03-11-2005, 07:51 AM
Quote:தங்கச்சி நீங்கள் கூறிய கருத்துகளிள் உண்மை இல்லாமல் இல்லை ஆனாலும் மேற்கூறிய இரு கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை....கொஞ்சம யோசிங்க...அம்மா சீதனம் என்டு வாங்கி தன்னுடைய கணக்கிலா? போட்டு வைக்கிறா...இல்லையே.தனது மகனும் மருமகளும் பிற்காலத்தில் நல்லா இருக்க வேண்டும் என அவர்களின் வங்கி கணக்கிலே தானே போட்டு வைக்கிறா....(பேரம் பேசி வாங்குவது தவறுதான்)
இதே அம்மா, தன் மகளுக்கு வரன் பார்க்கும் போது, தன் மகளின் மாமியாரை எப்படி வசை பாடுவா?
அது என்ன மகன், மருமகளின் எதிர்காலத்திற்கு? கட்டின மனைவியை காப்பாற்ற தெரியாத ஒரு ஆண், முதலில் தான் ஆண் என்று சொல்வதை நிறுத்த வேண்டும். இரண்டாவது இப்படிபட்ட ஒருத்தனுக்கு எதற்கு திருமணம்???
அப்படியே மகன் , மருமகளை பற்றி கவலை படுவதானால், அவ குடுக்க வேன்டியது தானே. எதற்க்காக பெண்ணை பெற்றவரை வதைக்க வேண்டும்???
Quote:மாமி மருமகள் சண்டை சும்மா FRIENDLY MATCH அடுத்த நிமிடமே சமரசமாகி விடுவாhகள் இதற்குள் எதுக்கு ஆண்களை நுளைத்து BIG MATCH ஆக்கப் பாக்கிறீங்கள்........
Friendly Match a?அப்படி சொல்லி நீங்கள் தப்பிக்க பார்க்கிறீர்களா? உண்மையில் அவர்கள் நிஜத்தில் உறவாவதில்லை. சூழ்நிலை காரணங்களால் ஒற்றுமையாய் இருப்பது போல் வாழ்கிறார்கள். ஆண்களை விட பெண்களுக்கு ரோசம், மானம், சூடு, சுறனை எல்லாம் அதிகம். வீட்டு ஆண்களின் கவுரவத்திற்காக அவர்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் நடிக்க வேண்டிய சந்தர்ப்பம். அவ்வளவே? ஆனால் இருவரின் மனதிலும் எத்த்னை ரணங்கள் இருக்கும். இதை நீங்கள் தலையிட்டு தீர்க்காவிடில் பிறகு என்ன, ஆனைYஇறவு சமர் தேவலை
Quote:பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பாரதியில் கவிதையில் சொன்ன பெண்களை விட அதிகம் வளர்ந்து விட்டார்கள் என்றே
எத்தனை சதவீதமான பெண்கள் நீங்கள் சொன்ன போல் வாழ்கிறார்கள்?
Quote:உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு நீ என்ன செய்யப் பேnகின்றாய் என்று கேட்பாள்...
அண்ணன் தான் தங்கைக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் நீங்கள் கூறிய படி பார்த்தால், தங்கைக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்றால், உழைத்து கொடுங்கள். மனைவியிடம் உங்களை விற்றா கொடுக்க வேண்டும். அதை விட ஒரு ஈன பிழைப்பு இருக்குமா உலகத்திலே??
உங்கள் தங்கைக்கு நீங்கள் அண்ணனா? அல்லது உங்கள் மனைவியின் தந்தையோ/அண்ணனோ அண்ணனா??
நீங்கள் கோவிக்க வேண்டாம். எனக்கு உங்கள் கருத்து விளங்கவில்லை. அதனால் தான் விரிவாக கேட்கிறேன். தவறாக நினைக்காமல், எனக்கு விளங்கபடுத்துங்கள்.
Quote:பல குடும்பங்கள் பிரிவதற்க்கு (கணவன்-மனைவி) பெண்களே காரணம்
இந்த காரணங்களை விளக்கி கூற முடியுமா அண்ணா?? சும்மா சண்டை பிடிக்க கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். இது மிகவும் சுவாரசியாமான ஒரு தலைப்பு. அனைவரும் இதில் தங்கள் கருத்துக்களை முன் வைக்க வேண்டும். சியாம் அண்ணா எங்கே?
Quote:புகலிடத்தில் பெண்கள் மேழைத்தேய கலாச்சாரத்தினுள் வீழ்வதையும் ஈங்கிலேயருக்கு நிகராக ஆடை அணிவதையும் புகைப்பிடிப்பதையும் ஏன....யும் பெண்களுக்கு இருக்கும் சுகந்திரத்தின் உச்சமாகவே கருதுகின்றேன்.
அப்ப நிலவன் அண்ணா, ஆணகளின் மேலைத்தேய நாட்டத்தையும் நீங்கல் வெறுக்கிறீர்கள் தானே??
Quote:நான் இந்திப் பெண்கள் பற்றி இங்கு கறிப்பிடவில்லை ஈழத்தவர்களையும் புகலிடத்தவரையும் தான் சொல்கின்றேன்.. இந்தியாவில் இன்னும் பெண்ணடிமை இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை
இந்திய பெண்களை வெளியே தெரியும் படி அடிமை படுத்துகிறார்கள். ஈழ பெண்களையும், புலத்தில் வாழும் ஈழ பெண்களையும் தெரியாமல் அடிமைப்படுத்துகிறார்கள் என்பதே என் கருத்து. கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில் எத்தனை அடிமை தனங்கள்? இல்லை என்று உங்களால் கூற முடியுமா??
கடவுள் நம்பிக்கை என்பது வேறு. மூட நம்பிக்கை என்பது வேறு. அது போல தான். ஆண்களும் பெண்களும் எமது பண்பாடை பாதுகாக்க வெண்டும். ஆனால் சில விடயங்கல் பெண்களை அடிமை படுத்த உருவாக்க பட்டன. அவற்றை களை பிடுங்க வேண்டும்.
என்னோட ஒருத்தரும் சண்டை போடாதிங்கோ. நான் நல்ல பிள்ளை. தெரியாததை உங்களிடம் கேட்கிறேண்.
[size=16][b].

