03-12-2005, 11:15 PM
<b>என்றோ பழகியவன் நீ
என்னை விட்டுப்பிரிந்து
வருடங்கள் பல சென்றபின்
மீண்டும் கண்டேன்
மொட்டாகி காதல்
மலரானது எனக்குள் மட்டும்
எட்டாத தூரத்திற்கு - உன்னை
ஏற்றிச்சென்றது விதி
எங்கு சென்றாலும்
என்னை விட்டுப்பிரியாது
உன் நினைவு...
உனக்கென ஒரு
உறவு வந்தபின்
என்னை நான் மாற்றிக்கொண்டதாய்
எப்பவோ நினைத்துக்கொண்டேன்.
அது பொய் என
இன்று தான் புரிந்தேன்
உன்னைக்கண்டபின்
ஏக்கம் என் மனதில் தோன்றியபோது.
வாய் மொழியின்றி
பார்வையால் கதை பேசும்
கண்களும்.
பல் தெரியாமல்
பலரையும் கவர்ந்திழுக்கும்
உன் சிரிப்பும்.
தானே என்னை
உன்னை
நினைக்க வைத்தது
இன்னும் அப்படியே
அவைகள் உன்னுடன்
உற்று உற்று பாத்தேன்
உன்னில் மாற்றம் ஏதும்
உண்டா என்று.
உனக்கென ஒருத்தி
உறவாய் வந்தபின்னும்
உன் கண்கள்
ஏன் இன்னும்
என்னுடன்
கதை பேசுகிறது...??
காரணம் என்
காதல் கண்களா..??
இல்லை உனக்குள்ளும்
இன்னும் காதலா...??
உண்மை எதுவாய் இருந்தாலும்
நீ இன்னொருத்தியின் அவன்
எட்டவே நிக்கும்
என் காதல் உன்னைச்சுற்றி
என்னால் முடிந்தவரை
உனக்கு தொந்தரவின்றி...!</b>
கற்பனையாய் என்றோ கிறுக்கியது கண்டபடி நினைச்சிடாதீங்க.. ! ( :wink: )
என்னை விட்டுப்பிரிந்து
வருடங்கள் பல சென்றபின்
மீண்டும் கண்டேன்
மொட்டாகி காதல்
மலரானது எனக்குள் மட்டும்
எட்டாத தூரத்திற்கு - உன்னை
ஏற்றிச்சென்றது விதி
எங்கு சென்றாலும்
என்னை விட்டுப்பிரியாது
உன் நினைவு...
உனக்கென ஒரு
உறவு வந்தபின்
என்னை நான் மாற்றிக்கொண்டதாய்
எப்பவோ நினைத்துக்கொண்டேன்.
அது பொய் என
இன்று தான் புரிந்தேன்
உன்னைக்கண்டபின்
ஏக்கம் என் மனதில் தோன்றியபோது.
வாய் மொழியின்றி
பார்வையால் கதை பேசும்
கண்களும்.
பல் தெரியாமல்
பலரையும் கவர்ந்திழுக்கும்
உன் சிரிப்பும்.
தானே என்னை
உன்னை
நினைக்க வைத்தது
இன்னும் அப்படியே
அவைகள் உன்னுடன்
உற்று உற்று பாத்தேன்
உன்னில் மாற்றம் ஏதும்
உண்டா என்று.
உனக்கென ஒருத்தி
உறவாய் வந்தபின்னும்
உன் கண்கள்
ஏன் இன்னும்
என்னுடன்
கதை பேசுகிறது...??
காரணம் என்
காதல் கண்களா..??
இல்லை உனக்குள்ளும்
இன்னும் காதலா...??
உண்மை எதுவாய் இருந்தாலும்
நீ இன்னொருத்தியின் அவன்
எட்டவே நிக்கும்
என் காதல் உன்னைச்சுற்றி
என்னால் முடிந்தவரை
உனக்கு தொந்தரவின்றி...!</b>
கற்பனையாய் என்றோ கிறுக்கியது கண்டபடி நினைச்சிடாதீங்க.. ! ( :wink: )
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

