Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாட்டு பற்றாளர்
#14
நாட்டுப்பற்றாளர் வேலுப்பிள்ளை கந்தையா ஏரம்பு ஐயா அவர்கள் காலமானார்

கல்வி மற்றும் சமூகப் பணிகளில் பல அமைப்புக்களுடன் இணைந்து தனது அளப்பெரும் சேவையினை ஆற்றியவரும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவருமான மதிப்பிற்குரிய வேலுப்பிள்ளை கந்தையா ஏரம்பு அவர்கள் காலமானார்.

இந்த மண்ணின் மக்களையும் இம்மண்ணையும் நன்கு நேசித்த சிறந்த பண்பாளரும், எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்ற உயர்போக்கும், பிறப்பெடுத்த மனிதர்கள் அனைவரும் விடுதலை வாழ்வை அடையப்பெற்றவர்களாகத் திகழவேண்டும் என்ற நன்நோக்கையும் கொண்டு உயர்ந்த மனிதராக விளங்கிய மதிப்புக்குரிய வேலுப்பிள்ளை கந்தையா ஏரம்பு அவர்கள் 23.02.2005 அன்று காலமாகிவிட்டார். அவரது சாவு அவரை அறிந்த அனைவருக்கும் பெரும் சோகத்தை ஊட்டியுள்ளது.
இவர், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான தந்தை செல்வநாயகம் அவர்களின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முக்கியமாகத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சத்தியாக்கிரகங்களிலும் திருகோணமலை பாதயாத்திரையிலும் பங்குபற்றியவர். அத்துடன் கல்வி மற்றும் சமூகப் பணிகளிலும் பல அமைப்புக்களுடன் இணைந்து தனது அளப்பெரும் சேவையினை ஆற்றியவர்.

இம்மண்ணின் போராட்ட விடுதலை காலத்திலும் அவரின் பங்காற்றுதலும் உழைப்பும் தொய்வின்றி உயர்வாகவே இருந்தன. 1984ம் அண்டு அவரது மகன் பாலச்சந்திரன் எமது அமைப்பில் இணைந்து இறுதிவரை உறுதியுடன் நின்று போராடி இந்திய இராணுவத்துடன் நடந்த யுத்தத்தில் வீரச்சாவடைந்தார். திரு.க.ஏரம்பு அவர்கள் அவரது மகனான கப்டன் அருணின் (பாலச்சந்திரன்) இழப்பின் பின்பும் சளைக்காது தனது போராட்டத்துக்கான பங்களிப்பை ஆற்றிவந்தார்.

தமிழீழ மண்ணில் இந்திய இராணுவம் எங்கும் பரவி நின்ற காலத்திலும் அவர் தம் சொந்த மண்ணைவிட்டு வெளியேறாது இந்திய இராணுவத்தின் பலவித தொல்லைப்படுத்தலுக்கு ஆளானார். அந்த நிலையிலும் இறுக்கமான தனது மனப்பாங்கில் இருந்து மாறாது உறுதியுடன் போராட்டம் பற்றிய இரகசியங்களை வெளிவிடாது காத்து தமிழீழ விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு வரலாற்றுப் பங்காற்றினார்.

வரலாற்றுக் குறிப்பில் இடம்பெற்றுள்ள யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் அவர் வன்னிக்கு வந்தார். வன்னி வாழ்வின் போதும் அவர் கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் பின்னடிக்காது செயலாற்றினார். வன்னியில் பலவிதமான இடர்களை சந்தித்த காலத்திலும் அவர் உறுதியுடனேயே விளங்கினார். அவர் மக்களை மண்ணை நேசித்தவர். விடுதலையை நேசித்தவர். உறுதியான கொள்கையும் மக்களின் குறை அறிந்து சேவை செய்யும் மனப்பாங்கும் கொண்ட அவரின் இழப்பு பேரிழப்பாகும்.

திருவாளர் வே.க.ஏரம்பு அவர்களின் பிரிவினால் ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் குடும்பத்தினரின் சோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாமும் கலந்துகொள்கிறோம். இம்மண்ணின் மனிதராக நின்று மகத்தான பணிகளைச் செய்த அவருக்கு நாட்டுப்பற்றாளர் என்னும் உயர்வினை வழங்கி அவரது பெருமையில் நாமும் இணைந்துகொள்கிறோம்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 02-24-2005, 03:55 PM
[No subject] - by tamilini - 02-24-2005, 06:06 PM
[No subject] - by Malalai - 02-24-2005, 06:08 PM
[No subject] - by poo - 02-24-2005, 06:11 PM
[No subject] - by shanmuhi - 02-24-2005, 08:48 PM
[No subject] - by kavithan - 02-25-2005, 12:12 AM
[No subject] - by Vaanampaadi - 02-25-2005, 01:38 PM
[No subject] - by sinnappu - 02-26-2005, 01:13 AM
[No subject] - by UZI - 02-26-2005, 01:26 AM
[No subject] - by Mathuran - 02-26-2005, 02:14 AM
[No subject] - by Niththila - 02-27-2005, 06:00 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 07:34 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 07:36 PM
[No subject] - by மகேசன் - 02-27-2005, 11:48 PM
[No subject] - by தூயா - 02-28-2005, 04:16 AM
[No subject] - by seelan - 02-28-2005, 01:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)