03-14-2005, 03:11 AM
தலைவரை கடவுளுக்கு நிகரானவர் என அறிவுமதி அவர்கள் பாடலில்
எழுதியதாக சிலர் விமர்சித்தனர். அதற்கு அவர் சரியான விளக்கம் ஒன்றினை
வழங்கியிருந்தார். தமிழர்களை பகைவர்களிடமிருந்து காப்பதற்கு போராடிய ஒரு தமிழனே முருகன் என்று. வரலாற்று காலத்தில் வாழ்ந்த அந்த முருகனுக்கு நிகரானவர் எங்கள் தலைவர். ஆகவே அந்த (கடவுள்) முருகன் வேறு இந்த முருகன் வேறு. இந்த வரலாற்று முருகன் பற்றிய தடயங்கள் இருப்பதாகவும் அறிவுமதி கூற கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில்தான் தாம் அந்த பாடல் புனைந்ததாகவும் கூறியிருந்தார்.
சங்கத் தமிழை வளர்த்த சிவன், முருகன் பற்றி நாங்கள் படித்திருக்கிறோம்.
ஆனால், அவை ஆரியர் வருகைக்கு முற்பட்டதாக இருக்வேண்டும் என நினைக்கிறேன்.
ஏனென்றால், அவரது வருகையின் பின்னர்தான் தமிழர்களுடைய வரலாற்றில் ஒரு பதுக்கல் அல்லது தேங்கல் நிலை வந்திருக்கிறது. தமிழர்களுடைய வரலாற்றுத் தடையங்கள் மழுங்கடைக்கப்பட்டிருக்கிறது என்றுகூடக் கூறலாம்.
தெய்வ நம்பிக்கையென்பது, அவரவரது நம்பிக்கை. ஆரம்ப காலத்தில் நம்மவர் கூட உருவ வழிபாட்டுக்கு முன் இயற்கை வழபாட்டை கொண்டிருந்தாக வாசித்த நினைவு.
அப்படி பார்க்கும்போது, அதுவும் தெய்வ வழிபாடே.
எழுதியதாக சிலர் விமர்சித்தனர். அதற்கு அவர் சரியான விளக்கம் ஒன்றினை
வழங்கியிருந்தார். தமிழர்களை பகைவர்களிடமிருந்து காப்பதற்கு போராடிய ஒரு தமிழனே முருகன் என்று. வரலாற்று காலத்தில் வாழ்ந்த அந்த முருகனுக்கு நிகரானவர் எங்கள் தலைவர். ஆகவே அந்த (கடவுள்) முருகன் வேறு இந்த முருகன் வேறு. இந்த வரலாற்று முருகன் பற்றிய தடயங்கள் இருப்பதாகவும் அறிவுமதி கூற கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில்தான் தாம் அந்த பாடல் புனைந்ததாகவும் கூறியிருந்தார்.
சங்கத் தமிழை வளர்த்த சிவன், முருகன் பற்றி நாங்கள் படித்திருக்கிறோம்.
ஆனால், அவை ஆரியர் வருகைக்கு முற்பட்டதாக இருக்வேண்டும் என நினைக்கிறேன்.
ஏனென்றால், அவரது வருகையின் பின்னர்தான் தமிழர்களுடைய வரலாற்றில் ஒரு பதுக்கல் அல்லது தேங்கல் நிலை வந்திருக்கிறது. தமிழர்களுடைய வரலாற்றுத் தடையங்கள் மழுங்கடைக்கப்பட்டிருக்கிறது என்றுகூடக் கூறலாம்.
தெய்வ நம்பிக்கையென்பது, அவரவரது நம்பிக்கை. ஆரம்ப காலத்தில் நம்மவர் கூட உருவ வழிபாட்டுக்கு முன் இயற்கை வழபாட்டை கொண்டிருந்தாக வாசித்த நினைவு.
அப்படி பார்க்கும்போது, அதுவும் தெய்வ வழிபாடே.
:: ::
-
!
-
!

