Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய
#1
நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஓன்றியத்திடம் சந்திரிகா வேண்டுகோள்

சிறீலங்கா அரசாங்கத்துடன் விரைவில் நேரடிப்பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம் பேச்சுக்களை விரைவில் ஆரம்பிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி எவ்வாறாயினும் சில விடயங்கள் தொடர்பாக நிலவும் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகள் தொடர்பான ஆணையாளர் பெனிற்றா பெரெராவை நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோது ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஒஸ்லோ பிரகடனத்திற்கு ஏற்ப இலங்கையில் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண்பதில் தற்போது காணப்படும் முரண்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய - by வியாசன் - 03-08-2005, 02:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)