02-27-2005, 06:33 PM
இடையூறு விளைவிக்கும் படையினர்!
போர்நடவடிக்கைகள் மூலமோ அல்லது அண்மையில் ஏற்ப்பட்ட ஆழிவுப்பேரலை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் என்றாலும், மீள்கட்டுமானம் என்றாலும் அவற்றைத் துரிதகதியில் முன்னெடுத்துவருகின்ற பெருமை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையே சாரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்ப்பாடுகளை தமிழ்மக்களும், சகோதர இன மக்களும், பொது அமைப்புக்களும் பாரட்டி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். இவ் அமைப்பின் மீது ஸ்ரீவங்கா படையினரும், அவர்கள் சார்ந்த அடிவருடிகளும் திட்டமிட்டு பல்வேறு அத்து மீறல்களையும், நெருக்கடிகளையும் கொடுத்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துரிதகதியில் மீட்புர் பணிகளும், நிவராண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன அல்லது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றால் அது ஒரு ஒழுங்கான திட்டமிடலில் தமிழர் புனர்வாழ்வு கழகம் மேற்கொண்டு வருகின்ற அளப்பரிய பணியாகவே காணப்படுகின்றது.
யாழ்குடநாட்டிலும், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறான புனர்வாழ்வுப் பணிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்ற போது அவற்றை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினர் இவற்றைத் தடுத்து நிறுத்துவதும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் செயற்ப்பாடுகளை முறியடித்துவரும் செயற்ப்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்நறனர். இவற்றுக்கு மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதுவும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்காலிக குடியிருப்பு நிலங்களை தெரிவு செய்வதில் இருந்து மக்களை தற்காலிமாக குடியமர்த்துவதிலும், அவர்களுக்கான மருத்துவ வசதி, கல்வி வசதி அனைத்தையும் நன்கு திட்டமிட்டு உரியமுறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இராணுவ ஆக்கிரப்புப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகப்பணியாளர்களை தடுத்து நிறுத்துதல், அவர்கள் மீது அடாவடித்தனங்களை மேற்கொள்ளுதல், அவர்கள் மூலமாக எடுத்துச் செல்கின்ற நிவாரணப்பொருட்களை பறிமுதல் செய்து படையினர் தாம் மக்களுக்கு விநியோகித்து மக்கள் மனங்களை வெல்ல முனைதல், மீட்புப் பணியாயர்களையும் தாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
குறிப்பாக அம்பாறையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்ததுடன் மக்கள் மனங்களையும் வென்ற நிலையில் ஸ்ரீலங்கா படையின் சிறப்பு அதிரடிப் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. அதாவது திருக்கோயில் பகுதியில் செயலணிச் செயலகம் திறக்கப்பட்டு நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சகலவற்றையும் படையினர் மறித்து கூட்டு விசேட அதிரடிப்படையினர் உதவிகளை மேற்கொண்டு கிராம அலுவலர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலம் மக்கள் மனங்களை வெல்லுவதற்கு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைவிட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் உள்ள ஒரு கட்டமைப்பு மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவு இக்கட்டமைப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இவ்வமைப்பு துரித கதியில் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுவதுடன் மீள் குடியமர்வுக்கான வெடிபொருள் அகற்றப்பட்ட பிரதேசங்களை உறுதி செய்து மக்களிடம் கையளிக்கின்றது.
ஆனால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுபட்ட பகுதயில், அவற்றுக்கான வரைபடங்கள் (வெடிபொருடகள்) படையினர் கையில் இருந்தும் அந்தப்பகுதியில் எந்தப்பணியும் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை. அப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் சென்று பணிகளை மேற்கொள்ள அனுமதியினை வழங்க படையினர் மறுக்கின்றனர்.
நேரடியாகவே ஸ்ரீலங்கா இராணுவக்கட்டுப்பட்டுக்குள் உள்ள மக்கள் மனங்களை வெல்லும் ஒரு முனைப்பான செயற்பாடுகளில் ஸ்ரீலங்காப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பையே சந்தித்து வருகின்றனர். அதாவது யாழ்ப்பாணத்தில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டமை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் மீது படையினர் அடிக்கடி கெடுபிடிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் மக்களிடம் பெரும் எதிர்ப்புக்களை படையினர் சந்தித்து வருகின்றனர். இதை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிடுகின்ற பொது அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை பாரட்டியுள்ளன இதனைப்பொறுக்கமுடியாத இனவாத சக்திகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளையும் உதவிநடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற உதவிகளை தடுத்து நிறுத்தியும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
சு.பாஸ்கரன்/Eelanaatham
போர்நடவடிக்கைகள் மூலமோ அல்லது அண்மையில் ஏற்ப்பட்ட ஆழிவுப்பேரலை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் என்றாலும், மீள்கட்டுமானம் என்றாலும் அவற்றைத் துரிதகதியில் முன்னெடுத்துவருகின்ற பெருமை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையே சாரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்ப்பாடுகளை தமிழ்மக்களும், சகோதர இன மக்களும், பொது அமைப்புக்களும் பாரட்டி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். இவ் அமைப்பின் மீது ஸ்ரீவங்கா படையினரும், அவர்கள் சார்ந்த அடிவருடிகளும் திட்டமிட்டு பல்வேறு அத்து மீறல்களையும், நெருக்கடிகளையும் கொடுத்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துரிதகதியில் மீட்புர் பணிகளும், நிவராண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன அல்லது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றால் அது ஒரு ஒழுங்கான திட்டமிடலில் தமிழர் புனர்வாழ்வு கழகம் மேற்கொண்டு வருகின்ற அளப்பரிய பணியாகவே காணப்படுகின்றது.
யாழ்குடநாட்டிலும், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறான புனர்வாழ்வுப் பணிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்ற போது அவற்றை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினர் இவற்றைத் தடுத்து நிறுத்துவதும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் செயற்ப்பாடுகளை முறியடித்துவரும் செயற்ப்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்நறனர். இவற்றுக்கு மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதுவும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்காலிக குடியிருப்பு நிலங்களை தெரிவு செய்வதில் இருந்து மக்களை தற்காலிமாக குடியமர்த்துவதிலும், அவர்களுக்கான மருத்துவ வசதி, கல்வி வசதி அனைத்தையும் நன்கு திட்டமிட்டு உரியமுறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இராணுவ ஆக்கிரப்புப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகப்பணியாளர்களை தடுத்து நிறுத்துதல், அவர்கள் மீது அடாவடித்தனங்களை மேற்கொள்ளுதல், அவர்கள் மூலமாக எடுத்துச் செல்கின்ற நிவாரணப்பொருட்களை பறிமுதல் செய்து படையினர் தாம் மக்களுக்கு விநியோகித்து மக்கள் மனங்களை வெல்ல முனைதல், மீட்புப் பணியாயர்களையும் தாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
குறிப்பாக அம்பாறையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்ததுடன் மக்கள் மனங்களையும் வென்ற நிலையில் ஸ்ரீலங்கா படையின் சிறப்பு அதிரடிப் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. அதாவது திருக்கோயில் பகுதியில் செயலணிச் செயலகம் திறக்கப்பட்டு நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சகலவற்றையும் படையினர் மறித்து கூட்டு விசேட அதிரடிப்படையினர் உதவிகளை மேற்கொண்டு கிராம அலுவலர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலம் மக்கள் மனங்களை வெல்லுவதற்கு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைவிட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் உள்ள ஒரு கட்டமைப்பு மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவு இக்கட்டமைப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இவ்வமைப்பு துரித கதியில் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுவதுடன் மீள் குடியமர்வுக்கான வெடிபொருள் அகற்றப்பட்ட பிரதேசங்களை உறுதி செய்து மக்களிடம் கையளிக்கின்றது.
ஆனால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுபட்ட பகுதயில், அவற்றுக்கான வரைபடங்கள் (வெடிபொருடகள்) படையினர் கையில் இருந்தும் அந்தப்பகுதியில் எந்தப்பணியும் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை. அப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் சென்று பணிகளை மேற்கொள்ள அனுமதியினை வழங்க படையினர் மறுக்கின்றனர்.
நேரடியாகவே ஸ்ரீலங்கா இராணுவக்கட்டுப்பட்டுக்குள் உள்ள மக்கள் மனங்களை வெல்லும் ஒரு முனைப்பான செயற்பாடுகளில் ஸ்ரீலங்காப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பையே சந்தித்து வருகின்றனர். அதாவது யாழ்ப்பாணத்தில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டமை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் மீது படையினர் அடிக்கடி கெடுபிடிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் மக்களிடம் பெரும் எதிர்ப்புக்களை படையினர் சந்தித்து வருகின்றனர். இதை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிடுகின்ற பொது அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை பாரட்டியுள்ளன இதனைப்பொறுக்கமுடியாத இனவாத சக்திகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளையும் உதவிநடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற உதவிகளை தடுத்து நிறுத்தியும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
சு.பாஸ்கரன்/Eelanaatham
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

