03-07-2005, 11:41 AM
உலகவங்கி பிரதிநிதியை பதவி விலகுமாறு கோருகிறது ஜே.வி.பி
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மீள்கட்டுமானப் பணிகளுக்கு உலகவங்கி 600 கோடி ரூபா வழங்கப்போவதாக விடுத்த அறிக்கையை ஜே.வி.பி கடுமையாக சாடியுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை அங்கீகரிப்பது போல ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையை கொழும்புக்கான உலக வங்கியின் வதிவிடப்பிரதிநிதி பீற்றர் ஹெரால்ட் வாபஸ் பெறாவிட்டால் அவரை பதவியிலிருந்து நீக்குமாறும் ஜே.வி.பி கோரியுள்ளது.
'கொழும்புக்கான உலக வங்கியின் பிரதிநிதி நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய வகையில் அறிக்கைவிடுகிறார். தனக்கு வரையறுக்கப்பட்ட கடமைகளில் எல்லை மீறிச்செயற்படுகிறார். விடுதலைப்புலிகளி;ன் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்ற ஒரு பகுதி இந்நாட்டில் உள்ளது என்ற தோற்றப்பாட்டை காண்பிக்க முயல்கிறார். ஒரு நாட்டின் உள்விவகாரத்தல் உலக வங்கி மட்டுமல்ல எந்த ஒரு வெளித்தரப்பும் தலையிட முடியாது.
'அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை விசாரணைக்காக நீதிமன்றின் முன்னுள்ள வேளையில்ää அப்படிப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உலக வங்க பிரதிநிதி எந்த அறிக்கையையும் விடமுடியாது.
'சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்ட்ட விடுதலைப்புலிகளுடன் அபிவிருத்தி குறித்தோ நிதி விவகாரங்கள் குறித்தோ உலகவங்கி உட்பட் எந்த சர்வதேச அமைப்போ நாடோ பேச முடியாது. இந்த நியதிகளை மீறி செயற்படும் பீற்றர் ஹெரால்டின் செயற்பாடு நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டும் அபாயகரமானதாக உள்ளது"-என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
Puthinam
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மீள்கட்டுமானப் பணிகளுக்கு உலகவங்கி 600 கோடி ரூபா வழங்கப்போவதாக விடுத்த அறிக்கையை ஜே.வி.பி கடுமையாக சாடியுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை அங்கீகரிப்பது போல ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையை கொழும்புக்கான உலக வங்கியின் வதிவிடப்பிரதிநிதி பீற்றர் ஹெரால்ட் வாபஸ் பெறாவிட்டால் அவரை பதவியிலிருந்து நீக்குமாறும் ஜே.வி.பி கோரியுள்ளது.
'கொழும்புக்கான உலக வங்கியின் பிரதிநிதி நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய வகையில் அறிக்கைவிடுகிறார். தனக்கு வரையறுக்கப்பட்ட கடமைகளில் எல்லை மீறிச்செயற்படுகிறார். விடுதலைப்புலிகளி;ன் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்ற ஒரு பகுதி இந்நாட்டில் உள்ளது என்ற தோற்றப்பாட்டை காண்பிக்க முயல்கிறார். ஒரு நாட்டின் உள்விவகாரத்தல் உலக வங்கி மட்டுமல்ல எந்த ஒரு வெளித்தரப்பும் தலையிட முடியாது.
'அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை விசாரணைக்காக நீதிமன்றின் முன்னுள்ள வேளையில்ää அப்படிப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உலக வங்க பிரதிநிதி எந்த அறிக்கையையும் விடமுடியாது.
'சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்ட்ட விடுதலைப்புலிகளுடன் அபிவிருத்தி குறித்தோ நிதி விவகாரங்கள் குறித்தோ உலகவங்கி உட்பட் எந்த சர்வதேச அமைப்போ நாடோ பேச முடியாது. இந்த நியதிகளை மீறி செயற்படும் பீற்றர் ஹெரால்டின் செயற்பாடு நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டும் அபாயகரமானதாக உள்ளது"-என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

