02-22-2005, 01:45 PM
சிறிலங்காவில் அரசியல் வியாபாரமாகும் கரையோர அமைவிடம் - ஞாபகன்
சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் சுனாமி பேரலைகளினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதுமாக ஏற்பாடுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
முதற்கட்ட மீட்புப்பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட சூழலில் அடுத்த கட்டமான இந்நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கும் தருணத்தில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. சிறிலங்காவில் கரையோர இட அமைவு பற்றி பெரும் போரே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கடற்கரையோரத்தில் இருந்து எவ்வளவு தூரத்துக்கு அப்பால் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது என்ற அதிகார மட்டத்திலான மோதல்கள் ஆளும் கட்சிக்குள்ளே இடம்பெறுகின்றன.
பிரதமர் மற்றும் தீர்மானம் எடுக்கவல்ல தரப்பினர் நூறு மீற்றர் தூரத்துக்குள் எந்தக் கட்டங்களும் அமைக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக அறிவித்துள்ளனர்.
இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவும் வேறுசில அரசியல்வாதிகளும் தீவிரமாக எதிர்த்துவருகின்றனர். மக்களின் உயிர், உடமை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும், அவர்கள் தத்தமது அரசியல் நலன்களுக்காகவே இதனை எதிர்த்து வருகின்றார்கள்.
இந்த ஆண்டில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று கூறும் அனுரா பண்டாரநாயக்க அதை இந்த விதிமுறை நாசமாக்கிவிடும் என்றும் அதனால் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய வருமானமும் இழக்கப்படும் என்றும் சொல்கிறனர். அதேவேளை அகதிகளுக்கான ஜ.நா உயர் ஸ்தானிகராலயமும் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு அரசைக் கேட்டிருக்கின்றது.
பாதுகாப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை இன்னும் பலரை ஏதிலிகளாக்கி நிர்க்கதி நிலைக்குள் தள்ளும் என்று அது தெரிவித்திருக்கின்றது. இப்போதைக்கு ஒரு சுனாமி அலை இலங்கைத்தீவைத் தாக்கும் என்பதற்கான திடமான கணிப்புக்களோ தாக்காது என்பதற்கான நம்பிக்கையோ இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவரவர் தத்தமது நோக்கில் விமர்சித்து வருகின்றனர். அதற்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார காரணங்களும் காட்டப்படுகின்றன. ஆனால், மிகப்பெரும் உயிரழிவைச் சந்தித்தபகுதி மக்களிடம் இருந்துதான் இந்த எதிர்ப்புக்கள் வருகின்றனவா என்பது தெளிவாக இல்லை. உண்மையில் அத்தகைய தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பிடம் இருந்து எதிர்ப்புக்கள் வரவில்லை. ஆயினும், சாத்தியமான வழிமுறைகளில் கூடியளவுக்கு அவரவரின் பழைய இடங்களுக்கே திரும்பிச் செல்லக்கூடியதான முறையையே கையாளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.
இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு, அழிவை மிகப் பெரிதாக்கி இருக்கின்றது. அதனை ஈடுசெய்யும் வழிவகைகளைக் கையாண்டு கூடுதல் நிலப்பரப்பை இழக்காது பாதுகாக்கும் செயற்திட்டங்களை வகுக்கவேண்டும் என்று பேசப்படுகின்றது.
ஆனால், அது தொடர்பாக முன் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசின் கரையோரப் பாதுகாப்புக் கருதிய கரையோர நிலங்களை வெறுமையாகவிடும் திட்டம்கூட பாரபட்சமானதாகவே உள்ளது. கிழக்கு மற்றும் வடக்கின் பெரும்பாலான கரையோரப் பகுதிகளில் இருநூறு மீற்றர் தூரம் வரை குடியிருக்கவோ கட்டடங்கள் அமைக்கவோ அனுமதிப்பதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கைப் பகுதியில் அதிகம் நிலத்தை கைவிட விரும்பாத அரசு அதனை நவீன உத்திகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை கையாளவுள்ளது என்றும் தமிழர் தாயகப் பகுதிகளை அது விடயத்தில் மாற்றாந்தாய் முறையில் அணுகும் நோக்கோடு கூடுதல் நிலப்பகுதியை கைவிடச்செய்கின்றது என்றும் விமர்சனங்கள் உண்டு.
அதைவிடவும் நல அபகரிப்பிற்கான உள்நோக்கமும் அதற்குள் உண்டு. ஏற்கனவே பேரலைகள் தாக்கி இடம்பெயர்ந்த பகுதிகளில் சிறிலங்கா படையினர் புதிதாக படைநிலைகளை அமைப்பதும் மக்களின் எஞ்சிய உடமைகளை அதற்கு பயன்படுத்துவதும் செய்திகளாக வெளிவந்துள்ளன.
ஏற்கனவே தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலை கொண்டுள்ள சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணத்தில் மட்டும் முப்பது வீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி கையகப்படுத்தி வைத்துள்ளனர். அதுபோன்று வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களிலும் அதிகளவான மக்கள் குடியிருப்புக்களை கையகப்படுத்தப்பட்டுள்ளன.
அதனால் பல இலட்சம் மக்கள் ஏதிலிகளாக தமது பொருளாதார அடிப்படைகளையே இழந்துள்ளனர். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகத் தொடரும் இந்த துன்பியல் வாழ்வும் அதற்கு எதிரான குரல்களும் சிறிலங்காவினாலும் உலகத்தினாலமு; கண்டுகொள்ளப்படாது உள்ளன.
சமாதானத்துக்கான இக்காலத்திலும் அதில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமின்றி அழுங்குப் பிடியாக சிறிலங்காப் படைகள் இருக்கின்றன. அதற்கு எதிராக எந்தக் குரலும் எழும்பத்தெரியாத, கண்டுகொள்ளாத சக்திகள் பெரும்பான்மையினரின் பொருளாதார நலன்களை வாழ்வுரிமையை மையப்படுத்தி இப்போது குரல் எழுப்புவது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையே ஆகும்.
இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் மீள்குடியேற்றத் திட்டம் யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்ட தமிழர் தாயகத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டதாக இருப்பதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசிடம் இருந்து போதிய உதவிகள் மறுவாழ்வுத் திட்டங்கள் எதனையும் எதிர்பார்ப்பது இத்தனை காலப் பட்டறிவுக்கும் முரணானது. அதனால் நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டங்களை வகுக்கக்வேண்டியவர்களாக தமிழர்கள் இருக்கின்றனர்.
அதன் முன்னோடித் திட்டத்தை இப்போது விடுதலைப்புலிகள் முன்னெடுக்கின்றனர். அவர்கள் கரையோரத்தில் இருந்து சுமார் 400 மீற்றருக்கு அப்பால் மீள்குடியேற்றத்தை நிறுவுவதற்கு தீர்மானித்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். கரையோரத்தில் இருந்து 300 மீற்றருக்கு அப்பாலேயே இப்பகுதிகளில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதென முதலில் தீர்மானித்திருந்தபோதிலும் பாதுகாப்புக் கருதி தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பதனால் சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்து தமது நிரந்தர பாதுகாப்பு வலயங்களாக கையகப்படுத்தும் அச்சுறுத்தல் இல்லை. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மட்டுமே எடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் தாயகத்துக்குக் கிடைக்கக்கூடிய இயற்கையிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களுடன் அமைந்த வாய்ப்புக்கள் கிடைக்கும்போது கரையோரம் முழுவதையும் பயன்பாட்டுக்கு உட்படுத்த இயலும்.
இது தொடர்பாக எந்த எதிர்வினைகளும் கண்டனங்களும் இல்லாதபோது தென்னிலங்கையில் ஏன் இந்தக் கூக்குரல்கள்? ஆளும் தரப்புக்குள்ளேயே முரண்பாடுகள்? அதுவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே அதுவிடயத்தில் வேறுபாடான கருத்துக்களும் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்து பேசும் வார்த்தையாடல்கள்?
இது ஒரு விடயத்தை தெளிவாகக் காட்டுகின்றது. தென்னிலங்கையின் ஆளும் தரப்பையோ எதிர்த் தரப்பையோ சேர்ந்த முக்கிஸ்தர்கள் எவருமே மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டவர்களாக இருக்கவில்லை. வெறுமனே தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான முதலாளிய சமூகத்தின் நலன்களை பிதிபலிப்பவர்களாகவே உள்ளனர்.
அல்லது அதன் மறுபக்கமாக நோக்கின் உண்மையில் மக்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று கருதுகின்றார்களேயானால் எந்த மக்களின் நலனை அவர்கள் கருதுகின்றார்கள். தமது நீண்ட கால வாழ்வமைந்த இடங்களை விட்டு இடம்பெயர்வதனால் அவர்களது பல்வேறு நலன்களும் சேதமடையும் என்று எண்ணுகின்றார்களா?
யாரும் கட்டுப்படுத்தவியலாதது என்று இப்போது கருதப்படும் இயற்கை அனர்த்தத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முகமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்காகக் கவலைப்படுபவர்கள் தமிழ் மக்கள் பற்றி இந்த இருபது ஆண்டுகாலமாக கவலைப்படாமல் இருப்பது ஏன்?
வலிந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழின அழிப்பையும் தமிழர்களின் பொருளாதார, கலாசார கூறுகளையும் இல்லாதொழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? இது பற்றிய கவலையற்ற மகிழ்ச்சிகரமான அவர்களது வெளிப்பாடே உயர்பாதுகாப்பு வலயங்களாக தமிழர்களது தாயகப் பகுதிகளை கையகப்படுத்தி வைத்திருப்பதாகும்.
இது தொடர்பாக எத்தனை இலட்சம் மக்கள் தமது அதிருப்திகளையும் வேதனைகளையும் சொல்லிவிட்டார்கள். இவை யாவும் செவிசாய்க்கப்பட்டனவா? மனிதாபிமான ரீதியிலோ அல்லது குறைந்த பட்சம் அவர்களது சட்டத்தின் படியோதானும் தீர்க்கப்பட்டதா?
இப்போது வலிகாமம் வடக்குப் பகுதியில் தமிழ் மக்கள் தம்மை மீளக்குடியே அனுமதிக்கக்கோரி தொடுத்த வழக்கிற்கு கூட வலிந்து திணிக்கப்பட்ட பாதுகாப்பை காரணம் காட்டி சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
மனங்கள் திறந்தால் திறக்கக்கூடிய வழிகளையே திறக்க மறுக்கும் இந்த ஆட்சியாளர்கள், இயற்கையை வெல்லமுடியாது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
அது அப்பட்டமான இனவாத அரசியல் வியாபாரமாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?
சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் சுனாமி பேரலைகளினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதுமாக ஏற்பாடுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
முதற்கட்ட மீட்புப்பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட சூழலில் அடுத்த கட்டமான இந்நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கும் தருணத்தில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. சிறிலங்காவில் கரையோர இட அமைவு பற்றி பெரும் போரே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கடற்கரையோரத்தில் இருந்து எவ்வளவு தூரத்துக்கு அப்பால் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது என்ற அதிகார மட்டத்திலான மோதல்கள் ஆளும் கட்சிக்குள்ளே இடம்பெறுகின்றன.
பிரதமர் மற்றும் தீர்மானம் எடுக்கவல்ல தரப்பினர் நூறு மீற்றர் தூரத்துக்குள் எந்தக் கட்டங்களும் அமைக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக அறிவித்துள்ளனர்.
இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவும் வேறுசில அரசியல்வாதிகளும் தீவிரமாக எதிர்த்துவருகின்றனர். மக்களின் உயிர், உடமை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும், அவர்கள் தத்தமது அரசியல் நலன்களுக்காகவே இதனை எதிர்த்து வருகின்றார்கள்.
இந்த ஆண்டில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று கூறும் அனுரா பண்டாரநாயக்க அதை இந்த விதிமுறை நாசமாக்கிவிடும் என்றும் அதனால் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய வருமானமும் இழக்கப்படும் என்றும் சொல்கிறனர். அதேவேளை அகதிகளுக்கான ஜ.நா உயர் ஸ்தானிகராலயமும் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு அரசைக் கேட்டிருக்கின்றது.
பாதுகாப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை இன்னும் பலரை ஏதிலிகளாக்கி நிர்க்கதி நிலைக்குள் தள்ளும் என்று அது தெரிவித்திருக்கின்றது. இப்போதைக்கு ஒரு சுனாமி அலை இலங்கைத்தீவைத் தாக்கும் என்பதற்கான திடமான கணிப்புக்களோ தாக்காது என்பதற்கான நம்பிக்கையோ இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அவரவர் தத்தமது நோக்கில் விமர்சித்து வருகின்றனர். அதற்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார காரணங்களும் காட்டப்படுகின்றன. ஆனால், மிகப்பெரும் உயிரழிவைச் சந்தித்தபகுதி மக்களிடம் இருந்துதான் இந்த எதிர்ப்புக்கள் வருகின்றனவா என்பது தெளிவாக இல்லை. உண்மையில் அத்தகைய தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பிடம் இருந்து எதிர்ப்புக்கள் வரவில்லை. ஆயினும், சாத்தியமான வழிமுறைகளில் கூடியளவுக்கு அவரவரின் பழைய இடங்களுக்கே திரும்பிச் செல்லக்கூடியதான முறையையே கையாளவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.
இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு, அழிவை மிகப் பெரிதாக்கி இருக்கின்றது. அதனை ஈடுசெய்யும் வழிவகைகளைக் கையாண்டு கூடுதல் நிலப்பரப்பை இழக்காது பாதுகாக்கும் செயற்திட்டங்களை வகுக்கவேண்டும் என்று பேசப்படுகின்றது.
ஆனால், அது தொடர்பாக முன் வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரசின் கரையோரப் பாதுகாப்புக் கருதிய கரையோர நிலங்களை வெறுமையாகவிடும் திட்டம்கூட பாரபட்சமானதாகவே உள்ளது. கிழக்கு மற்றும் வடக்கின் பெரும்பாலான கரையோரப் பகுதிகளில் இருநூறு மீற்றர் தூரம் வரை குடியிருக்கவோ கட்டடங்கள் அமைக்கவோ அனுமதிப்பதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கைப் பகுதியில் அதிகம் நிலத்தை கைவிட விரும்பாத அரசு அதனை நவீன உத்திகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை கையாளவுள்ளது என்றும் தமிழர் தாயகப் பகுதிகளை அது விடயத்தில் மாற்றாந்தாய் முறையில் அணுகும் நோக்கோடு கூடுதல் நிலப்பகுதியை கைவிடச்செய்கின்றது என்றும் விமர்சனங்கள் உண்டு.
அதைவிடவும் நல அபகரிப்பிற்கான உள்நோக்கமும் அதற்குள் உண்டு. ஏற்கனவே பேரலைகள் தாக்கி இடம்பெயர்ந்த பகுதிகளில் சிறிலங்கா படையினர் புதிதாக படைநிலைகளை அமைப்பதும் மக்களின் எஞ்சிய உடமைகளை அதற்கு பயன்படுத்துவதும் செய்திகளாக வெளிவந்துள்ளன.
ஏற்கனவே தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலை கொண்டுள்ள சிறிலங்கா படையினர் யாழ்ப்பாணத்தில் மட்டும் முப்பது வீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி கையகப்படுத்தி வைத்துள்ளனர். அதுபோன்று வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களிலும் அதிகளவான மக்கள் குடியிருப்புக்களை கையகப்படுத்தப்பட்டுள்ளன.
அதனால் பல இலட்சம் மக்கள் ஏதிலிகளாக தமது பொருளாதார அடிப்படைகளையே இழந்துள்ளனர். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகத் தொடரும் இந்த துன்பியல் வாழ்வும் அதற்கு எதிரான குரல்களும் சிறிலங்காவினாலும் உலகத்தினாலமு; கண்டுகொள்ளப்படாது உள்ளன.
சமாதானத்துக்கான இக்காலத்திலும் அதில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமின்றி அழுங்குப் பிடியாக சிறிலங்காப் படைகள் இருக்கின்றன. அதற்கு எதிராக எந்தக் குரலும் எழும்பத்தெரியாத, கண்டுகொள்ளாத சக்திகள் பெரும்பான்மையினரின் பொருளாதார நலன்களை வாழ்வுரிமையை மையப்படுத்தி இப்போது குரல் எழுப்புவது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கையே ஆகும்.
இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் மீள்குடியேற்றத் திட்டம் யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்ட தமிழர் தாயகத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டதாக இருப்பதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசிடம் இருந்து போதிய உதவிகள் மறுவாழ்வுத் திட்டங்கள் எதனையும் எதிர்பார்ப்பது இத்தனை காலப் பட்டறிவுக்கும் முரணானது. அதனால் நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டங்களை வகுக்கக்வேண்டியவர்களாக தமிழர்கள் இருக்கின்றனர்.
அதன் முன்னோடித் திட்டத்தை இப்போது விடுதலைப்புலிகள் முன்னெடுக்கின்றனர். அவர்கள் கரையோரத்தில் இருந்து சுமார் 400 மீற்றருக்கு அப்பால் மீள்குடியேற்றத்தை நிறுவுவதற்கு தீர்மானித்து, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். கரையோரத்தில் இருந்து 300 மீற்றருக்கு அப்பாலேயே இப்பகுதிகளில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதென முதலில் தீர்மானித்திருந்தபோதிலும் பாதுகாப்புக் கருதி தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பதனால் சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்து தமது நிரந்தர பாதுகாப்பு வலயங்களாக கையகப்படுத்தும் அச்சுறுத்தல் இல்லை. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மட்டுமே எடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் தாயகத்துக்குக் கிடைக்கக்கூடிய இயற்கையிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களுடன் அமைந்த வாய்ப்புக்கள் கிடைக்கும்போது கரையோரம் முழுவதையும் பயன்பாட்டுக்கு உட்படுத்த இயலும்.
இது தொடர்பாக எந்த எதிர்வினைகளும் கண்டனங்களும் இல்லாதபோது தென்னிலங்கையில் ஏன் இந்தக் கூக்குரல்கள்? ஆளும் தரப்புக்குள்ளேயே முரண்பாடுகள்? அதுவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே அதுவிடயத்தில் வேறுபாடான கருத்துக்களும் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்து பேசும் வார்த்தையாடல்கள்?
இது ஒரு விடயத்தை தெளிவாகக் காட்டுகின்றது. தென்னிலங்கையின் ஆளும் தரப்பையோ எதிர்த் தரப்பையோ சேர்ந்த முக்கிஸ்தர்கள் எவருமே மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டவர்களாக இருக்கவில்லை. வெறுமனே தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான முதலாளிய சமூகத்தின் நலன்களை பிதிபலிப்பவர்களாகவே உள்ளனர்.
அல்லது அதன் மறுபக்கமாக நோக்கின் உண்மையில் மக்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று கருதுகின்றார்களேயானால் எந்த மக்களின் நலனை அவர்கள் கருதுகின்றார்கள். தமது நீண்ட கால வாழ்வமைந்த இடங்களை விட்டு இடம்பெயர்வதனால் அவர்களது பல்வேறு நலன்களும் சேதமடையும் என்று எண்ணுகின்றார்களா?
யாரும் கட்டுப்படுத்தவியலாதது என்று இப்போது கருதப்படும் இயற்கை அனர்த்தத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முகமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்காகக் கவலைப்படுபவர்கள் தமிழ் மக்கள் பற்றி இந்த இருபது ஆண்டுகாலமாக கவலைப்படாமல் இருப்பது ஏன்?
வலிந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழின அழிப்பையும் தமிழர்களின் பொருளாதார, கலாசார கூறுகளையும் இல்லாதொழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? இது பற்றிய கவலையற்ற மகிழ்ச்சிகரமான அவர்களது வெளிப்பாடே உயர்பாதுகாப்பு வலயங்களாக தமிழர்களது தாயகப் பகுதிகளை கையகப்படுத்தி வைத்திருப்பதாகும்.
இது தொடர்பாக எத்தனை இலட்சம் மக்கள் தமது அதிருப்திகளையும் வேதனைகளையும் சொல்லிவிட்டார்கள். இவை யாவும் செவிசாய்க்கப்பட்டனவா? மனிதாபிமான ரீதியிலோ அல்லது குறைந்த பட்சம் அவர்களது சட்டத்தின் படியோதானும் தீர்க்கப்பட்டதா?
இப்போது வலிகாமம் வடக்குப் பகுதியில் தமிழ் மக்கள் தம்மை மீளக்குடியே அனுமதிக்கக்கோரி தொடுத்த வழக்கிற்கு கூட வலிந்து திணிக்கப்பட்ட பாதுகாப்பை காரணம் காட்டி சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
மனங்கள் திறந்தால் திறக்கக்கூடிய வழிகளையே திறக்க மறுக்கும் இந்த ஆட்சியாளர்கள், இயற்கையை வெல்லமுடியாது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
அது அப்பட்டமான இனவாத அரசியல் வியாபாரமாக இல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

