Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேர்மன் அமைச்சர் மணற்காடு விஜயம்
#1
சுனாமி அனர்த்த அழிவுகளைப் பார்க்க
ஜேர்மன் அமைச்சர் மணற்காடு விஜயம்
கடற்றொழில் உபகரணங்களை வழங்கினார்
ஜேர்மன் நாட்டின் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் திருமதி வியெஸ்ஸோ றெக்சி யாஸ் தலைமையில் அந்த நாட்டின் பிரமுகர்கள் குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மணற்காட்டுக் கிராமத்துக்குச் சென்று அழிவுகளை அவர்கள் பார்வையிட்டனர்.
சுனாமியால் கடற்றொழில் உபகரணங்களை இழந்த குடும்பங்களில் 14 பேருக்கு பிளாஸ்ரிக் படகுகள் இழுவை இயந்திரங்கள் வலைகள் தூண்டல்கள் கயிறு போன்ற உபகரணங்களை யும் ஒரு தொகைப் பணத்தையும் ஜேர்மன் அமைச் சர் வழங்கினர்.
ஏனையோருக்கும் விரைவில் கடற்றொழில் உபகரணங்களை வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அழிவுகளைப் பார்வையிட்டதும் ஜேர்மன் குழுவினர் முற்பகல் 11.30 மணியளவில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலய முன்ற லில் அமைக்கப்பட்ட பந்தலில் மலர்மாலை அணி வித்து வரவேற்கப்பட்டனர்.
மணற்காடு கடற்றொழிலாளர் சங்கச் செய லாளர் சாமிநாதன் - அந்தோனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர்கள் கலந்துகொண்டனர்.
யாழ். மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண் டகை சுனாமி அனர்த்த கூட்டுச்செயலணியின் பணிப்பாளர் எஸ்.பாலையா கடற்புலிகளின் பொறுப்பாளர் அன்பழகன் அனர்த்த உதவிப் பணிமனையைச் சேர்ந்த சீ.வீ.கே.சிவஞானம் ஆகி யோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜேர்மன் அமைச்சர் அங்கு உரையாற்றி னார். பாதிக்கப்பட்டோருக்கு அவர் தொழில் உபகரணங்களை வழங்கினார். மக்கள் பலர் தமது சோகங்களை கண்ணீர் மல்கியவாறு அமைச்சரிடம் கூறினர். இவற்றை கேட்டு தானும் கண்கலங்கிய ஜேர்மன் அமைச்சர் வியெஸ் றெக்சியாஸ் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற் றொழிலாளர்களுக்காக தமது நாட்டு அரசு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று உறுதியளித்தார்.

உதயன்

--------------------------------------------------------------------


ஜேர்மன் அமைச்சர் குழுவினர்
டிறிபேர்க் கல்லூரிக்கும் விஜயம்
ஜேர்மன் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அவருடன் வந்த குழுவினர் நேற்றுப்பிற்பகல் சாவகச்சேரிக்கும் விஜயம் செய் தனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் இவர்கள் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
பாடசாலையில் ஜேர்மன் அரசின் உதவியு டன் சுமார் 36 மில்லியன் ரூபா செலவில் நடை பெற்றுமுடிந்த - நடைபெற்று வருகின்ற அபி விருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டனர்.
பி;ன்னர் அங்கு பாடசாலை அதிபர் மு. நாகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு தமது கருத்துக் களைத் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சபை யினர் மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளர் செ.சிறீனிவாசன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் உட்படப்பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஜேர்மன் நாட்டு அமைச் சர் திருமதி வியெஸ்ஸோ றெக்சியால் பிரதேச செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இக்குழுவினருக் குப் பொலீஸார் பாதுகாப்பு வழங்கினர்.

உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஜேர்மன் அமைச்சர் மணற்காடு விஜயம் - by Vaanampaadi - 02-23-2005, 11:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)