03-03-2005, 12:50 PM
பெண் போராளிகளைச் சுட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு
அம்பாறை தம்பிலுவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் கல்லாறைச் சேர்ந்த பிரதீபன் என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு கொண்டு வருவதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறிய பொலிஸார், இவர் தொடர்பாக நேற்று மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பிரதீபனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் உத்தரவிட்டார்.
தம்பிலுவில் மயானத்திற்கு முன்பாக திங்கட்கிழமை மாலை இவரே பெண் போராளிகள் மூவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அதேநேரம், மறுநாள் காலை இவர் கல்முனை ஆஸ்பத்திரி பக்கம் நோட்டமிட வந்த போது புலிகளால் அடையாளம் காணப்பட்டார்.
புலிகள் தன்னை பிடித்து விடுவார்களென்ற அச்சத்தில் இவர் உடனடியாக அப்பகுதியில் நின்ற விஷேட அதிரடிப் படையினரிடம் அடைக்கலம் பெற்றார்.
பின்னர் இவர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தெரிந்ததே.
தினக்குரல்
அம்பாறை தம்பிலுவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் கல்லாறைச் சேர்ந்த பிரதீபன் என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு கொண்டு வருவதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறிய பொலிஸார், இவர் தொடர்பாக நேற்று மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பிரதீபனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் உத்தரவிட்டார்.
தம்பிலுவில் மயானத்திற்கு முன்பாக திங்கட்கிழமை மாலை இவரே பெண் போராளிகள் மூவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அதேநேரம், மறுநாள் காலை இவர் கல்முனை ஆஸ்பத்திரி பக்கம் நோட்டமிட வந்த போது புலிகளால் அடையாளம் காணப்பட்டார்.
புலிகள் தன்னை பிடித்து விடுவார்களென்ற அச்சத்தில் இவர் உடனடியாக அப்பகுதியில் நின்ற விஷேட அதிரடிப் படையினரிடம் அடைக்கலம் பெற்றார்.
பின்னர் இவர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தெரிந்ததே.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

