02-28-2005, 06:50 PM
மட்டு.-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் உட்பட மூவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்
கல்முனை நிருபர் திங்கட்கிழமை 28 பெப்ரவரி 2005 21:18 ஈழம்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் போராளிகள் இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று மாலை 6.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி; தம்பட்டையில் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏனைய போராளிகள் சசிமதி மற்றும் அகநிலா என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மட்டக்களப்பு மாவட்டம் பன்சேனையில் நடைபெற்ற தியாகி திலீபன் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்பு திருக்கோவிலுள்ள அரசியல் துறை பணிமனைக்கு இம் மூவரும் தனியார் ஆட்டோ ஒன்றில்; திரும்பிக் கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மோட்டார் சைக்கிளுடன் காணப்பட்ட நபரொருவர் இவர்கள் பயணம் செய்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்திவிட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
puthunam
கல்முனை நிருபர் திங்கட்கிழமை 28 பெப்ரவரி 2005 21:18 ஈழம்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் போராளிகள் இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று மாலை 6.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி; தம்பட்டையில் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏனைய போராளிகள் சசிமதி மற்றும் அகநிலா என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மட்டக்களப்பு மாவட்டம் பன்சேனையில் நடைபெற்ற தியாகி திலீபன் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்பு திருக்கோவிலுள்ள அரசியல் துறை பணிமனைக்கு இம் மூவரும் தனியார் ஆட்டோ ஒன்றில்; திரும்பிக் கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மோட்டார் சைக்கிளுடன் காணப்பட்ட நபரொருவர் இவர்கள் பயணம் செய்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்திவிட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
puthunam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

