02-22-2005, 01:36 PM
இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பு செல்ல விருப்பம் சிறீலங்கா அரசு மறுப்பு
நிகழ்ச்சிநிரலை தயாரிப்பதில் இழுபறி
21 02 2005
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் சுனாமி பேரனர்த்த பகுதிகளை பார்வையிடுவதற்காக இம்மாத இறுதியில் 28ஆம் திகதி இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பயண நிகழ்ச்சிநிரலை தயாரிப்பதில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுனாமியில் கூடுதலாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள இளவரசர் சார்ள்ஸ் விரும்புகின்றார். ஆனால் அதனை சிறீலங்கா அரசு விரும்பாததுடன் அதுதொடர்பாக அதிர்ச்சியும் தெரிவித்திருக்கின்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்புக்கு இளவரசர் சார்ள்ஸ் செல்ல விரும்புவதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்த போது அதற்கு பதிலாக திருகோணமலைக்கு செல்லலாம் என்று வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்துக்கு சென்று பார்வையிட்டிருந்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள் மட்டக்களப்பிலேயே கூடுதல் பாதிப்பு என்பதால் அங்கு செல்ல இளவரசர் சார்ள்ஸ் விரும்புகின்றார் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்பார்ப்பதாக கூறி சரியான பதிலை அளிக்காது வெளிவிவகார அமைச்சு இழுத்தடித்து வருகின்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து வரும் அரசு தலைவர்களை சிறீலங்கா அரசு கொழும்பில் வரவழைத்து பின்னர் தெறிகில் மாத்தறை உள்ளிட்ட சிங்கள பகுதிகளை காட்டிவிட்டு திருப்பி அனுப்பி வருகின்றது. வடக்கு கிழக்குக்கு பாகுபாடு காட்டவில்லை என்றும் அங்கும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்கான பொருட்களை உரிய அளவில் அனுப்புவதாகவும் வெளிநாடுகளுக்கு பிரச்சாரம் செய்யும் சிறீலங்கா அரசு அந்த பகுதிகளுக்கு வெளிநாட்டு தலைவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டிருக்கின்றது என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதாக ஓர் அறிவிப்பு வெளிவந்து பின்னர் அந்த விஜயம் நடைபெறவில்லை. அவர்களது விஜயத்துக்கு பதிலாக அன்று பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு செல்வார் என்று மற்றொரு அறிவிப்பு வந்திருந்தும் அந்த விஜயமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Cheithikkovai
நிகழ்ச்சிநிரலை தயாரிப்பதில் இழுபறி
21 02 2005
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் சுனாமி பேரனர்த்த பகுதிகளை பார்வையிடுவதற்காக இம்மாத இறுதியில் 28ஆம் திகதி இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பயண நிகழ்ச்சிநிரலை தயாரிப்பதில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுனாமியில் கூடுதலாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள இளவரசர் சார்ள்ஸ் விரும்புகின்றார். ஆனால் அதனை சிறீலங்கா அரசு விரும்பாததுடன் அதுதொடர்பாக அதிர்ச்சியும் தெரிவித்திருக்கின்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்புக்கு இளவரசர் சார்ள்ஸ் செல்ல விரும்புவதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்த போது அதற்கு பதிலாக திருகோணமலைக்கு செல்லலாம் என்று வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்துக்கு சென்று பார்வையிட்டிருந்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள் மட்டக்களப்பிலேயே கூடுதல் பாதிப்பு என்பதால் அங்கு செல்ல இளவரசர் சார்ள்ஸ் விரும்புகின்றார் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்பார்ப்பதாக கூறி சரியான பதிலை அளிக்காது வெளிவிவகார அமைச்சு இழுத்தடித்து வருகின்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து வரும் அரசு தலைவர்களை சிறீலங்கா அரசு கொழும்பில் வரவழைத்து பின்னர் தெறிகில் மாத்தறை உள்ளிட்ட சிங்கள பகுதிகளை காட்டிவிட்டு திருப்பி அனுப்பி வருகின்றது. வடக்கு கிழக்குக்கு பாகுபாடு காட்டவில்லை என்றும் அங்கும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்கான பொருட்களை உரிய அளவில் அனுப்புவதாகவும் வெளிநாடுகளுக்கு பிரச்சாரம் செய்யும் சிறீலங்கா அரசு அந்த பகுதிகளுக்கு வெளிநாட்டு தலைவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டிருக்கின்றது என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதாக ஓர் அறிவிப்பு வெளிவந்து பின்னர் அந்த விஜயம் நடைபெறவில்லை. அவர்களது விஜயத்துக்கு பதிலாக அன்று பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு செல்வார் என்று மற்றொரு அறிவிப்பு வந்திருந்தும் அந்த விஜயமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Cheithikkovai
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

