03-01-2005, 09:08 PM
பெண் போராளிகள் மீதான சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது
கல்முனை நிருபர் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 22:37 ஈழம்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் பாராளிகள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரதீபன் எனப்படும் ஜோண்சன் ஜெயகாந்தன் (வயது 28) என தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளினால் தெரிவிக்கப்பட்ட தகவலொன்றின் பேரில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி சுனாமி அகதி முகாமில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது இந்நபர் மேலதிக விசாரணைக்காக திருக்கோவில் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட இவர் சில காலம் ராசிக் குழுவில் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.
Puthinam
கல்முனை நிருபர் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 22:37 ஈழம்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் பாராளிகள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரதீபன் எனப்படும் ஜோண்சன் ஜெயகாந்தன் (வயது 28) என தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளினால் தெரிவிக்கப்பட்ட தகவலொன்றின் பேரில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி சுனாமி அகதி முகாமில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது இந்நபர் மேலதிக விசாரணைக்காக திருக்கோவில் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட இவர் சில காலம் ராசிக் குழுவில் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.
Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

