02-26-2005, 11:09 AM
அமைச்சுப் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்ட
இ.தொ.காங்கிரஸ் இப்போது
இரண்டும்கெட்டான் நிலையில்!
எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாகிவிட்டன. உத்தரவாதங்கள் எல்லாம் உதாசீனப்படுத்தப் பட்டுவிட்டன. பெரும் நம்பிக்கைக் கனவுகளு டன் அரசுக்கு முட்டுக்கொடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று அரசுக்குள் செல்லாக்காசாக்கப்பட்டு அந்தரிக்கின்றது. வீறாப்புடன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து அரசைவிட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டு அது இரண்டும் கெட்டான் நிலை யில் அது அந்தரித்துக்கொண்டிருக்கிறது.
மலையகத்தில் சிறுவர் பூங்கா ஒன்று திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சைதான் இப்போது பூதா கரமாகி நிற்கின்றது என்று கூறப்பட்டாலும் தனிப்பட்ட ஒரு சிறுவர் பூங்கா விவகாரம் மட் டும்தான் இ.தொ.காவின் இப்போதைய இழுபறி முடிவுக்கான காரணம் அல்ல என்றும் கூறப்படு கின்றது. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எந்தவிதமான அமைச்சுப் பொறுப்பு களையும் வழங்கமுடியாது என ஜனாதிபதி அறிவித்தபின், ஜனாதிபதியைச் சந்திக்கப் பல முறை வாய்ப்புக்கேட்டும் அதை வழங்க ஜனாதிபதி சந்திரிகா மறுத்துவந்துள்ளார் எனக் கூறப் படுகின்றது.
கடைசியாக அமைச்சர் முத்துசிவலிங்க மும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி யும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்யும் கடிதங்களை ஒப்படைத்த பின்னரும்கூட ஜனா திபதி இ.தொ.காவினரைச் சந்திக்க மறுத்து விட்டார் எனக் கூறப்பட்டது. இ.தொ.கா. வட் டாரத்தில் இது பெரும் அதிருப்தியையும் ஏமாற் றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அறியமுடிந்தது.
இ.தொ.கா. எம்பிக்கள் நேற்று சபாநாயக ரைச் சந்தித்து இ.தொ.கா. சார்பில் இதுவரை அமைச்சர்களாக இருந்த இருவருக்கும் நாடாளு மன்றில் எதிர்க்கட்சி வரிசையில் ஆசனம் ஏற் பாடுசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர். எனி னும், அவர்கள் சபைக்குள் பிரவேசிக்கவில்லை.
அரசுக்கு முட்டுக்கொடுக்க இ.தொ.கா. முன் வந்ததற்குப் பிரதியுபகாரமாக அமைச்சர் சி.பி. ரத்னாயக்காவிடமிருந்து தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு பறிக்கப்பட்டு இ.தொ.காவின் முத்துசிவலிங் கத்திடம் ஒப்படைக்கப்பட்டது தெரிந்ததே.
தாம் அமைச்சரானவுடன் பொலீஸ் சேவை யில் ஆயிரம் பேருக்கும் ஆசிரியர்களாக 3,500 பேருக்கும் அரச முன்னரங்க அலுவலகங் களில் 2,500 பேருக்குமாக மலையக இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றார் முத்துசிவலிங்கம்.
அதை அமைச்சரவை அங்கீகரித்துவிட்டது என்றும் அமைச்சர் முத்துசிவலிங்கம் பின்பு பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இன்று வரை ஒரு நியமனம் கூட வழங்கப்படவில்லை.
இதுவிடயத்தில் ஜனாதிபதி இ.தொ.கா.வை இழத்தடித்துக்கொண்டே இருக்கின்றார் என்கின் றன விடயமறிந்த வட்டாரங்கள்.
தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், நோர்வூட் விளையாட்டரங்கு, ரம்பொடை கலாசார நிலையம் என்பனவற்றை தொண்ட மான் பவுண்டேசனுடன் உரித்துடையதாக்கித் தாரைவார்க்கவேண்டும் என்ற இ.தொ.கா. கோரிக்கையும் அமைச்சரவையினால் நிராகரிக்கப் பட்டுவிட்டது.
பொதுமக்களுக்கு முகம் கொடுக்க முடியா மலே இ.தொ.கா. அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்தது என்றும் கூறப்படுகின்றது.
இ.தொ.காவின் இராஜினாமா தொடர்பாக எதிர்க்கட்சி வட்டாரங்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, மஒரு ஸ்திரமான நிலைப்பாட்டைக் கொண்டிராத இவர்களை எப்படி நம்புவது? இவர்களை எதிர்க்கட்சிக் கூட்டமைப்பில் மீண் டும் இணைத்து செயற்படுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லைடு என்று கூறப்பட்டது.
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து விட்ட இ.தொ.கா. இப்போது இரண்டும்கெட் டான் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக இ.தொ.கா. தலை வருடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் தொடர்பு கிடைக்கவில்லை. ஏனைய மூத்த உறுப்பினர்கள் உதயனுக்குக் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
உதயன்
இ.தொ.காங்கிரஸ் இப்போது
இரண்டும்கெட்டான் நிலையில்!
எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாகிவிட்டன. உத்தரவாதங்கள் எல்லாம் உதாசீனப்படுத்தப் பட்டுவிட்டன. பெரும் நம்பிக்கைக் கனவுகளு டன் அரசுக்கு முட்டுக்கொடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று அரசுக்குள் செல்லாக்காசாக்கப்பட்டு அந்தரிக்கின்றது. வீறாப்புடன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து அரசைவிட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டு அது இரண்டும் கெட்டான் நிலை யில் அது அந்தரித்துக்கொண்டிருக்கிறது.
மலையகத்தில் சிறுவர் பூங்கா ஒன்று திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சைதான் இப்போது பூதா கரமாகி நிற்கின்றது என்று கூறப்பட்டாலும் தனிப்பட்ட ஒரு சிறுவர் பூங்கா விவகாரம் மட் டும்தான் இ.தொ.காவின் இப்போதைய இழுபறி முடிவுக்கான காரணம் அல்ல என்றும் கூறப்படு கின்றது. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எந்தவிதமான அமைச்சுப் பொறுப்பு களையும் வழங்கமுடியாது என ஜனாதிபதி அறிவித்தபின், ஜனாதிபதியைச் சந்திக்கப் பல முறை வாய்ப்புக்கேட்டும் அதை வழங்க ஜனாதிபதி சந்திரிகா மறுத்துவந்துள்ளார் எனக் கூறப் படுகின்றது.
கடைசியாக அமைச்சர் முத்துசிவலிங்க மும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி யும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்யும் கடிதங்களை ஒப்படைத்த பின்னரும்கூட ஜனா திபதி இ.தொ.காவினரைச் சந்திக்க மறுத்து விட்டார் எனக் கூறப்பட்டது. இ.தொ.கா. வட் டாரத்தில் இது பெரும் அதிருப்தியையும் ஏமாற் றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அறியமுடிந்தது.
இ.தொ.கா. எம்பிக்கள் நேற்று சபாநாயக ரைச் சந்தித்து இ.தொ.கா. சார்பில் இதுவரை அமைச்சர்களாக இருந்த இருவருக்கும் நாடாளு மன்றில் எதிர்க்கட்சி வரிசையில் ஆசனம் ஏற் பாடுசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர். எனி னும், அவர்கள் சபைக்குள் பிரவேசிக்கவில்லை.
அரசுக்கு முட்டுக்கொடுக்க இ.தொ.கா. முன் வந்ததற்குப் பிரதியுபகாரமாக அமைச்சர் சி.பி. ரத்னாயக்காவிடமிருந்து தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு பறிக்கப்பட்டு இ.தொ.காவின் முத்துசிவலிங் கத்திடம் ஒப்படைக்கப்பட்டது தெரிந்ததே.
தாம் அமைச்சரானவுடன் பொலீஸ் சேவை யில் ஆயிரம் பேருக்கும் ஆசிரியர்களாக 3,500 பேருக்கும் அரச முன்னரங்க அலுவலகங் களில் 2,500 பேருக்குமாக மலையக இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றார் முத்துசிவலிங்கம்.
அதை அமைச்சரவை அங்கீகரித்துவிட்டது என்றும் அமைச்சர் முத்துசிவலிங்கம் பின்பு பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இன்று வரை ஒரு நியமனம் கூட வழங்கப்படவில்லை.
இதுவிடயத்தில் ஜனாதிபதி இ.தொ.கா.வை இழத்தடித்துக்கொண்டே இருக்கின்றார் என்கின் றன விடயமறிந்த வட்டாரங்கள்.
தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், நோர்வூட் விளையாட்டரங்கு, ரம்பொடை கலாசார நிலையம் என்பனவற்றை தொண்ட மான் பவுண்டேசனுடன் உரித்துடையதாக்கித் தாரைவார்க்கவேண்டும் என்ற இ.தொ.கா. கோரிக்கையும் அமைச்சரவையினால் நிராகரிக்கப் பட்டுவிட்டது.
பொதுமக்களுக்கு முகம் கொடுக்க முடியா மலே இ.தொ.கா. அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்தது என்றும் கூறப்படுகின்றது.
இ.தொ.காவின் இராஜினாமா தொடர்பாக எதிர்க்கட்சி வட்டாரங்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, மஒரு ஸ்திரமான நிலைப்பாட்டைக் கொண்டிராத இவர்களை எப்படி நம்புவது? இவர்களை எதிர்க்கட்சிக் கூட்டமைப்பில் மீண் டும் இணைத்து செயற்படுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லைடு என்று கூறப்பட்டது.
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து விட்ட இ.தொ.கா. இப்போது இரண்டும்கெட் டான் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக இ.தொ.கா. தலை வருடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் தொடர்பு கிடைக்கவில்லை. ஏனைய மூத்த உறுப்பினர்கள் உதயனுக்குக் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

