02-27-2005, 02:31 AM
பேசாப் பொருள் - பால் உறவுகள்
ஹோமோ செக்ஷ¥வல்/ லெஸ்பியன் ?????
பெண்ணாய் மாற விரும்பும் ஆண்களின் கதைகள்- சு.சமுத்திரத்தின் வாடாமல்லி, குஷ்வந்த் சிங்கின் " நியூ டெல்லி" மற்றும் கி.ராவின் ஒரு சிறுகதையைப் படிக்கும் பொழுது, மனதில் பரிதாப உணர்வுதான் ஏற்பட்டது. வட இந்தியாவில் வசித்தப்பொழுது,இத்தகைய ஆண்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், ரிக்ஷாவில் கும்பலாய் வந்து பாடி விட்டு காசு வாங்கிப் போவார்கள். ஏதோ பிறப்பு மற்றும் ஹார்மோன் கோளாறு என்று இந்த அர்த்தநாரீஸ்வரர்களை சொல்வார்கள். சின்ன பையன்கள் கொஞ்சம் இடுப்பை ஆட்டி நடந்தால், கீச்சு குரல், மீசை இல்லாத முகம் என்றால் ஒன்பதாம் எண் பட்டம் சூட்டப்படும். இவர்களைப் பற்றி பழைய நாகரீகங்களில், கல்வெட்டுகளில் சான்று உண்டு என்று சொல்லப்பட்டது.
ஆனால் கா.நா.சு வின் "பசித்த மானுடம்" மற்றும் சு. சமுத்திரம் அவர்களின் ஒரு மாத நாவல், ஆதவனின் சிறுகதையொன்றிலும் (அ) காமம் அருவருப்பையே உண்டாக்கின. உடலில் கழிவுக்கு என்று ஒதுக்கப்பட்ட துளைகளை வேறு பிரயோகமும் செய்யலாம் என்று இலக்கியம் என்று சொல்ல கூடிய கதைகளில் கண்ணில் விழும் இத்தகைய கதா பாத்திரங்கள் மனபிறழ்வு மனிதர்களாகவே காட்சியளிக்கிறார்கள். ஆனால் தமிழில் லெஸ்பியன்களைப் பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை.
என்னுடன் படித்த மாணவி நாங்கள் பார்க்க, பார்க்க ஆணாய் மாறி வந்தாள். முகத்தில் ரோமமும், குரல் கனத்தும் போக ஆரம்பித்தது. ஆபரேஷன் செய்துக் கொண்டு முழு ஆணாய் மாறி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தவள், கூட படிக்கும் இன்னொரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததும், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டாள். அவளால் ஒரு ஆணை மணந்து குடும்பம் நடத்த முடியாது என்பது பார்க்கும் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடலாம்.
சிறு வயதில் ஆண் பிள்ளைகள், பெண் போல் நடந்துக் கொண்டால் யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதே ஒரு பெண் குழந்தை ஆணைப் போல நடந்துக்கொண்டால், பெற்றவர்களுக்கு பெருமை பிடிப்படாது.
அடுத்து ஒரு நாள், சயின்ஸ் லேப்பில் டெஸ்ட் டூயூப்கள் காணவில்லை என்று லாப் அசிஸ்டெண்ட் ஆயா வந்து கூப்பாடுப் போட ஆரம்பித்தாள். கடைசியில் அது யார் எடுத்தார்கள் என்று கண்டும் பிடிக்கப்பட்டது. காரணம் ..... ஆயா கத்தியது, அப்பொழுது புரியவில்லை. பிறகு அவைகளை " வேகமாய் ஒருவருக்கு ஒருவர் செலுத்திக் கொள்வார்கள்" என்று சொல்லப்பட்டது. இந்த பெண்கள், லெஸ்பியனா? எனக்கு தெரியவில்லை. "ப்யர்" என்று ஒரு படம் வந்ததே அதைப் போலதானே இதுவும். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டார்கள். இன்றைய நாட்களில், ஆணுடன் பழகுவதால் ஏற்படும் பின் விளைவுகள் இல்லை என்பதால், மாணவிகளில் இத்தகைய செயல் பாடுகள் அதிகரித்து வருகின்றன என்று ஆசிரியை ஒருவர் கூறினார்.
இயற்கையின் குளறுபடியாய் ஆணின் உடல், பெண் மனது அல்லது பெண்ணின் உடலில் ஆண் மனமாய் இருப்பதால், அவர்கள் செய்வது தவறில்லை. தினத்தந்தி, ஜூவி போன்ற பத்திரிக்கையில் இவர்களைப் பற்றிய கட்டுரைகள் வரும். ஆனால் அங்கும் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும்தான் காட்சியளிப்பார். ஓரே குறை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லுவார்கள்.
ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இவை சமூக சீரழிவு என்று குற்றம் சாட்டுகிறேன். அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.
ஆனால் படித்தவர்கள், சமூகத்தில் அறிவாளிகள் என்று புகழப்படுபவர்கள் இத்தகைய சீரழிகளை தவறில்லை என்று சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது. சரி என்று சொல்பவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் தவறு என்று எடுத்து சொல்வார்களா அல்லது அப்படி வாழ்வது ரொம்ப நல்லது என்று ஊர் அறிய ஊக்குவிப்பார்களா?
இங்கு நான் ஆணாய் மாறிய பெண்ணையோ அல்லது பெண்ணாய் மாறிய ஆணையோ சொல்லவில்லை என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.
ராமச்சந்திரன் உஷா
ஹோமோ செக்ஷ¥வல்/ லெஸ்பியன் ?????
பெண்ணாய் மாற விரும்பும் ஆண்களின் கதைகள்- சு.சமுத்திரத்தின் வாடாமல்லி, குஷ்வந்த் சிங்கின் " நியூ டெல்லி" மற்றும் கி.ராவின் ஒரு சிறுகதையைப் படிக்கும் பொழுது, மனதில் பரிதாப உணர்வுதான் ஏற்பட்டது. வட இந்தியாவில் வசித்தப்பொழுது,இத்தகைய ஆண்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், ரிக்ஷாவில் கும்பலாய் வந்து பாடி விட்டு காசு வாங்கிப் போவார்கள். ஏதோ பிறப்பு மற்றும் ஹார்மோன் கோளாறு என்று இந்த அர்த்தநாரீஸ்வரர்களை சொல்வார்கள். சின்ன பையன்கள் கொஞ்சம் இடுப்பை ஆட்டி நடந்தால், கீச்சு குரல், மீசை இல்லாத முகம் என்றால் ஒன்பதாம் எண் பட்டம் சூட்டப்படும். இவர்களைப் பற்றி பழைய நாகரீகங்களில், கல்வெட்டுகளில் சான்று உண்டு என்று சொல்லப்பட்டது.
ஆனால் கா.நா.சு வின் "பசித்த மானுடம்" மற்றும் சு. சமுத்திரம் அவர்களின் ஒரு மாத நாவல், ஆதவனின் சிறுகதையொன்றிலும் (அ) காமம் அருவருப்பையே உண்டாக்கின. உடலில் கழிவுக்கு என்று ஒதுக்கப்பட்ட துளைகளை வேறு பிரயோகமும் செய்யலாம் என்று இலக்கியம் என்று சொல்ல கூடிய கதைகளில் கண்ணில் விழும் இத்தகைய கதா பாத்திரங்கள் மனபிறழ்வு மனிதர்களாகவே காட்சியளிக்கிறார்கள். ஆனால் தமிழில் லெஸ்பியன்களைப் பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை.
என்னுடன் படித்த மாணவி நாங்கள் பார்க்க, பார்க்க ஆணாய் மாறி வந்தாள். முகத்தில் ரோமமும், குரல் கனத்தும் போக ஆரம்பித்தது. ஆபரேஷன் செய்துக் கொண்டு முழு ஆணாய் மாறி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தவள், கூட படிக்கும் இன்னொரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததும், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டாள். அவளால் ஒரு ஆணை மணந்து குடும்பம் நடத்த முடியாது என்பது பார்க்கும் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடலாம்.
சிறு வயதில் ஆண் பிள்ளைகள், பெண் போல் நடந்துக் கொண்டால் யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதே ஒரு பெண் குழந்தை ஆணைப் போல நடந்துக்கொண்டால், பெற்றவர்களுக்கு பெருமை பிடிப்படாது.
அடுத்து ஒரு நாள், சயின்ஸ் லேப்பில் டெஸ்ட் டூயூப்கள் காணவில்லை என்று லாப் அசிஸ்டெண்ட் ஆயா வந்து கூப்பாடுப் போட ஆரம்பித்தாள். கடைசியில் அது யார் எடுத்தார்கள் என்று கண்டும் பிடிக்கப்பட்டது. காரணம் ..... ஆயா கத்தியது, அப்பொழுது புரியவில்லை. பிறகு அவைகளை " வேகமாய் ஒருவருக்கு ஒருவர் செலுத்திக் கொள்வார்கள்" என்று சொல்லப்பட்டது. இந்த பெண்கள், லெஸ்பியனா? எனக்கு தெரியவில்லை. "ப்யர்" என்று ஒரு படம் வந்ததே அதைப் போலதானே இதுவும். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டார்கள். இன்றைய நாட்களில், ஆணுடன் பழகுவதால் ஏற்படும் பின் விளைவுகள் இல்லை என்பதால், மாணவிகளில் இத்தகைய செயல் பாடுகள் அதிகரித்து வருகின்றன என்று ஆசிரியை ஒருவர் கூறினார்.
இயற்கையின் குளறுபடியாய் ஆணின் உடல், பெண் மனது அல்லது பெண்ணின் உடலில் ஆண் மனமாய் இருப்பதால், அவர்கள் செய்வது தவறில்லை. தினத்தந்தி, ஜூவி போன்ற பத்திரிக்கையில் இவர்களைப் பற்றிய கட்டுரைகள் வரும். ஆனால் அங்கும் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும்தான் காட்சியளிப்பார். ஓரே குறை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லுவார்கள்.
ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இவை சமூக சீரழிவு என்று குற்றம் சாட்டுகிறேன். அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.
ஆனால் படித்தவர்கள், சமூகத்தில் அறிவாளிகள் என்று புகழப்படுபவர்கள் இத்தகைய சீரழிகளை தவறில்லை என்று சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது. சரி என்று சொல்பவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் தவறு என்று எடுத்து சொல்வார்களா அல்லது அப்படி வாழ்வது ரொம்ப நல்லது என்று ஊர் அறிய ஊக்குவிப்பார்களா?
இங்கு நான் ஆணாய் மாறிய பெண்ணையோ அல்லது பெண்ணாய் மாறிய ஆணையோ சொல்லவில்லை என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.
ராமச்சந்திரன் உஷா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

