Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் ஆளும் கூட்டணி மெஜாரிட்டி இழப்பு
#4
ஜனாதிபதியிடம் மசிந்தது இ.தொ.கா.!

அமைச்சுப் பதவிகளைத் தொடர முடிவு
தமக்கு வழங்கப்பட்ட ஓர் அமைச்சர் பத விகளையும் ஒரு பிரதி அமைச்சர் பதவியையும் தூக்கி எறிவதாகக் கடந்த சில நாள்களாக ஆர்ப் பாட்டம் பண்ணிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நேற்று ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவைச் சந்தித்துப் பேசியதை அடுத்து அடங்கிப் போனது.
தாம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளில் தொடரவும், ஜனா திபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசுக் கான தமது நிபந்தனையற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கவும் இ.தொ.கா. முடிவு செய்ததாக அறிய வந்தது.
இ.தொ.கா. தலைவர்கள் கடந்த சில நாள் களாகப் பண்ணிய ஆர்ப்பாட்டங்கள், எடுப்புக் கள், வழங்கிய பேட்டிகளைப் பார்த்தோரும், அமைச்சர் ,பிரதி அமைச்சர் பதவிகளை இரா ஜினாமாச் செய்துவிட்டனர் என இ.தொ.கா அறிவித்ததை அறிந்தவர்கள் எல்லோரும் இத்தோடு அக்கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு எதி ரணியில் போய் அமர்ந்துவிடும் என எதிர் பார்த்தனர்.
இதை மேலும் உறுதிப்படுத்துவது போல நாடாளுமன்றத்தில் தமக்கு எதிர்க்கட்சி வரிசை யில் ஆசனங்களை ஒதுக்கித்தருமாறு இ.தொ.கா. சார்பில் அமைச்சராக இருக்கும் முத்து சிவ லிங்கமும், பிரதி அமைச்சராக இருக்கும் எம்.எஸ். செல்லச்சாமியும் சபாநாயகரிடம் கோரியிருந் தனர்.
ஆனால், அரசிலிருந்து விலகிவிடுவோம் என்ற இ.தொ.காவினரின் மிரட்டல் பாச்சா ஜனாதிபதி குமாரதுங்கவிடம் பலிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
அதனால் அமைச்சுப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தமது வழமையான நிலைப் பாட்டை நிலைநிறுத்துவதற்காக, வேறுவழி யின்றி ஜனாதிபதி குமாரதுங்க முன்னால் அடங் கிப்போக- மசிந்துபோக - அவர்கள் தீர்மானித்த னர் என்றும் -
தாம் அரசில் தொடர்வதை மக்களுக்கு நியா யப்படுத்திக்கூறும் காரணங்களைத் தயார் செய்வதில் நேற்று மாலை இ.தொ.கா. தலை வர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர் என் றும்-
விடயமறிந்த வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.
இ.தொ.கா.பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு மிடையே நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற மூன்று மணிநேர சந்திப்பினையடுத்தே அரசுக்கு வழங்கிவரும் ஆதரவைத் தொடர்ந்து நீடித்துக் கொள்வதற்கு இ.தொ.கா. தீர்மானித்தது.
நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையி லான இ.தொ.காவின் எட்டு எம்.பிக்களும் அடங் கிய குழு ஜனாதிபதியை சந்தித்தபோது மலை யகப் பகுதிகளில் நிலவும் பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மலையகப் பகுதிகளில் பொலீஸாரின் அத்து மீறல்கள் உட்பட பல பிரச்சினைகளை இ.தொ.கா. சுட்டிக்காட்டியபோது, அவற்றிற்குத் தீர்வு பெற் றுத்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். இதனையடுத்தே அரசுக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதற்கு இ.தொ.கா. தீர் மானித்தது - என்று அக்கட்சி வட்டாரங்கள் மஒப் புக்குச் சப்பாணிடுக் காரணங்கள் கூறின. அரசில் இணைவதற்குக் கடந்த ஆண்டு தாங்கள் முடிவுசெய்தபோது, தாங்கள் முன்வைத்த 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பார் என ஜனாதிபதி நேற்று தங் களிடம் உறுதியளித்தார் என்றும் இ.தொ.காவி னர் இப்போது கூறுகின்றனர்.
நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மங்கள சமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்­ ஆகியோ ரும் கலந்துகொண்டனர்.
நேற்றைய சந்திப்பின்போது ஜனாதிபதி காட்டிய கடும்போக்குக் காரணமாக, இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு காத் திரமான அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க வேண்டும் என்ற கதையையே இ.தொ.கா. தரப்பு எடுக்கவில்லை என்றும் -தெரிவிக்கப்பட் டது.

நன்றி உதயன்.
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Nellaiyan - 03-01-2005, 04:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)