02-27-2005, 09:20 AM
ஜே.வி.பி. எம்.பிக்களின் உயிருக்கு
விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்!
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் அச்சு றுத்தல் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
- இப்படித் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பி. அமைப்பின் ஊடகப் பேச்சாளர் பண்டார.
கடந்த வாரம் ஜே.வி.பியினர் கூட்டிய செய்தியாளர் மாநாடு ஒன்றுக்குச் சென்றிருந்த ஊடக வியலாளர்களும் படப்பிடிப்பாளர்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களது கருவிகளும் அடையாள அட்டைகளும் சோதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஜே.வி.பியின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான பண்டார என்பவரிடம் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர் கூறியதாவது:-
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளால் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக செய்தியா ளர்களைச் சோதனையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இதனைப் பெரிதுபடுத்தி விமர்சிக்கத் தேவையில்லை - என்று பதிலளித்தார்.
உதயன்
விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்!
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் அச்சு றுத்தல் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
- இப்படித் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பி. அமைப்பின் ஊடகப் பேச்சாளர் பண்டார.
கடந்த வாரம் ஜே.வி.பியினர் கூட்டிய செய்தியாளர் மாநாடு ஒன்றுக்குச் சென்றிருந்த ஊடக வியலாளர்களும் படப்பிடிப்பாளர்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களது கருவிகளும் அடையாள அட்டைகளும் சோதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஜே.வி.பியின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான பண்டார என்பவரிடம் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர் கூறியதாவது:-
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளால் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக செய்தியா ளர்களைச் சோதனையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இதனைப் பெரிதுபடுத்தி விமர்சிக்கத் தேவையில்லை - என்று பதிலளித்தார்.
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

