02-27-2005, 02:37 AM
உஷா நீங்கள் என்தான் சொல்ல வருகின்றீர்கள். இரு பெண்கள் உறவு கொள்வதோ. இல்லை இரு ஆண்கள் உறவு கொள்வதோ அவர்கள் வேண்டுமென்று செய்யும் ஒன்றல்ல. எனது அலுவலகத்தில் இது பற்றிய விவாதம் ஏற்பட்டது. எல்லோருமே வெள்ளையர்கள். அவர்கள் பார்வை எனக்கு அதிர்சியாக இருந்தது. காரணம் எல்லோருமே ஓரினச்சேர்க்கையை கேலி செய்யும் மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். நான் ஒரு தமிழ் பெண் அவர்களை எதிர்த்து நின்று வாதிட்டேன். கடைசியாக என்னிடம் கேட்டார்கள் நீ ஒரு பெண்ணுடன் உறவு கொள்வாயா என்று. எனக்குச் சிரிப்பாக இருந்தது. இதன் தொடக்க நிலையைக் கூட அறிந்து கொள்ளாத முட்டாள்களாக இருக்கின்றார்களே என்று. நான் சொன்னேன் எனக்கு அப்படி ஒன்றை நினைத்துக் கூடப்பார்க்க முடியாமல் இருக்கின்றது. காரணம் எனது உடல் மனம் இரண்டும் ஆண்கள் பால் ஈர்ப்புக் கொண்டதாக இருக்கிறது. அதே போல்தான் அவர்களுக்கும். அவர்கள் தனிப்பட்ட உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். மதிக்காவிட்டாலும் பரவாயில்லை கேலியாகவது செய்யாமல் இருக்கலாம்.
தாங்கள் கூறியது போல் பெண்ணும் பெண்ணும் உறவு கொண்டுவிட்டுப் பின்னர் ஒன்றும் நடக்காதது போல் திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்று. எமது கலாச்சாரம் எங்கே ஒருவரின் தனிப்பட்ட உணர்விற்கு மதிப்புக் கொடுத்தது. எத்தனை பெண்கள் தமக்கு விருப்பமில்லாத ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு கடமைக்காக அவர்களுடன் உறவு கொண்டு பிள்ளைப் பெறுவதில்லையா? அதுபோல்த் தான் இவர்களும் சமூகம் குடும்பப்பெயர் என்று தம் விருப்பை விடுத்து வாழ்ந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.
தாங்கள் இலங்கை எழுத்தாளராக சியாம் செல்லத்துரையின் Funny boy படித்திருந்தீர்கள் என்றால் தெரியும் அவர் மனஉளைச்சல் பற்றி.
நான் சில வருடங்களுக்கு முன்பு ஆதலினால் நாம் எனும் பெயரில் இரு பெண்களுக்கான உறவு பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். அதனை தற்போது குறும்படமாக சில மாற்றங்களைச் செய்து எடுத்துக்கொண்டிருக்கின்றேன். இப்படியான உறவு இயற்கையாகவோ இல்லாவிட்டால் சந்தர்ப்ப வசமாகவோ வரலாம் என்பது நான் தேடல் மூலம் அறிந்து கொண்டது. தொடர்ந்து ஆண்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு ஆண்கள் மேலான வெறுப்புää பயம் இப்படியான உறவுகளை ஏற்படுத்த வாய்பிருப்பதாகத் தெரிகின்றது. இதற்கு நாம் என்ன செய்யலாம்?
சுமதி ரூபன்
தாங்கள் கூறியது போல் பெண்ணும் பெண்ணும் உறவு கொண்டுவிட்டுப் பின்னர் ஒன்றும் நடக்காதது போல் திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்று. எமது கலாச்சாரம் எங்கே ஒருவரின் தனிப்பட்ட உணர்விற்கு மதிப்புக் கொடுத்தது. எத்தனை பெண்கள் தமக்கு விருப்பமில்லாத ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு கடமைக்காக அவர்களுடன் உறவு கொண்டு பிள்ளைப் பெறுவதில்லையா? அதுபோல்த் தான் இவர்களும் சமூகம் குடும்பப்பெயர் என்று தம் விருப்பை விடுத்து வாழ்ந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.
தாங்கள் இலங்கை எழுத்தாளராக சியாம் செல்லத்துரையின் Funny boy படித்திருந்தீர்கள் என்றால் தெரியும் அவர் மனஉளைச்சல் பற்றி.
நான் சில வருடங்களுக்கு முன்பு ஆதலினால் நாம் எனும் பெயரில் இரு பெண்களுக்கான உறவு பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். அதனை தற்போது குறும்படமாக சில மாற்றங்களைச் செய்து எடுத்துக்கொண்டிருக்கின்றேன். இப்படியான உறவு இயற்கையாகவோ இல்லாவிட்டால் சந்தர்ப்ப வசமாகவோ வரலாம் என்பது நான் தேடல் மூலம் அறிந்து கொண்டது. தொடர்ந்து ஆண்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு ஆண்கள் மேலான வெறுப்புää பயம் இப்படியான உறவுகளை ஏற்படுத்த வாய்பிருப்பதாகத் தெரிகின்றது. இதற்கு நாம் என்ன செய்யலாம்?
சுமதி ரூபன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

