02-19-2005, 11:40 AM
நக்மாவை தொடர்ந்து மேலும் நடிகைகள் சிக்குகிறார்கள்: தீவிரவாதியுடன் இருக்கும் போட்டோ சேகரிப்பு
மும்பை, பிப். 19-
தீவிரவாதிகளுடன் நக்மா வுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு பட உலகம் நக்மாவை மிரட்சியுடன் பார்க்கிறது.
மும்பை குண்டு வெடிப் பின் பிரதான மூளையாக செயல்பட்டவன் தாதா தாவூத் இப்ராகிம். பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவன் தம்பி அனீஸ்வுடன் நக்மாவுக்கு தொடர்பு இருந்தது என்று தாவூத்தின் கையாள் ஒருவனே வாக்கு மூலம் கொடுத்து இருப்பதால் அந்த குற்றச்சாட்டை புறக்கணிப்பதற்கு இல்லை என்று போலீஸ் கருதுகிறது.
தாவூத்இப்ராகிம் உலக கிரிமினல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்படுகிறான். இவன் கூட்டாளி ஜம்போ எனப்படும் ஜமீருத் தீன் அன்சாரி கடந்த வருடம்தான் போலீசாரிடம் மாட்டினான்.
பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் அங்கு ஒரு குட்கா கம்பெனி ஆரம்பிக்க திட்டமிட்டதாகவும் அதற்கு தேவையான தயாரிப்பு உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்து துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல அவன் திட்டமிட்டதாகவும் அதற்கு உதவும்போதுதான் ஜம்போ சிக்கினான் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஜம்போ மீது மேலும் பல வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்குகள் தொடர்பாக மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவன் ஆஜர்படுத்தப்பட்டபோது அளித்த வாக்கு மூலம்தான் நக்மாவை சிக்கலில் மாட்டி விட்டது.
தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம் துபாயில் இருக்கிறான். அவனுக்கும் நக்மாவுக்கும் தொடர்பு உண்டு. அனீஸ் ஹவாலா முறையில் அனுப் பிய 10 லட்சம் ரூபாயை மும்பை குட்கா கம்பெனி அதி பர்கள் மூலம் பெற்று பாந்தரா பகுதியில் உள்ள பிளாட்டில் வசிக்கும் நக்மாவிடம் நானே நேரில் சென்று கொடுத்தேன் என்று ஜம்போ வாக்குமூலத்தில் கூறி உள்ளான்.
பெங்காலி மற்றும் போஜ்புரி படங்களில் நடிக்க துவங்கி உள்ள நக்மாவுக்கு இந்தவாக்குமூலம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தனக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று நக்மா மறுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஜம்போ வாக்குமூலத்தில் நக்மா பற்றி வெளிவராத மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷார்ஜா கிரிக்கெட் போட்டி நடந்தபோது தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமாக அமர்ந்து சில மும்பை நடிகைகள் கிரிக்கெட் பார்த்துள்ளனர். எந்தெந்த நடிகைகள் அவனுடன் இருந்தார்கள் என்பது பற்றிய போட்டோக்களை சி.பி.ஐ. சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் மற்றும் பாகிஸ் தானுக்கு டெலிபோனில் பேசிய சினிமா புள்ளிகளின் டெலிபோன் பேச்சு பதிவுகளும் சேகரிக்கப்படுகிறது.
நக்மா விவகாரம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதை பெரிதுப்படுத்த வரிந்து கட்டுகின்றன.
எனவே நக்மா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.
Maalaimalar
மும்பை, பிப். 19-
தீவிரவாதிகளுடன் நக்மா வுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு பட உலகம் நக்மாவை மிரட்சியுடன் பார்க்கிறது.
மும்பை குண்டு வெடிப் பின் பிரதான மூளையாக செயல்பட்டவன் தாதா தாவூத் இப்ராகிம். பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவன் தம்பி அனீஸ்வுடன் நக்மாவுக்கு தொடர்பு இருந்தது என்று தாவூத்தின் கையாள் ஒருவனே வாக்கு மூலம் கொடுத்து இருப்பதால் அந்த குற்றச்சாட்டை புறக்கணிப்பதற்கு இல்லை என்று போலீஸ் கருதுகிறது.
தாவூத்இப்ராகிம் உலக கிரிமினல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்படுகிறான். இவன் கூட்டாளி ஜம்போ எனப்படும் ஜமீருத் தீன் அன்சாரி கடந்த வருடம்தான் போலீசாரிடம் மாட்டினான்.
பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் அங்கு ஒரு குட்கா கம்பெனி ஆரம்பிக்க திட்டமிட்டதாகவும் அதற்கு தேவையான தயாரிப்பு உதிரிபாகங்களை இந்தியாவில் இருந்து துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல அவன் திட்டமிட்டதாகவும் அதற்கு உதவும்போதுதான் ஜம்போ சிக்கினான் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஜம்போ மீது மேலும் பல வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்குகள் தொடர்பாக மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவன் ஆஜர்படுத்தப்பட்டபோது அளித்த வாக்கு மூலம்தான் நக்மாவை சிக்கலில் மாட்டி விட்டது.
தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம் துபாயில் இருக்கிறான். அவனுக்கும் நக்மாவுக்கும் தொடர்பு உண்டு. அனீஸ் ஹவாலா முறையில் அனுப் பிய 10 லட்சம் ரூபாயை மும்பை குட்கா கம்பெனி அதி பர்கள் மூலம் பெற்று பாந்தரா பகுதியில் உள்ள பிளாட்டில் வசிக்கும் நக்மாவிடம் நானே நேரில் சென்று கொடுத்தேன் என்று ஜம்போ வாக்குமூலத்தில் கூறி உள்ளான்.
பெங்காலி மற்றும் போஜ்புரி படங்களில் நடிக்க துவங்கி உள்ள நக்மாவுக்கு இந்தவாக்குமூலம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தனக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று நக்மா மறுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஜம்போ வாக்குமூலத்தில் நக்மா பற்றி வெளிவராத மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷார்ஜா கிரிக்கெட் போட்டி நடந்தபோது தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமாக அமர்ந்து சில மும்பை நடிகைகள் கிரிக்கெட் பார்த்துள்ளனர். எந்தெந்த நடிகைகள் அவனுடன் இருந்தார்கள் என்பது பற்றிய போட்டோக்களை சி.பி.ஐ. சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் மற்றும் பாகிஸ் தானுக்கு டெலிபோனில் பேசிய சினிமா புள்ளிகளின் டெலிபோன் பேச்சு பதிவுகளும் சேகரிக்கப்படுகிறது.
நக்மா விவகாரம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இதை பெரிதுப்படுத்த வரிந்து கட்டுகின்றன.
எனவே நக்மா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.
Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

