Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேவிபியும் ஹெல உறுமயவும் - இனவாதம்
#4
`நோர்வே எதிரிநாடு' ஹெல உறுமய அறிவிக்கும்

இலங்கையின் எதிரி நாடாக தாங்கள் நோர்வேயை அறிவிக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை மீறி வருகையில், நோர்வே அரசு அதனைப் பார்த்துக் கொண்டு பேசாமலிருப்பதாகவும், ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.

நோர்வேயின் இந்த மௌனத்தை எதிர்த்தே, தாங்கள் அந்த நாட்டை இலங்கையின் எதிரிநாடாக அறிவிக்கவுள்ளதாகவும் ஹெல உறுமய கூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின், பாராளுமன்ற குழுத்தலைவர் வண. அத்துரலியே ரத்ன தேரர் இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கிளாலியில் படைவீரர் ஒருவரை சுட்டுக்கொன்றும் மற்றொரு படைவீரரை சுட்டுக் காயப்படுத்தியும் விடுதலைப்புலிகள், போர்நிறுத்த உடன்பாட்டின் 3 ஆவது ஆண்டு, நிறைவை கடைப்பிடித்துள்ளனர்.

இந்த மூன்றாண்டு காலத்தில் புலிகள் 600 இலங்கையரை கொன்றுள்ளனர். 5000 தடவைகள் உடன்பாட்டை மீறியுள்ளனர். சிறுவர்களை படைகளுக்குச் சேர்த்து அவர்களின் கைகளில் ஆயுதங்களையும் கொடுத்துள்ளனர்.

மாற்றுக் கருத்துள்ள தமிழ் கட்சி உறுப்பினர்களை கொன்றுவருவதுடன் வேறு வகையான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், நோர்வே அரசோ, போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ, இவற்றுக்கெதிராக எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேநேரம், நோர்வே, பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கிறது.

கௌசல்யனின் கொலை தொடர்பாக நோர்வே வெளியிட்ட அறிக்கை அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இது எமது நாட்டின் ஒற்றுமைக்கு நோர்வே செய்யும் துரோகமாகும்.

இதனால், இலங்கையின் எதிரி நாடாக நோர்வேயை அறிவிக்க தாங்கள் தயங்கப் போவதில்லையெனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-03-2005, 12:57 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)