02-22-2005, 01:18 AM
புலத்தில் சிறுவர்மரணங்கள் அதிகமாக நடப்பதனை அவதானிக்கலாம் குழந்தை பிறந்த சில நாட்களிலோ அல்லது 3 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளே இதில் அடங்குகின்றனர் காரணங்களை ஆராய்ந்தால் சிறிய பிரச்சனைகளாகதான் இருக்கும் இங்கு குழந்தை பிறந்ததும் இறந்தால் வைத்தியர்கள் குழந்தை கருவில் சரியாக வளரவில்லை குறைபாட்டுடன் வளர்ந்துள்ளது இறந்து விட்டது என்று சாதாரணமாக கூறிவடுவார்கள் எம்மவரும் அதை கேட்டு விட்டு சிலநாட்கள் அழுது போட்டு பின்னர் தங்கள் வேலையை பார்க்க போய் விடுவார்கள். எங்கே என்ன பிரச்சனை என ஆராய்வதோ அல்லது அதற்கான சட்ட நடவடீக்கை எடுக்க முன்வருவதோ இல்லை. காரணம் என்னவெனறால் தாய் தந்தையரிற்கு போதிய மொழியறிவு இல்லையென்பதே உதாரணமாக ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் இருப்பவர்களை தவிர மற்றைய நாடுகளில் இருப்பவர்களே இந்த பிரச்சனைக்கு அதிகம் முகம் கொடுக்கின்றனர்.கர்பிணி தாய் 3 மாதங்களின் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சம்பந்தபட்ட விசேட வைத்தியரிடம் ஆலோசனையும் பரிசோதனையும் செய்தல் அவசியம் அவரிற்கோ கணவரிற்கோ மொழி தெரியாவிட்டால் வெட்கம்காரணமாக கர்ப்பம் சம்பந்த பட்ட விடயங்களில் வேறு மொழி தெரிந்த ஒருவரின் உதவியை நாடுவதும் இல்லை வைத்தியர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி விட்டு அவர் என்ன ஆலோசனை சொன்னார் என்பது தெரியாமல் போவதும் குழந்தை அல்லது கருவிலிருக்கும் சிசு மரணத்திற்கு காரணமாகிறது.மற்றையது சிறுவர்களிற்கு சாதாரணமாக வருகின்ற அலர்ச்சி வருத்தங்களிற்கும் மற்ற வருத்தங்களிற்கும்வைத்தியர்களின் ஆலோசனையை நாடுவதோ அல்லது அவர்களின் ஆலோசனைi சரிவர கடைப்பிடிக்காமல் எல்லா வருத்தத்திற்கும் பெரியவர்களை போல விக்ஸ் தடவி விட்டு பின்னர் வருத்தம் முற்றிஏதாவது ஆனபின்னர் அழுது புலம்புலதில் எந்த பிரயோசனமும் இல்லை எப்பொழுதும் குழந்தைகள விடயத்தில் வைத்தியரை நாடும்போது அவர்களிற்கு மொழி பிரச்சனையானால் நன்றாக மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் நாடுவது நல்லது
; ;

