Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேசாப் பொருள் - பால் உறவுகள்
#6
நான் சில காலம் தி.க.வில் இருந்த காரணத்தால் எங்களின் கோசம் சில "அந்த" மாதிரி இருக்கும். அதுபற்றி விரிவாகக் கூற தற்போது ஆத்திகனான என் மனம் இடம் கொடுக்கவில்லை! காரணம் கடவுள் இல்லை என்று சொல்லி மெய்ப்பிக்க நாங்கள் தந்த விளக்கங்கள்!

உணர்ச்சிக்கு ஏதாவது வடிகால் போதும்... அது எந்த வழியாக இருந்தால் என்ன என்று நினைப்பதாலேயே இதுபோன்ற ஓரிணப்புணர்ச்சி, பொருந்தாக் காமம், பின்வழி புணர்தல், சுய உதவி.. இப்படிப் பல.

சுய உதவியில் எய்ட்ஸ் போன்ற தொந்தரவுகளும் பிள்ளைப்பேறு போன்ற தொந்தரவுகளும் உறை போன்ற கூடுதல் செலவினங்களும் இல்லாததால் வீடுகளில் தனியறைகளில் தங்கும் இளைஞிகளும் விடுதிகளில் தங்கும் இளைஞிகளும் அதையே நாடுகின்றனர். பெரும்பாலும் காதலர் இல்லாதோரே சுய உதவியை நாடுகின்றனர்! ஆண்கள் என்றாலும் மேற்கூறியவைதான். செலவும் மிச்சம். காதலியைக் கூட்டிக்கொண்டு தெருத்தெருவாய் அலைய வேண்டியதில்லை! பணப்பையின் எடை குறையாது!

சின்ன வயதில் எனக்கு கண்ணில் ஏதோ வலி. என் அப்பா கண் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். எனக்கு 4 அல்லது 5 வயதிருக்கலாம். மருத்துவர் சோதித்துவிட்டு தாதியைக் கூப்பிட்டு ஊசி போடச் சொன்னார். தாதியும் வந்தார். மாத்திரை என்றால் எனக்கு பிடிக்கும். ஊசி என்றால் காத தூரம் ஓடுவேன். என்னை இடது புறம் ஒரு தாதி பிடித்துக் கொள்ள வலது புறம் இன்னொரு தாதி பிடித்துக் கொள்ள என் அப்பா கால்சட்டையை உருவி "சூத்துல போடுங்க" என்றார்! தாதியும் "ஆமாம்.. இது வலி அதிகமுள்ளது. அங்கதான் போடவேண்டும்!" என்றார்! நான் கத்தினேன்.. கதறினேன்.. கேட்பார் யாருமில்லை!!! இருந்த கோபத்தில் தாதியைப் பார்த்து சொன்னேன்," ஏண்டி என் சூத்த பாக்க உனக்கு அவ்ளோ ஆசையா?!!!"

அதன் பின் ஏன் கேட்கிறீர்கள்..? சாதாரணமாய் போட வந்த அவர் நன்றாக அழுந்தப் போட என்னால் 3நாள் இடுப்பை நகர்த்தமுடியவில்லை!!!

எங்கள் தெருவில் ஒரு பாய் இருந்தார். காலையில் லுங்கியோடு வாசலில் நின்று பராக்குப் பார்த்து பல் விளக்கும் என்னிடம் வந்து, "என்ன மாப்ளே...எப்ப கப்பலுக்கு போறீங்க... " என்று ஆரம்பித்து என் இடக்கையைப் பிடித்துக் கொள்வார்! பின் என் கையை ஆட்டியவாறே அங்கு தொட்டுப் பார்ப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம். எதேச்சை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அடிக்கடி அவர் செய்யவே ஒருநாள் துர்வாசரானேன்! அதுக்கப்றம் ஏன் தொட்றார்???

அதேபோல பேருந்தில் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஏறி உட்கார்ந்தேன். நல்ல தூக்கம். கண்ணயர்ந்துவிட்டேன். திடீரென கூச்சமாக இருக்க தீடீரென விழித்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் கை என் குழாய்ச் சட்டையின் மேல்! அவ்வளவாகக் கூட்டமில்லை. படுவேகம் பேருந்து. வந்ததே கோபம் எனக்கு! அடச்சீ...நீயும் ஒரு மனுசனா என்று சொல்லி திட்டி விட்டு அடுத்த இருக்கை மாறிச் சென்றேன்.

சிங்கை வந்த புதிதில் சில காலம் இரவு வேலை. நான் கருமமே கண்ணாயிருக்க அவ்வப்போது எனக்கு உதவிகள் செய்ய வயதான சீனரை எனக்கு உதவிக்கு அமர்த்தி இருந்தனர். நள்ளிரவு.. கண்கள் சுழற்ற அவரிடம் சொல்லி விட்டு மேஜைமீதே கண்ணயர்ந்தேன். அப்போதும் அதேபோன்றதொரு கூச்சம். எழுந்து பார்த்தால் அவரின் கை!!! அப்போதே எழுந்து வெளியே வந்துவிட்டேன். மறுநாளே பிரச்னையை மேல்மட்டம் சொல்லி... அதை ஏன் கேட்கிறீர்கள்!

சாதாரணமாகப் பெண்கள் பேசத் தயங்கும் விசயத்தை எழுதிய உங்களின் துணிவே துணிவு.

Posted by: மூர்த்தி at February 26, 2005 12:09 PM

எங்களுடைய கலாச்சாரத்தில் பாலியல் என்பது எப்பொழுதுமே வெளிப்படையாக பேசப்படாத பொருளாகவே இருந்து வந்துள்ளது எங்களுடைய உடம்பு பற்றிய விசயங்களும் கூட அப்படித்தான் இத்தகைய மௌனமும் நிலவுகிற நிலைமையில் தான் எமது சமூகம் உள்ளது எடுத்துப் பாருங்கள் Kamasuthira புராதன தென்னிந்திய கோவில்களில் ஒருபால் உறவு சிற்ப வேலைப்பாடுகள் இடம் பெற்றுள்ளதை காண்கிறோம். குறிப்பாக ஜாமி பாரம்பரியத்தில் வரும் தேவாம்சம் மிக்க ஒருபால் உறவுகள் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஓரபால் உறவுகள் என்பது பெண்,ஆண் உறவுகளுக்கான இயல்பான மாற்று என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

Posted by: ranji at February 26, 2005 10:36 PM
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-27-2005, 02:33 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:37 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:40 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:44 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:46 AM
[No subject] - by shiyam - 02-27-2005, 03:08 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 04:23 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 04:28 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 11:42 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 06:51 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 08:59 PM
[No subject] - by tamilini - 02-27-2005, 09:17 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 09:28 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 09:36 PM
[No subject] - by tamilini - 02-27-2005, 09:41 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 10:40 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 03:15 AM
[No subject] - by shobana - 03-01-2005, 07:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)