Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்
#20
தமிழின் குறையா ? தமிழனின் குறையா ? தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ் மொழி பயன்பாடு மற்றும் வளர்ச்சிக் குறித்து பல்வேறு முக்கியமான கோரிக்கைகள் குறித்து பலரும் பல தளங்களில் விவாதித்து வருகின்றனர். மருத்துவர் இராமதாசு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் அனைவராலும் எற்புடையதல்ல என்றாலும், தமிழ் வழிக் கல்வி மற்றும் தமிழ் ஆட்சி மொழி கோரிக்கைகள் மிக முக்கியமானவை.

எப்பொழுதும் போல, இந்த அழுகிய ஊடகங்கள், இந்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, பின்னுக்குத் தள்ளி, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற நியாயமான கோரிக்கைகளின் வீரியத்தை குறைத்து விட்டார்கள்.

இதில் குறிப்பாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தப்பிறகு தான், இந்த ஊடகங்கள் தைரியம் கொண்டு தலையங்கம் எழுதுகிறார்கள். இராமதாசு மற்றும் திருமாவளவனை கேலி செய்கிறார்கள்.

இதன் நடுவில் இன்னொருக் கூத்து சட்டமன்றத்தில் அரங்கேறியது. பா.ம.க. சட்டமன்றத் தலைவர் மணீ, மிதி வண்டியின் பாகங்கள் பெயரை தமிழில் கூறுமாறு ஜெயலலிதாவால் கோரப்பட்டு, திணறி நகைப்புக்குள்ளானார். இது தமிழின் குறையா ? கலைச்சொற்களை உருவாக்காமல் இருப்பது தமிழனின் குற்றம். அப்படியே உருவாக்கினாலும் அதனை நடைமுறை சொல் வழக்கில் உபயோகிக்காமல் இருப்பது தமிழனின் குற்றம். ஆனால் இன்று சராசரி தமிழனின் மனதில் ஏற்பட்டிருக்கும் பிம்பம் என்ன ? பிற மொழிக் கலப்பில்லாது தமிழ் பேச முடியாது என்பதே. சட்டமன்றத்தில் முதல்வரின் தலைமயில் நடைப்பெற்ற நிகழ்வும் இதற்கு ஈடான பிம்பத்தையே ஏற்படுத்தியது. (இந்த வலைப்பதிவில் இருக்கும் மொழிப் பிழைகளுக்கு தமிழ் மீது நான் பழிபோடுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பிற மொழிக் கலப்பில்லாது தமிழ் பேச முடியாது என்ற எண்ணனமும்.) தன் தாய் மொழியை தானே இழிவுப்படுத்தும் நிகழ்வை தமிழனால் தான் செய்ய முடியும். பிறகென்ன, சினிமா வந்தேறிகளும் தமிழ் மொழி பற்றி நமக்கு அறிவுறுத்துவார்கள்.

தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்த திமுகவினர் வாயே திறக்கவில்லை. வாயைத் திறக்காமலேயே ஜெயலலிதா சன் தொலைக்காட்சியை சாடினார். வாய்த் திறந்திருந்தால்....

இப்படிப்பட்ட தலைமை தான் நமக்கு.

கோபப்படுவோம். சன் தொலைக்காட்சி பார்க்காமல் இருபோம். ஜெயா தொலைக்காட்சி பார்க்காமல் இருபோம். முடியுமா தமிழனால் ? ஊடகக்காரர்கள் சிரிப்பது தெளிவாகக் கேட்கிறது.



நன்றி....
தோழா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 03-07-2005, 05:41 AM
[No subject] - by Jude - 03-07-2005, 07:00 AM
[No subject] - by Nilavan - 03-09-2005, 05:39 PM
[No subject] - by Jude - 03-09-2005, 10:32 PM
[No subject] - by Mathuran - 03-10-2005, 04:59 PM
[No subject] - by Nilavan - 03-10-2005, 05:05 PM
[No subject] - by Mathuran - 03-10-2005, 06:38 PM
[No subject] - by Jude - 03-10-2005, 07:47 PM
[No subject] - by Nitharsan - 03-10-2005, 10:57 PM
[No subject] - by Mathuran - 03-10-2005, 11:19 PM
[No subject] - by Eelavan - 03-11-2005, 07:02 AM
[No subject] - by Eswar - 03-11-2005, 12:07 PM
[No subject] - by kirubans - 03-11-2005, 12:52 PM
[No subject] - by Mathuran - 03-11-2005, 02:38 PM
[No subject] - by Mathan - 03-11-2005, 03:15 PM
[No subject] - by Mathan - 03-11-2005, 03:20 PM
[No subject] - by Mathuran - 03-11-2005, 11:50 PM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 07:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)