Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை வானொலி
#2
கொதி கிழப்பல்


இலங்கை வானொலியின் செயற்பாடுகள் தற்போது மோசமடைந்து வருவது பற்றி ஈழத்தமிழரிடையே கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. இதுபற்றியும் மேலதிக சில விடயங்கள் பற்றியும் தினக்குரல் பத்திரிகையில் மறுபக்கம் பத்தியெழுதும் கோகர்ணன் எழுதியுள்ளார்.

அவர் கூறுவது இலங்கை வானொலியின் தேசிய சேவை பற்றித்தான் என்றாலும் அதன் மற்றைய கிளை ஒலிபரப்புக்கள் கூட சினமூட்டுபவையாகவே இருக்கிறன. அவர் தன்பத்தியில், குறிப்பிட்ட ஒரு கட்சியையும் சிலரையும் தாக்குவதைப்பற்றி எனக்குக் கருத்தில்லை.
அவர் வானொலி ஒலிபரப்புப் பற்றி கேட்கும் இரண்டு கேள்விகள் என்னை ஈர்த்தன.

பௌத்த மத சிந்தனை நாள்தவறாமல் தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பவேண்டுமானால் ஏன் சிங்கள, ஆங்கில ஒலிபரப்புகளிலும் நாட்டின் ஒவ்வொரு மதத்தினது நற்சிந்தனைகளும் ஒலிபரப்பக் கூடாது?

ஒவ்வொரு நாளும் இரவில் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதத்தின் மெட்டு ஒலிபரப்பாகு முன்பு சமாதானத்தை வேண்டுகின்ற ஒரு பாடல் தவறாமல் ஒலிபரப்பாகிறது. சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளில் ஏன் சமாதானம், சாந்தி, சகோதரத்துவத்தை வற்புறுத்துகிற பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை?

எனக்கும் மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலமாக உண்டு. குறிப்பாக சமாதானப் பாடல் பற்றியது. ஏதோ தமிழருக்கு மட்டுந்தான் சமாதானத்தைப் போதிக்க வேண்டும்; அவர்கள் தான் சமாதானத்தின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் அரசியற் கட்சிகளும் சில ஊடகங்களும் பொது நிறுவனங்களும் செயற்படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதும் தான் தாமதம், சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரைகள், ஊர்வலங்கள் என்று அமர்க்களப்பட்டது. எங்கு தெரியுமா? எல்லாம் வடபகுதி நோக்கி, குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி. தென்னிலங்கையிலிருந்து சமாதான ஊர்வலம் என்ற பேரில் யாழ்ப்பாணத்துக்கு சைக்கிள் விட்டினம். (இத வண்டில் விடுகிறது எண்டும் சொல்லலாம்). புத்த பிக்குமார் யாத்திரை போச்சினம். இவற்றில் மறைமுகப் பரப்புரை என்னவென்றால், தமிழரைச் சமாதான வழிக்குக் கொண்டு வருதல் என்ற பெயரில் அமைந்திருந்தன.

யாருக்கு யார் சமாதானம் பற்றிப் போதிப்பது? ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என இருந்தவை பின் அந்தச் சங்கம் இந்தச் சங்கம் என்ற பெயர்களில் யாழ்ப்பாணத்துக்கு சமாதான யாத்திரை வெளிக்கிட மனிசருக்கு கொதி வந்தது தான் மிச்சம். இவ்வளவத்துக்கும் முதல் சமாதான யாத்திரை துவங்கேக்க சீமெந்துக்கு முற்றுமுழுதா தடை எடுபடேல. உண்மையா சனத்துக்கு சரியான எரிச்சல்தான். வன்னிக்குள்ளால அவயள் போகேக்க மண்ட கொதிக்கும். நாங்கள் பேயன்விசரணெண்ட மாதிரி எங்களுக்கு நோட்டீசுகளும் தந்துகொண்டு பிரச்சாரம் செய்துகொண்டு போவினம். பிறகு அதுகள படம்பிடிச்சு எல்லா செய்தித் தாபனங்களும் போடும். இதத்தான் பேய்ப்பட்டம் கட்டிறதெண்டு சொல்லுறது. அவைக்கு தமிழீழ காவல்துறை பாதுகாப்புக் குடுத்துக்கொண்டு போயிருக்காட்டி ஊர்வலங்கள் யாழ்ப்பாணம் போய்ச்சேந்திருக்குமெண்டது ஐமிச்சம்தான்.

பிறகு யாத்திரைகள் ஓஞ்சு போச்செண்டாலும், இப்பவும் தமிழருக்கு சமாதானத்தை வலியுறுத்தல் அல்லது போதித்தல் என்ற தொனியில்தான் செயற்பாடுகள் இருக்கின்றன.


நன்றி வன்னியன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
இலங்கை வானொலி - by Mathan - 03-07-2005, 02:07 AM
[No subject] - by Mathan - 03-07-2005, 02:12 AM

Forum Jump:


Users browsing this thread: