03-11-2005, 07:32 PM
யார் என்னதான் வியாக்கியானம் சொன்னாலும், எவ்வளவு பட்டிமன்றம் வைத்தாலும், உலகில் பெண்ணடிமை உள்ளதை மறுக்கமுடியாது. எமது சமூகத்துக்குள் மட்டும் என்று பார்த்தாலும்(புலத்திலும், தாயகத்திலும்) பெண்ணடிமை நிறையவே உள்ளது.
முக்கிய காரணம் : உழைப்பவர் ஆணாக உள்ளதுதான். பெண் ஆணில் தங்கி வாழ்வதுதான்.
பெண்கள் சுயமாக எப்போது வாழ முடிவெடுக்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடுதலை. ஆனால் ஆண்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டார்கள், ஏனெனில் சட்டங்களையும், நியமங்களையும் உருவாக்குவது முற்றுமுழுக்க ஆண்களே.
இந்தக் களத்திலேயே அதிக இடங்களில் இதனைப் பற்றி கருத்தாடியாயிற்று. எனினும் ஆணாதிக்கமும், பெண்ணடிமையும் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். இல்லாவிடில் இந்த விவாதங்கள் அர்த்தமற்றவையாகும்.
பண்பாடு, கலாச்சரம், வாழ்வுமுறை என்பன இயங்கியல் தத்துவத்திற்கு உட்பட்டன. காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும், அல்லது புதுப்பிக்கப்படும். எமது சமூகம் சிறு சிறு மாற்றங்களையும் வன்மையாக எதிர்க்கும், என்றாலும் மாற்றங்கள் வந்துதான் ஆகும்.
கடந்த 20 வருட காலத்தை எடுத்தால், பெண்களுக்கு உரிமை கூடக் கிடைத்திருக்கிறது, அதற்காக அவர்கள் ஆணுக்குரிய அனைத்துரிமைகளையும் பெற்றுவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.
கடைசியாகக் கருத்துத் தலைப்புக்குரிய எனது பதிவு.
பெண்கள் தினம், மற்றும், தாயார், தந்தையர், காதலர் தினங்கள் போன்றவை வாழ்த்துமடல் விற்பனை நிலையங்களால் போலியாக உருவாக்கப்பட்டவை. கவனித்துப் பார்த்தால் இத் தினங்கள் பண்டிகை காலங்களைத் தவிர்த்துத்தான் வருகின்றன. வாழ்த்துமடல் விற்பனைக்காக உருவாக்கப்பட்டவையே இவையென்பது எனது கருத்து.
பாடசாலைகளில் இத் தினங்களைப் பற்றி சிறுவயதிலேயே அறிமுகப் படுத்துவதால், சிறுபிராயத்திலிருந்தே வாழ்துமடல் கொடுப்பதும், பூங்கொத்து கொடுப்பதும் கட்டாயமாகிவிட்டது. எனவே வாழ்த்துமடல் விற்பனை நிலையங்கள் எல்லா மாதங்களிலும் வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முக்கிய காரணம் : உழைப்பவர் ஆணாக உள்ளதுதான். பெண் ஆணில் தங்கி வாழ்வதுதான்.
பெண்கள் சுயமாக எப்போது வாழ முடிவெடுக்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடுதலை. ஆனால் ஆண்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டார்கள், ஏனெனில் சட்டங்களையும், நியமங்களையும் உருவாக்குவது முற்றுமுழுக்க ஆண்களே.
இந்தக் களத்திலேயே அதிக இடங்களில் இதனைப் பற்றி கருத்தாடியாயிற்று. எனினும் ஆணாதிக்கமும், பெண்ணடிமையும் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். இல்லாவிடில் இந்த விவாதங்கள் அர்த்தமற்றவையாகும்.
பண்பாடு, கலாச்சரம், வாழ்வுமுறை என்பன இயங்கியல் தத்துவத்திற்கு உட்பட்டன. காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும், அல்லது புதுப்பிக்கப்படும். எமது சமூகம் சிறு சிறு மாற்றங்களையும் வன்மையாக எதிர்க்கும், என்றாலும் மாற்றங்கள் வந்துதான் ஆகும்.
கடந்த 20 வருட காலத்தை எடுத்தால், பெண்களுக்கு உரிமை கூடக் கிடைத்திருக்கிறது, அதற்காக அவர்கள் ஆணுக்குரிய அனைத்துரிமைகளையும் பெற்றுவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.
கடைசியாகக் கருத்துத் தலைப்புக்குரிய எனது பதிவு.
பெண்கள் தினம், மற்றும், தாயார், தந்தையர், காதலர் தினங்கள் போன்றவை வாழ்த்துமடல் விற்பனை நிலையங்களால் போலியாக உருவாக்கப்பட்டவை. கவனித்துப் பார்த்தால் இத் தினங்கள் பண்டிகை காலங்களைத் தவிர்த்துத்தான் வருகின்றன. வாழ்த்துமடல் விற்பனைக்காக உருவாக்கப்பட்டவையே இவையென்பது எனது கருத்து.
பாடசாலைகளில் இத் தினங்களைப் பற்றி சிறுவயதிலேயே அறிமுகப் படுத்துவதால், சிறுபிராயத்திலிருந்தே வாழ்துமடல் கொடுப்பதும், பூங்கொத்து கொடுப்பதும் கட்டாயமாகிவிட்டது. எனவே வாழ்த்துமடல் விற்பனை நிலையங்கள் எல்லா மாதங்களிலும் வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>

