02-27-2005, 02:44 AM
மதி, சுமதி, கார்த்திக் இது கேலி செய்யும் நோக்கிலோ அல்லது பிறரின் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைக்கும் முயற்சியோ இல்லை. காதில் விழுந்த சங்கதி " ஒருவருக்கு ஒருவர்" என்று மாணவிகள் ஈடுப்படுவது அதிகமாகி விட்டது என்பது. கார்த்திக் சொல்லியதுப் போல, ஏதோ சுகமில்லாமலா அப்படி செய்கிறார்கள்? மீடியாக்கள் ஆளுகை மற்றும் உலகமயமாக்கலின் இன்னொரு வினையா, இப்படியும் உண்டு என்று இதுவரை தெரியாதவர்களுக்கும் தெரிய வைப்பது? திரும்ப சொல்கிறேன், நான் சொல்ல வந்தது "பயர்" படம் போன்ற படங்கள், ரெண்டும் கெட்டான் வயதில் செய்துப் பார்க்கலாமே என்று சொல்லி தருவதுப் போல இருக்கிறது.
உஷா
Posted by: ramachandran usha at February 25, 2005 04:36 PM
நான் அப்படி நிச்சயமாக நினைக்கவில்லை. இது சும்மா செய்து பார்க்கலாம் எனும் விஷயம் அல்ல. உணர்வு ரீதியானது. நிச்சயமாக உங்களாலோ என்னாலோ முடியாது எனும் போது எங்கள் மனம் எப்போதாவது பரீட்சித்துப் பார்ப்போம் என்று நினைக்குமா?
Posted by: Karupi at February 25, 2005 04:47 PM
...நாட்டின் படுக்கையறைகளிலிருந்து அரசாங்கத்தை அகற்ற விரும்புகிறேன் (get the government out of the nation's bedrooms)'' இது கனேடியப் பிரதமர்களில் ஒருவரான ரூடோவின் பிரபலமான வாசகம்.
உடம்பு மற்றும் உடலுறவு கொள்வது இனப்பெருக்கத்தின் நிமித்தம் என்பது நம்பப்படுவதால்தான் 'ஒரு பெண்ணை இன்னொரு பெண் தொடுவதும்' 'உடலில் கழிவுக்கு என்று ஒதுக்கப்பட்ட துளைகளை வேறு பிரயோகமும் செய்யலாம்?' என்பதெல்லாம் 'அதால் என்ன பிரஜோயனம்' என கேட்க வைக்கிறது. நாங்கள் பிரயோயனத்துக்காகத்தான் எல்லாக் காரியங்களையும் செய்கிறோம் என்பது இல்லையே. அப்படி இருக்க, மற்றவர்களில், 'பரிதாபப்படவும்''அனுதாபப்படவும்' நாங்கள் யார்? எனது கறுப்புத் தோழியொருத்தியின் மகன், -துாய கிறிஸ்தவன்- '..அவர்களை எல்லாம் வரிசையில் வைத்து சுடவேண்டும்' என்றான் (வயது 16). கருணையும் நேசமும் போதிக்கிறதாய் சொல்கிற மதங்கள் ஒருவனை இப்படித்தான் ஆக்குமென்றால் யார் மனப்பிறழ்வு உடையவர்கள்? இன்னொரு மனிதரின் உறவில் மூக்குநுழைக்கிற எங்கட values ஐ அவர்களில் போட விரும்புகிற நாங்கள் 'மனப்பிறழ்வு' அற்றவர்களா?
நீங்கள் குறிப்பிடுகிற எழுத்துக்களில் அம் மனிதர்கள் மனப்பிறழ்வு உடையவர்களாய் பட்டார்களெனில் அது எழுதியவர்களுடைய பார்வை, அல்லது உங்களுடைய நம்பிக்ககைளின் வழியான பார்வையில் உள்ள பாரபட்சம்.
உடல் தினவு எடுத்து 'ஒழுங்கான' (ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லாத) மனிதர்கள் செய்யிற வேலைகளிற்கும், இயற்கையின் பொருட்டு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. 'துணைக்கு துரோகம்' செய்வது நியாயமற்றதுதான். அதேநேரம் சீகரட் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு எல்லோரும் சீகரட் குடிப்பார்கள் என்பதுபோல 'எல்லோரும்' இப்படி ஆகிவிடுவார்கள் என்பது... உண்மையில்லை. அப்படி 'fashion' இற்குச் செய்பவர்கள்தான் நீங்கள் சொன்ன 'அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.'
ஆனால் அந்தத் துரோகம் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் என்பதைவிட வேறு பெண்களுடன் என்பதே மிகவும் சாத்தியப்படுகிற ஒன்று. ஆகவே அந்த குற்றச்சாட்டும் பயமும் அர்த்தமில்லாதது.
உங்களுடைய கருத்து இங்குள்ள வெள்ளை.கறுப்பர்கள்.தமிழர்களைவிட மாறக்கூடியதன்மையுடையதாய் உள்ளதாகவே நினைக்கிறேன்.
Posted by: பொடிச்சி
உஷா
Posted by: ramachandran usha at February 25, 2005 04:36 PM
நான் அப்படி நிச்சயமாக நினைக்கவில்லை. இது சும்மா செய்து பார்க்கலாம் எனும் விஷயம் அல்ல. உணர்வு ரீதியானது. நிச்சயமாக உங்களாலோ என்னாலோ முடியாது எனும் போது எங்கள் மனம் எப்போதாவது பரீட்சித்துப் பார்ப்போம் என்று நினைக்குமா?
Posted by: Karupi at February 25, 2005 04:47 PM
...நாட்டின் படுக்கையறைகளிலிருந்து அரசாங்கத்தை அகற்ற விரும்புகிறேன் (get the government out of the nation's bedrooms)'' இது கனேடியப் பிரதமர்களில் ஒருவரான ரூடோவின் பிரபலமான வாசகம்.
உடம்பு மற்றும் உடலுறவு கொள்வது இனப்பெருக்கத்தின் நிமித்தம் என்பது நம்பப்படுவதால்தான் 'ஒரு பெண்ணை இன்னொரு பெண் தொடுவதும்' 'உடலில் கழிவுக்கு என்று ஒதுக்கப்பட்ட துளைகளை வேறு பிரயோகமும் செய்யலாம்?' என்பதெல்லாம் 'அதால் என்ன பிரஜோயனம்' என கேட்க வைக்கிறது. நாங்கள் பிரயோயனத்துக்காகத்தான் எல்லாக் காரியங்களையும் செய்கிறோம் என்பது இல்லையே. அப்படி இருக்க, மற்றவர்களில், 'பரிதாபப்படவும்''அனுதாபப்படவும்' நாங்கள் யார்? எனது கறுப்புத் தோழியொருத்தியின் மகன், -துாய கிறிஸ்தவன்- '..அவர்களை எல்லாம் வரிசையில் வைத்து சுடவேண்டும்' என்றான் (வயது 16). கருணையும் நேசமும் போதிக்கிறதாய் சொல்கிற மதங்கள் ஒருவனை இப்படித்தான் ஆக்குமென்றால் யார் மனப்பிறழ்வு உடையவர்கள்? இன்னொரு மனிதரின் உறவில் மூக்குநுழைக்கிற எங்கட values ஐ அவர்களில் போட விரும்புகிற நாங்கள் 'மனப்பிறழ்வு' அற்றவர்களா?
நீங்கள் குறிப்பிடுகிற எழுத்துக்களில் அம் மனிதர்கள் மனப்பிறழ்வு உடையவர்களாய் பட்டார்களெனில் அது எழுதியவர்களுடைய பார்வை, அல்லது உங்களுடைய நம்பிக்ககைளின் வழியான பார்வையில் உள்ள பாரபட்சம்.
உடல் தினவு எடுத்து 'ஒழுங்கான' (ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லாத) மனிதர்கள் செய்யிற வேலைகளிற்கும், இயற்கையின் பொருட்டு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. 'துணைக்கு துரோகம்' செய்வது நியாயமற்றதுதான். அதேநேரம் சீகரட் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு எல்லோரும் சீகரட் குடிப்பார்கள் என்பதுபோல 'எல்லோரும்' இப்படி ஆகிவிடுவார்கள் என்பது... உண்மையில்லை. அப்படி 'fashion' இற்குச் செய்பவர்கள்தான் நீங்கள் சொன்ன 'அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.'
ஆனால் அந்தத் துரோகம் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் என்பதைவிட வேறு பெண்களுடன் என்பதே மிகவும் சாத்தியப்படுகிற ஒன்று. ஆகவே அந்த குற்றச்சாட்டும் பயமும் அர்த்தமில்லாதது.
உங்களுடைய கருத்து இங்குள்ள வெள்ளை.கறுப்பர்கள்.தமிழர்களைவிட மாறக்கூடியதன்மையுடையதாய் உள்ளதாகவே நினைக்கிறேன்.
Posted by: பொடிச்சி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

