03-05-2005, 03:01 PM
viyasan Wrote:எதுகையும் மோனையும்பரதமகளீர் கதைசொன்ன வியாசரே !
சந்தமும் கையிலிருந்தால்
கவிதையால் கறுப்பை
வெள்ளையாக்கவும்
இரவை பகலாக்கவும்
முயலுகிறார் தங்கை
அனைத்தையும் உணர்ந்தவள்
என்றினைத்து
அவசரஅவசரமாக
அள்ளிப்போட்ட கோலத்தை
அலங்கோலமாக முடித்துவள்.
வார்ததையிலே பண்பில்லை
கருத்தினிலே தெம்பில்லை
காதலன் அழைத்தவுடன்
அவசரஅவசரமாய்
படுக்கையை பகிர்ந்திட்டு
குத்துது குடையுது என்று
கோடுசென்ற சீரழிவை
என்னவென்று என் தங்கை
உரைப்பாள்.
கற்பென்றும் பண்பாடென்றும்
வாய்கிழிய பிதற்றுபவள்
மணமாகுமுன் படுக்கையிலே
ஒப்படைத்த கதையை
என்னவென்று எடுத்துரைப்பாள்?
கேட்டவுடன் கொடுப்பதற்கு
இதுஎன்ன கைமாற்றோ?
என் மூச்சுகூட முட்டாத
என்னவள் வயிற்றினிலே
கருவென்றாள்......
அடுத்தவன் விதைத்ததை
அறுவடை செய்யவா நான்
கோடென்றாள் வழக்கென்றாள்
விஞ்ஞானத்தை அறியாதவள்..............
புராணத்துக்காலத்தில் காந்தர்வ மணம்புரிந்தார் ஆடவர்கள்
பெண்டிரின் விருப்பின்றிக் கூட மணம்புரிந்த கதை அறிந்தோமய்யா
காளிதாசர் கதைமுதலாய் கண்ணதாசர் வரையும்
கண்டதெல்லாம் பொய்யாமோ ?
எதுகையும் மோனையும் எனக்குத் தூரமய்யா
உண்மையைச் சொல்ல வந்தேன்
அதற்கு உள்ளாடை விளக்கம் சொன்ன
உங்கள் மனம் புரிந்துதானே
கவியாலே கதை சொன்னேன்
கவிஞரே புரிந்திடுக.
காதலன் அழைத்தவுடன் கட்டில் போனாள் பெண்ணென்றாள்
கட்டில் வரை அழைத்தவர் உம் ஆண் மகனே தெரியாதா ?
தவறிங்கு இருபக்கம் அதை ஒரு பக்கம் போட்டுவிட்டு
தப்பிக்கும் குணமுந்தன் இனமென்று நிரூபிக்க நீரொவர் போதும் போல.
ஆடவரே வியாசரின் விவாதமுங்கள்
ஆணினத்தின் மானத்திற்கே இழுக்காய் அமைகிறது கவனியுங்கள்.
ஐய வியாசா !
கற்பென்றால் மனம் அது கெடுதல் ஈனம்.
உடலில் கற்புத் தேடும் உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
படுக்கையைப் பகிர்ந்தால்தான் காதல் வெல்லுமென்ற
காரணத்தான் யாரய்யா ? (நீங்கள் உதாரணம் சொன்ன ஆணை நோக்கிய வினாவிது)
மூச்சுக்கூட முட்டாத போது நீரேன் அஞ்சுகிறீர் ?
விதைத்தவன் அறுக்கட்டும் வீணேயேன் வலியில் துடிக்கின்றீர் ?
விஞ்ஞானம் அறியாத விளக்கமற்ற வஞ்சியைச் சந்தித்தீர்
அதுதான் விட்டோட நீனைத்தீர் அவளோ விடயம் புரியாமல்
வழக்கென்று சென்றாளோ ?????
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::

