03-04-2005, 12:00 PM
யாழில் சிங்கள இராணுவ வாகனம் மோதி மாணவி பலி: மக்கள் ஆவேசம்! பொலிசார் கண்ணீர் புகை வீச்;சு-தடியடி!!
யாழ். நகரில் இன்று காலை இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி பலியானார். இதையடுத்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்த மாணவ மாணவியர்ää மக்கள் மீது சிறீலங்கா பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகம் நடத்தினர். கூடுதலாக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பலியான மாணவி நல்லூரைச்; சேர்ந்த நாகேந்திரன் துளசிகா வயது 12 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியில் தரம் ஏழில் கல்வி பயின்று வந்தார்.
தனது வீட்டிலிருந்து காலை 8.15 மணியளவில் துவிச்;சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வைத்தியசாலை வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் மாணவியின் துவிச்;சக்கர வண்டி மீது மோதியது.
கடுங்காயங்களுக்குள்ளான மாணவி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில நிமிடங்களிலேயே மாணவி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற நகரிலுள்ள அனைத்து பாடசாலை மாணவää மாணவியர் திரண்டு படையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். படையினரின் வாகனத்தையும் அடித்துச்; சேதப்படுத்தினர். பொது மக்களும் அங்கு திரண்டு இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் சிங்களப் பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகமும் செய்தனர்.
இந்த சம்பவத்தின் போது அவ் வழியாக வந்த சிங்கள விமானப் படைக்குச்; சொந்தமான வாகனத்திற்கு தீயிடப்பட்டது.
அனைத்து பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் சிங்களப் படையினருக்கு எதிராக வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எமது செய்தியாளரின் தகவலின்படி மக்கள் போராட்டம் தொடர்கின்றது. பதட்டமும் நீடிக்கின்றது. பிரதான வீதிகள் ஊடான போக்குவரவுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டு நகரின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சுட்டபழம்
நன்றி புதினம்
யாழ். நகரில் இன்று காலை இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி பலியானார். இதையடுத்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்த மாணவ மாணவியர்ää மக்கள் மீது சிறீலங்கா பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகம் நடத்தினர். கூடுதலாக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பலியான மாணவி நல்லூரைச்; சேர்ந்த நாகேந்திரன் துளசிகா வயது 12 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியில் தரம் ஏழில் கல்வி பயின்று வந்தார்.
தனது வீட்டிலிருந்து காலை 8.15 மணியளவில் துவிச்;சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வைத்தியசாலை வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் மாணவியின் துவிச்;சக்கர வண்டி மீது மோதியது.
கடுங்காயங்களுக்குள்ளான மாணவி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில நிமிடங்களிலேயே மாணவி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற நகரிலுள்ள அனைத்து பாடசாலை மாணவää மாணவியர் திரண்டு படையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். படையினரின் வாகனத்தையும் அடித்துச்; சேதப்படுத்தினர். பொது மக்களும் அங்கு திரண்டு இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் சிங்களப் பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகமும் செய்தனர்.
இந்த சம்பவத்தின் போது அவ் வழியாக வந்த சிங்கள விமானப் படைக்குச்; சொந்தமான வாகனத்திற்கு தீயிடப்பட்டது.
அனைத்து பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் சிங்களப் படையினருக்கு எதிராக வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எமது செய்தியாளரின் தகவலின்படி மக்கள் போராட்டம் தொடர்கின்றது. பதட்டமும் நீடிக்கின்றது. பிரதான வீதிகள் ஊடான போக்குவரவுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டு நகரின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

