகொப்டர்கள்
ஸ்ரீலங்காவுக்கு எடுத்து வரப்பட்டதென்றும் பின்னர் அவற்றை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அக்களஞ்சியசாலையில் செயல்பட்ட விமானப்படையினரால் மேற்படி ஹெலிகொப்டர்கள் பாதுகாப்புத்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக விமான நிலையத்திலுள்ள நிவாரணப் பொருட்கள் வைக்கும் களஞ்சியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
<b>சிங்கள பத்திரிக்கை திவயின 10.03.2005</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

