02-23-2005, 12:04 PM
தமிழ்ச்செல்வனின் மலையக பயணத்துக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குமா? பிக்கு எம்.பி.பாராளுமன்றத்தில் கேள்வி
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மலையகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத இயக்க தலைவரொவர் இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை உண்மைதானா? என்பது குறித்தும் இவரது பயணத்திற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குமா? என்பது குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர். அத்துருலிய ரத்ன தேரர் பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று செவ்வாக்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் லொக்குபண்டார தலைமையில் கூடி கேள்வி நேரம் முடிந்த பின்னர் அத்துருலிய ரத்ன தேரர் விசேட கூற்றொன்றை வெளியிட்டார். அக்கூற்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார். இது யுத்த நிறுத்தத்தை மீறும் ஒரு செயலாகும். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரனின் அழைப்பையேற்று மலையகத்தின் பல பகுதிகளுக்கும் தமிழ்ச்செல்வன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிகிறோம். வடபகுதியில் ஆயுதங்களுடன் திரியும் ஒரு அமைப்பு தென்பகுதியிலும் சுதந்திரமான நடமாட அனுமதியளிப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
தமிழச்செல்வனின் இந்த விஜயத்திற்கு அனுமதி வழங்கியது யார்? இது தொடர்பாக பாதுகாப்பமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, அச்சமயம் பாதுகாப்பமைச்சரோ, பிரதிப் பாதுகாப்பமைச்சரோ சபையிலில்லாத காரணத்தினால் இது குறித்து சம்பந்தப்பட்டவருக்கு அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
தினக்குரல்
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மலையகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத இயக்க தலைவரொவர் இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை உண்மைதானா? என்பது குறித்தும் இவரது பயணத்திற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்குமா? என்பது குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர். அத்துருலிய ரத்ன தேரர் பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று செவ்வாக்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் லொக்குபண்டார தலைமையில் கூடி கேள்வி நேரம் முடிந்த பின்னர் அத்துருலிய ரத்ன தேரர் விசேட கூற்றொன்றை வெளியிட்டார். அக்கூற்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார். இது யுத்த நிறுத்தத்தை மீறும் ஒரு செயலாகும். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரனின் அழைப்பையேற்று மலையகத்தின் பல பகுதிகளுக்கும் தமிழ்ச்செல்வன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிகிறோம். வடபகுதியில் ஆயுதங்களுடன் திரியும் ஒரு அமைப்பு தென்பகுதியிலும் சுதந்திரமான நடமாட அனுமதியளிப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
தமிழச்செல்வனின் இந்த விஜயத்திற்கு அனுமதி வழங்கியது யார்? இது தொடர்பாக பாதுகாப்பமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, அச்சமயம் பாதுகாப்பமைச்சரோ, பிரதிப் பாதுகாப்பமைச்சரோ சபையிலில்லாத காரணத்தினால் இது குறித்து சம்பந்தப்பட்டவருக்கு அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

