02-23-2005, 10:18 PM
அழுத்தம் பிரயோகிக்கப்படுமா?
சுனாமி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விடயத்தில் சிறிலங்காவுக்கு உலக நாடுகள் மூன்று விடயங்களை முக்கியமாகத் தெரிவித்து வருகின்றன. ஒன்று வடக்கு-கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதில் புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல் வேண்டுமென்பது. இரண்டாவது இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அளவு உதவியை வழங்க அவை தயாராக இருக்கின்றன என்பது. மூன்றாவது. வழங்கப்படும் நிதி உரியவர்களுக்குச் சென்றடைய வேண்டும். அல்லாவிடின் இந்த நிதியுதவி நிறுத்தப்படுமென்பது. இந்த விடயங்களை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளும்ää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் மனிதநேய அமைப்புக்களும் வலியுறுத்தத் தவறவில்லை.
இவற்றையே கொழும்பிற்கு விஜயம் செய்த முன்னாள் அமெரிக்க சனாதிபதிகளான பில்கிளின்டன்ää ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
ஆனால் இவ்விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா இதுவரை காலமும் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றே கூறலாம். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களிற்குதவ புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறையை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரிய உற்சாகம் காட்டுவதாக இல்லை. தனது அரசியல் இலாபம் கருதி தம்முடன் இணைந்து செயற்பட புலிகள் முன்வந்திருக்கிறார்கள் என்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடிக்கடி கூறி வருகின்றாரே தவிர புலிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அரசாங்கத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சமாதானச் செயலகங்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு வந்தபோதும் அது வெற்றியைத் தரவில்லை.
சுனாமிப் பேரனர்த்தம் ஏற்பட்டு இரண்டு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் குடியிருப்புகள்ää உடமைகள் தொழில் உபகரணங்கள் அனைத்தையுமே பறிகொடுத்து நிற்கின்றனர். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் அம்மக்களை விரக்தி நிலைக்குத் தள்ளத்தக்கதாகும். மேலும் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தால்கூட அப்பணிகள் முடிவடைய நீண்ட காலம் எடுக்கக்கூடுமெனவும்ää இதற்கு ஆளணி வளப்பற்றாக்குறை முக்கிய தடையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்ää பணிகளை ஆரம்பிப்பதிலேயே தாமதம் ஏற்படுவது மேலும் மோசமான பாதிப்புக்களை விளைவிக்கும்.
இரண்டாவதாகää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ் நிலைக்குத் திரும்ப உதவி புரிய உலக நாடுகளும் பல்வேறு அமைப்புக்களும் தயாராக உள்ள நிலையில் அரச இயந்திரத்தின் நடவடிக்கைகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் செயற்திறன் மிகக் குறைந்ததாகும். அத்துடன் ஊழலும்ää மோசடிகளும் நிறைந்தது என்ற குற்றச்சாட்டு பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பிலேயே சிறிலங்காவின் அரச இயந்திரம் முரண்பாடான புள்ளி விபரங்களை வழங்கியது.
சிறிலங்கா அரசாங்கம் செயற்திறன் குறைந்ததெனவும் அதனுடன் பணியாற்றுவது மிகவும் கடினமானதெனவும் சுனாமி அனர்த்தத்தின் முன்பதாகவே பல வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் கூடச் சுட்டிக்காட்டியதுண்டு.
இதேவேளை சிறிலங்கா அரசில் அரசியல்வாதிகளில் இருந்து அதிகாரிகள் வரையில் ஊழல் மோசடியில் திளைத்தவர்கள் என்பதும் உலகறிந்ததொன்று. எடுத்துக்காட்டாக அண்மையில் தென்மாகாணத்தில் மாகாணசபை அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாகனத்தில் சுனாமி நிவாரணப் பொருட்கள் கடத்தப்பட்டதை படங்களுடன் ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அடுத்ததாக தமிழர் தாயகப் பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை உரிய முறையில் சம அளவில் பங்கிட்டு அளிக்க அரசாங்கம் இன்னமும் தயாராக இல்லை. அரசாங்கத்தின் கையில் பெரும் தொகை நிவாரண நிதி இருக்கின்றபோதும் அவற்றைப் பகிர்ந்தளிக்கவோ அன்றித் தமிழர் பகுதி புனர்நிர்மாணத்திற்குப் பயன்படுத்தவோ அரசாங்கம் தயாராக இல்லை. மறுவளமாக அரசு தமிழர் தாயகத்தின் அழிவுகளை உலகின் கண்களிலிருந்து மறைத்து விடவே அக்கறை காட்டுகிறது.
இந்த வகையில் சிறிலங்காவிற்கு உதவும் சர்வதேச நாடுகளின் எதிர்பார்க்கைகள் எதனையும் அரசாங்கம் கவனத்திற்குட்படுத்தியதாக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் தட்டிக்கழித்து விடவே அது விரும்புகின்றது. இந்நிலையில் உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசின் நடவடிக்கையில் திருப்தி கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்உதவி வழங்கும் நாடுகள் எந்தளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றன என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்க்கையாகும். அதாவது உதவி வழங்கும் நாடுகளும் தமது அபிலாசைகளைத்துறந்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க முற்படுமா? என்பதே தமிழ் மக்களின் முன்னுள்ள கேள்வியாகவுள்ளது.
நன்றி: ஈழநாதம்
சுனாமி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விடயத்தில் சிறிலங்காவுக்கு உலக நாடுகள் மூன்று விடயங்களை முக்கியமாகத் தெரிவித்து வருகின்றன. ஒன்று வடக்கு-கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதில் புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல் வேண்டுமென்பது. இரண்டாவது இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அளவு உதவியை வழங்க அவை தயாராக இருக்கின்றன என்பது. மூன்றாவது. வழங்கப்படும் நிதி உரியவர்களுக்குச் சென்றடைய வேண்டும். அல்லாவிடின் இந்த நிதியுதவி நிறுத்தப்படுமென்பது. இந்த விடயங்களை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளும்ää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் மனிதநேய அமைப்புக்களும் வலியுறுத்தத் தவறவில்லை.
இவற்றையே கொழும்பிற்கு விஜயம் செய்த முன்னாள் அமெரிக்க சனாதிபதிகளான பில்கிளின்டன்ää ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
ஆனால் இவ்விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா இதுவரை காலமும் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றே கூறலாம். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களிற்குதவ புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறையை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரிய உற்சாகம் காட்டுவதாக இல்லை. தனது அரசியல் இலாபம் கருதி தம்முடன் இணைந்து செயற்பட புலிகள் முன்வந்திருக்கிறார்கள் என்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடிக்கடி கூறி வருகின்றாரே தவிர புலிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அரசாங்கத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சமாதானச் செயலகங்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு வந்தபோதும் அது வெற்றியைத் தரவில்லை.
சுனாமிப் பேரனர்த்தம் ஏற்பட்டு இரண்டு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் குடியிருப்புகள்ää உடமைகள் தொழில் உபகரணங்கள் அனைத்தையுமே பறிகொடுத்து நிற்கின்றனர். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் அம்மக்களை விரக்தி நிலைக்குத் தள்ளத்தக்கதாகும். மேலும் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தால்கூட அப்பணிகள் முடிவடைய நீண்ட காலம் எடுக்கக்கூடுமெனவும்ää இதற்கு ஆளணி வளப்பற்றாக்குறை முக்கிய தடையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்ää பணிகளை ஆரம்பிப்பதிலேயே தாமதம் ஏற்படுவது மேலும் மோசமான பாதிப்புக்களை விளைவிக்கும்.
இரண்டாவதாகää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ் நிலைக்குத் திரும்ப உதவி புரிய உலக நாடுகளும் பல்வேறு அமைப்புக்களும் தயாராக உள்ள நிலையில் அரச இயந்திரத்தின் நடவடிக்கைகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் செயற்திறன் மிகக் குறைந்ததாகும். அத்துடன் ஊழலும்ää மோசடிகளும் நிறைந்தது என்ற குற்றச்சாட்டு பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பிலேயே சிறிலங்காவின் அரச இயந்திரம் முரண்பாடான புள்ளி விபரங்களை வழங்கியது.
சிறிலங்கா அரசாங்கம் செயற்திறன் குறைந்ததெனவும் அதனுடன் பணியாற்றுவது மிகவும் கடினமானதெனவும் சுனாமி அனர்த்தத்தின் முன்பதாகவே பல வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் கூடச் சுட்டிக்காட்டியதுண்டு.
இதேவேளை சிறிலங்கா அரசில் அரசியல்வாதிகளில் இருந்து அதிகாரிகள் வரையில் ஊழல் மோசடியில் திளைத்தவர்கள் என்பதும் உலகறிந்ததொன்று. எடுத்துக்காட்டாக அண்மையில் தென்மாகாணத்தில் மாகாணசபை அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாகனத்தில் சுனாமி நிவாரணப் பொருட்கள் கடத்தப்பட்டதை படங்களுடன் ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அடுத்ததாக தமிழர் தாயகப் பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை உரிய முறையில் சம அளவில் பங்கிட்டு அளிக்க அரசாங்கம் இன்னமும் தயாராக இல்லை. அரசாங்கத்தின் கையில் பெரும் தொகை நிவாரண நிதி இருக்கின்றபோதும் அவற்றைப் பகிர்ந்தளிக்கவோ அன்றித் தமிழர் பகுதி புனர்நிர்மாணத்திற்குப் பயன்படுத்தவோ அரசாங்கம் தயாராக இல்லை. மறுவளமாக அரசு தமிழர் தாயகத்தின் அழிவுகளை உலகின் கண்களிலிருந்து மறைத்து விடவே அக்கறை காட்டுகிறது.
இந்த வகையில் சிறிலங்காவிற்கு உதவும் சர்வதேச நாடுகளின் எதிர்பார்க்கைகள் எதனையும் அரசாங்கம் கவனத்திற்குட்படுத்தியதாக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் தட்டிக்கழித்து விடவே அது விரும்புகின்றது. இந்நிலையில் உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசின் நடவடிக்கையில் திருப்தி கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்உதவி வழங்கும் நாடுகள் எந்தளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றன என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்க்கையாகும். அதாவது உதவி வழங்கும் நாடுகளும் தமது அபிலாசைகளைத்துறந்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க முற்படுமா? என்பதே தமிழ் மக்களின் முன்னுள்ள கேள்வியாகவுள்ளது.
நன்றி: ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

