Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்தான் தமிழருக்கு முகவரி!
#7
அக்கினி புத்திரன் அவர்களின் கட்டுரைகள் படித்தாலே நமக்கெல்லாம் பாரம் குறைந்ததனை போன்ற ஓர் உணர்வு. தான் கூற வரும் கருத்துக்கள், செண்றடைய வேண்டியவர்களை சிந்திக்கதூண்டும் வகையில் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் கொடுத்துள்ளார்.

அவர் குறிப்பிடுவதனை போன்று சிறு பிள்ளை தனமாக கேள்விகேட்கும் சில அறிவிலிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர் சொல்வதனை போன்று தமிழனின் வரலாற்றை தவறாக புரிந்தவர்கலும். தமிழன் வரலாற்றை தெரிந்துகொள்ளாத தமிழனும். தமிழனின் வரலாற்றை தெரிந்துகொள்ள மறுக்கும் மனிதனும். தமிழனின் வரலாற்றை தெரிந்தும் அதனை திரிபு படுத்த முயலும் தமிழின துரோகிகளும். இன்றய நம் தமிழன்னை வருந்துவதற்கு காரணம் என சொன்னால் மிகை அன்று.

சில காலங்களுக்கு முன் நோர்வேஜிய வானொலி ஒன்றில். ஒரு கருத்துரயாடல் நோர்வேஜிய மொழியில் கேட்க நேர்ந்தது. அவர்கள் கருத்தாடிய விடயம் இதுதான். இந்தியா போன்ற நாடுகளில். தங்கள் மொழியில் ஆன்கிலம் கலந்து பேசுகின்றார்களே. இதனால் வரும் காலங்களில் நமது மொழி ஆகிய நோர்வெகிய மொழியும் ஆங்கில கலப்புடனான மொழியாகும் சூழல் உள்ளனவா? என்று ஆராந்தவர்கள், ஒரு சில ஆங்கில சொற்கள் ஆங்கிலத்தில் நோர்வேஜிய மக்கள் கொண்ட பற்றினால் பயன்படுத்துகின்றார்கள? என்றும். காலப்போக்கில் நோர்வேஜிய மக்கள் கவனத்துடன் பேச்சு வழக்கில் மொழிகளை கையாளுதல் வேண்டும் எனவும். இல்லையெனில் இந்தியா போன்ற நாடுகளில் இருக்க கூடிய நிலை சில காலங்களிற்கு பின் இங்கும் அது போன்ற நலை தோன்றலாம் எனவும் ஓர் அச்சத்துடனான வேண்டுதலை விடுத்திருந்தார்கள். அக்கருத்தாடலில் இன்னொருவர் சொல்லி இருந்தார். இந்தியா போன்ற நாடுகள் அன்றய காலங்களில் பிருத்தனியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததனால் தான் ஆங்கிலம் அவர்களிம் மொழியுடன் கலந்தது எனவும், அதனையிட்டு நாம் (நோர்வேஜியர்கள்) அஞ்சவேண்டியது இல்லை எனவும் சொன்னார்.

நோர்வேஜிய மொழியினை த வீகிங் என அழக்கப்படும் அவர்களின் மூதாதைகளால் பேசப்பட்ட மொழி என சொல்கின்றார்கள். த வீகிங் மக்கள் வாழ்ந்த காலம் 800-10௰66. அங்கிலம் கூட பல சொற்களை த வீகிங் மக்களிடம் இடமிருந்து பல சொற்களை உள்வாங்கி உள்ளனர். த வீகிங் மக்கள் நோர்வே ச்வீடன் டென்மார்க் போன்ற நாடுகளில் வழ்ந்தனர்.

நோர்வேஜிய மக்கள் தங்கள் மொழி மீதும் கலாச்சாரம் மீதும் பற்று கொண்ட மக்கள். அவர்களுக்கு உழைப்பில் ஊக்கம் மொழியில் பற்று கலை தனில் பற்று. அவர்களும் வியாபாரம் செய்கின்றார்கள். தங்கள் மொழியையோ கலையையோ. விற்று பிளைக்கவில்லையே. ஆனால் நம்மவர்கள் அற்ப சொற்ப ஆசைகளுக்கு அடைமயங்கி. மொழி என்ன மொழி, சில பணம் தந்தால் காற்றில் பறக்கவிடுவேன் என பந்தயம் பிடிக்கின்றனர். இஸ்றேலியர்கள் வரலாறு, கடின உழைப்பால் தனது தன்னம்பிக்கயினால் தன்னையும் விட்டுக்கொடுக்காது. தன் மொழி கலை கலாச்சாரத்தை பாது காத்த வண்ணம். தனது வர்த்தகத்தை செய்கின்றனர்.

அதென்னமோ தமிழன் தான் அதிலும் திரைப்பட நடிகர்களுக்குதான். தமிழை விற்று வியாபாரம் பண்ண முடிகின்றது. கேவலமான இந்த நிலையை நினைந்து தமிழுக்கு தாம் செய்த தவறினை உணராது, வீண் வாதமும், நகைப்பும் திமிரும் கொள்வது உங்களையே நீங்கள் தாழ்த்தி கொண்டமைக்கு ஒப்பாகும்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by Malalai - 02-25-2005, 07:49 AM
[No subject] - by வியாசன் - 02-25-2005, 11:45 AM
[No subject] - by glad - 02-25-2005, 12:45 PM
[No subject] - by கடவுள் - 02-25-2005, 01:36 PM
[No subject] - by கடவுள் - 02-25-2005, 01:43 PM
[No subject] - by Mathuran - 02-25-2005, 02:34 PM
[No subject] - by UZI - 02-26-2005, 12:43 AM
[No subject] - by Mathuran - 02-26-2005, 02:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)