02-18-2005, 11:09 PM
காதல் + கல்யாணம் - உறவு = ?
எனது காதல் குறித்த கடந்த பதிவு, படம் பார்த்த மறுதினம் அவசரத்தில் எழுதப்பட்டது. மூன்று நாட்கள் முன்பு தற்போக்கு சிந்தனையில் ஏதோ பொறிதட்ட, படத்தை இறக்கி, கவனமாய் கடைசி சில காட்சிகளை பார்த்த பிறகு, நான் எழுதியதில் உள்ள ஒரு தவறு தெரிந்தது. (இதற்கு முன் முதல் பாதி படத்தை ஒரு பத்து முறையாவது இறக்கி பாத்திருபேன். ) அது குறித்து பேசும் முன், இப்போதும் காதலை முன்வைத்து இப்படி ஒரு படம் வருவதை, ஹிட்டாவதை ஆரோக்கியமானதாகவும், கலையம்சம் என்பதாக படம் குறித்து சொன்னவைகளையும் மீண்டும் வலியுறுத்தி கொள்கிறேன்.
கடந்த பதிவு படம் குறித்த விமர்சனமாக எழுதப்படவில்லை. படம் குறித்து பலர் நல்லவிதமாய் எழுதியுள்ளதை பொதுவாய் ஒப்புகொண்டு எழுதப்பட்டது. படம் காதல் குறித்தது எனினும், கதை காதலோடு கல்யாணம் என்ற சமூக கருத்தாக்கத்தையும் யதார்த்தமாய் தொட்டுசெல்கிறது. இதற்கு மாறாக உறவு, அதாவது பாலியல் உறவு என்பது குறித்து படக்கதை யதார்தத்திற்கு முரணாக மௌனம் சாதிக்கிறது.
எண்ணிக்கையில் அடக்கவியலாத வகைகளில் பேசப்பட்டும், இன்னும் இந்த காதல் என்பது குறித்து குண்ட்ஸாக கூட வரையருக்க முடிவதில்லை. திருமணமும், பாலியல் உறவும் மிக தெளிவான வார்த்தைகளில் விளக்க கூடியவை, வரையரைக்குள் அடங்க கூடியவை. அதற்கு பின் எந்த கற்பித தன்மையும் இல்லை. இவை இரண்டுடன் மிக நெருங்கிய தொடர்புடையதெனினும், இவற்றின் அடிப்படையில் மட்டும் காதல் என்ற ரொமாண்டிக் கற்பிதத்தை விளக்க இயலவில்லை. குறைந்த படசம் விளக்க நமக்கு விருப்பமில்லை. இது குறித்து விவாதிப்பதல்ல இப்போதய நோக்கம்.
கடந்த பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.
"'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!"
படம், நம்ம கதாநாயகி/நாயகன் ஓடிவந்து சென்னையில் வீடு தேடும் காட்சிகளில், சமூகத்தில் கல்யாணம் என்ற கருத்தாக்கத்திற்கு வைத்திருக்கும் அதீதமான மரியாதையை காட்சிபடுத்துகிறது. ஆனால் அதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே தூக்கிபிடிக்கிறது. வீட்டை விட்டு ஒடி வந்து இன்னும் பெண் கழுத்தில் தாலி ஏறாத நிலையில், வாடகைக்கு வீடு கிடைப்பது மட்டுமல்ல பிரச்சனை. காதலர்களாய் இருக்கும்வரை மேன்ஷன் வாலிபர்கள் 'ஃபிகரை தள்ளி கொண்டு வந்ததாய்' பார்கிறார்கள். துப்பறிய முயலுகிறார்கள். கல்யாணம் என்ற ஓற்றை நிகழ்வு அவர்கள் பார்வையை தலை கீழாக்குகிறது. அதுவரை 'சான்ஸ் கிடைக்குமா' என்று நாக்கை தொங்க போட்டு ஆர்வம் காட்டுபவர்கள், ஒரு மஞ்சள் தாலி தெருவோர குட்டி கோவிலில் கட்டப்பட்ட உடன் 'ஸிஸ்டராக' பார்கின்றனர். இன்றைய திரைப்படங்களில் தாலியை தூக்கிகாட்டி கதாநாயகியை வசனம் பேச வைக்காவிட்டாலும், தாலி மகிமை இப்படி வேறு வகைகளில் பேசப்படுகிறது.
இதை படத்தின் மீதான விமர்சனமாக இதை சொல்லவில்லை. சமுதாய மதிப்பீடுகளை -அதுவும் பார்வையாளருக்கு பிரச்சனை உண்டு பண்ணாத உவப்பான மதிப்பீடுகளை - சற்று மிகைபடுத்தி, பார்வையாளரை நெகிழ வைப்பதாக, ஒரு வெகுஜன சினிமா பொதுவாய் செய்ய கூடியதுதான் இங்கே படமாகியிருக்கிறது.
என் நண்பர்கள் இருவர் (அதாவது கணவன் மனைவி அல்லது துணைவன் துணைவி) பதிவு திருமணம் செய்தவர்கள். ஆனால் (ஏதோ கொள்கை பிடிப்பாய்) தாலி கட்டி கொள்ளவில்லை. சென்னையில் 'டீஸன்டாய்' வீடு கிடைக்க அவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நேரடியாக 'கல்யாணம் ஆச்சுங்கறீங்க, தாலியில்லையே!' என்று கேட்பார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனை - இதை ஒரு பிரச்சனையாய் காண்பிக்காமல், தாலி ஏறியவுடன் மற்றவர்கள் காட்டும் பாசத்தை நெகிழவைப்பதாக கட்டமைத்து காட்டியிருப்பினும் - யதார்தத்துடன் காட்டபட்டுள்ளது. ஆனால் யதார்தத்திற்கு முரணாக கல்யாணம் ஆனவுடன் இயல்பாகவும் மரபாகவும் இறங்கவேண்டிய காரியம் குறித்து மட்டும் மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனம் தற்செயலானதாக தெரியவில்லை.
படத்தில் என்ன நடக்கிறது? முந்தய நாள் தாலி ஏறாத காரணத்தால் தங்க வீடு கிடைக்கவில்லை. இரவை தியேட்டரிலும், பஸ் பயணத்திலும் செலவழித்துவிட்டு, மறுநாள் காலை தோழன் ஏற்பாடு செய்த பணத்தில் பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்துகொண்டு, நடுரோட்டில் ஒரு கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டிகொண்டு, அதை ஒரு மேன்ஸன் மேட் பார்த்து, மேன்ஸனில் எல்லோரும் பணம் பிரித்து, 'ரிசப்ஷனுக்கு' ஏற்பாடு செய்து, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, புதுவீட்டில் எவர்சில்வர் பாத்திரங்கள் ஜமுக்காளம் சகிதமாய் பால் காய்ச்சி குடியேறி . . . . . . இத்தனைக்கு பிறகு என்னய்யா நடக்கும்? இயல்பாக இருந்தாலும் சரி, அல்லது மரபு கலாச்சார ரீதியாகவும், வழக்கமான சினிமாத்தனமாக கூட என்ன நடக்க வேண்டும்? சாந்தி முகூர்த்தம் முதலிரவு என்று பல வார்த்தைகளால் அழைக்கபடும் ஜல்சாதானே!
இங்கேதான் அவ்வளவு யதார்த்தமாய் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சித்தரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட படம் பார்வையாளனை டபாய்கிறது. கதாநாயகன் இதற்கு பிறகு ஒரு வொர்க் ஷாப்பில் தனக்கு தெரிந்த மெகானிக் வேலைக்கு ( ஒரு மேன்சன்காரன் சிபாரிசு சொல்லி) போகிறான். அதாவது இரண்டு நாட்களாய் ஓயாத அலைச்சலில் இருப்பவர்களை, அன்றய தினம்தான் திருமணமானவர்களை ஒரு நல்ல சாப்பாடு போட்டு ஒய்வெடுத்து ஜல்ஸாவில் ஈடுபட உதவாமல் மொத்த மேன்சன் கூட்டம் போய்விட, யதார்த்தமாய் மறுநாள் ஏற்பாடு செய்து ஹீரோ போகவேண்டிய வேலைக்கு அன்றே போகிறான். கதாநாயகி வாசலில் குழாயடியில் குடம் நீரை தூக்க முடியாமல் தூக்கி கீழே போட்டு, முருகன் (ஹீரோ பேரு) ஸ்டோர்ஸ் பாத்திரத்தை செல்லமாய் சிணுக்கி சமைக்க தொடங்குகிறாள்.
இதற்கு நடுவில் மதுரையிலிருந்து ஓடிப்போன பெண்ணை தேடி துப்பறிந்து அவர் சித்தப்பா கோஷ்டி அடியாட்களுடன் கிளம்பி சென்னை வருகிறது. நல்ல வார்த்தை நைச்சியம் பேசி காதலர்களை மதுரைக்கு திரும்ப கூட்டி போகிறது. போகிற வழியெல்லாம், மதுரை போய் சேரும்வரையிலும் சேர்ந்த பின்னும் ஒரே வெளிச்சம். அதாவது காட்சிகள் பகலிலே நிகழ்கின்றன. இவ்வளவு துல்லியமாய் யதார்தத்தை காண்பித்த கதை சொல்லல் இடையில் ஒருநாள் இரவை முழுசாய் முழுங்கியிருப்பதை காணலாம்.
இப்படி ஒரு லாஜிக்கல் பிரச்சனையாக பார்க்காவிட்டால் கூட, கதை இயக்குனரின் முழு ஆளுகைக்கு உட்பட்டது. சித்தப்பா ஒரு நாள் தாமதமாய் தேடி வந்திருக்க முடியும். இயல்பாக நடந்திருக்க வேண்டிய முதலிரவு நடந்திருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது இயக்குனருக்கு காதலர்கள் உறவு கொள்வது ஒப்புதலில்லை, குறைந்த பட்சம் அப்படி ஒரு காட்சியமைக்க மனசில்லை என்பதாகவே தெரிகிறது.
எவ்வளவு பெரிய வாய்ப்பை அவர் தவறவிட்டிருக்கிறார்! சேரனும், சரி பாலாஜி சக்திவேலும் சரி, யதார்த்தமாக சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற ஒரு செய்கையை, சினிமாவில் எந்த தற்செயல் தன்மையின்றி மிகவும் சுய நினைவுடன் தணிக்கை செய்திருப்பது குறித்து ரொம்பவே யோசிக்க வேண்டியுள்ளது.
உலகம் முழுமையும் எல்லா சமூகத்திற்கும் தனது இனமானத்தை மதிப்பீடு செய்யும் சமாச்சாரமாக பெண்களின் கற்பு திகழ்ந்து வருகிறது. மேற்கும், மேற்கின் தாக்கத்தில் மற்றவையும் இதில் மாற்றங்கள் கண்டிருப்பினும், நம் சூழலில் இந்த மதிப்பீடு, ஒரு 'வாழ்வா சாவா' கேள்வியாக பிரச்சனைகளை கிளப்பிவருகிறது. தலித்கள் மீதான பல கலவரங்கள்/தாக்குதல்களுக்கு இப்படி ஒரு பிண்ணணி பொதுவாக இருக்கிறது.
சமூகத்தின் மீதான கருத்தியல் வன்முறையில் முதலிடம் வகிக்கும் பார்பனியம் இது குறித்து ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்களை உலகின் எந்த சமூகத்திலும் காணமுடியாது. இன்றைக்கும், திராவிட இயக்கத்தின் 70 ஆண்டுகளுக்கு மேலான பாதிப்பிற்கு பிறகும், தமிழ் சமூகத்தில் 'அய்யர் பொண்ணை தொட்டா விளங்காம' போய்விடும் நம்பிக்கை இருப்பதை கேட்கமுடியும். மனித இனம் சிந்திக்க தொடங்கியபின் உருவாக்கிய பிரதிகளில், மனவக்கிரத்தில் எதனுடனும் ஒப்பிடமுடியாத பிரதியாகிய மனுதர்மம் விலாவாரியாய் இது குறித்து பேசுகிறது. பார்பன பெண்ணை மற்றவர் தொடுவதன் பாவத்தன்மை குறித்து பேசும் போதே, மற்ற சமூகத்து பெண்கள் பார்பனனின் விந்தை 'வாங்கி கொள்ளும்' புண்ணியம் குறித்தும் பேசுகிறது. (கேரளாவில் இன்னும் அந்த வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சுமதி ரூபன் 'மாயா' படம் குறித்து எழுதியதையும், இந்த கருத்தாக்கம் பேசப்படும் இன்னொரு இடமாக 'சம்ஸ்காரா' நாவலையும் பார்கலாம்.) மனுதர்மத்தின் பல சட்டங்கள் பார்பன பெண்களின் இந்த 'நெறி பிறழ்தலை' தடுப்பதை அடிப்படையாய் கொண்டிருப்பதை காணமுடியும். அம்பேத்கார் 'சாதிகளின் தோற்றம்' குறித்த நூலில், சதி போன்ற பழக்கங்கள் கூட இந்த (சாதிகளுக்குள்ளான ) அகவுறவை கட்டிகாப்பதை முன்வைத்தே தோன்றியவையாக தர்க்க ஆதரங்களுடன் நிகழ்த்தி காட்டுகிறார். மனு தர்மத்தை ஏற்று கொள்ளவில்லை என்று சொல்லி, அதற்கு எதிரானதாக ஜெயமோகன் போன்றவர் தூக்கி பிடிக்கும் கீதையிலேயே அர்ஜுனன் போருக்கு எதிரான முக்கிய காரணமாய் இதை கூறுகிறான். அதாவது போரினால் ஏற்படப் போகும் ஆண்களின் இறப்பினால், தன் குலபெண்கள் நெறி தவறி போய் *தர்மத்திற்கு* கேடு வரப் போவதை ஒரு முக்கிய காரணமாய் போர் புரிய மறுப்பதற்கு சொல்கிறான்.
இந்த நம்பிக்கைகளின் பாதிப்பு இன்றும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்கிறது. கலப்பு மணம் ஓரளவு பரவலான பின்னும் கூட, அய்யர் பொண்ணை சைட் அடிக்கவும், ஜொள் விடவும் தயாராயிருந்தும், 'கை வைத்தால்' ஏற்படும் 'பாவம்' குறித்த நம்பிக்கை உயிர்ப்புடன் தொடர்வதை அறியமுடியும். ஆனால் தமிழ் சினிமா இதை உடைத்திருக்கிறது. வேதம் புதிதில் கதாநாயகன் காலி பண்ணபட்டாலும், பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் (எனக்கு தெரிந்து) முதல் முறையாக (கடைசியாகவும்?) இந்த 'புரட்சி' நடக்கிறது. (அரங்கற்றம் படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை இத்தகையதாய் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, அது ஒரு முக்கியமான படம் எனினும்.)
தேவர் என்ற ஜாதி பாலியல்ரீதியாக தலித் பெண்கள் மீது (அதன் பாதிப்பை அந்த சமூகத்தின் மீது) நிகழ்த்தும் வன்முறையை நேரடியாக திருநெல்வேலியில் பார்த்திருக்கிறேன். (90களில் தலித்களின் எதிர் தாக்குதலுக்கு பின் இது இல்லாமலாயிருப்பதாக அல்லது பெருமளவிற்கு குறைந்திருப்பதாகவே அறிகிறேன்.) ஆனால் ஒரு சினிமாவில் தேவர் பெண் தலித்தை காதலிப்பதையும், இறந்த பின் எரிந்துகொண்டிருக்கும் பிணத்தை உடன் கட்டையேறி ஒரு தலித் 'புணர்தல்' சைகைகள் செய்வதாலும், பாரதி கண்ணம்மா திரைப்படம் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் ஓட அனுமதிக்க படவில்லை.
இத்தனைக்கும் பாரதி கண்ணம்மா தேவர் என்ற அடையாளத்தை glorify செய்வதாகவே எடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாய் சொல்ல 'அய்யா தேவரய்யா' என்று கும்பிட்டபடி தலித்தான பார்திபன் பாடும் ஒரு பாட்டும், ஒரு கட்டத்தில் 'எவன் தேவன்?' என்ற கேள்வியை கேட்டு மாற்றி மாற்றி விஜயகுமார் 'தேவனு'க்கான இலக்கணமாய் அடுக்கும் வசனங்களை சொல்லலாம். அந்த வசனங்களை எழுதியவனை செருப்பை கழட்டி அடிக்க தோன்றும். அந்த அளவு ஜாதி பெருமை பேசும் வசனங்கள்!
கிராம யதார்தத்தை செல்லுலாயிடில், ரொமாண்டிஸிஸம் கலந்து, கொண்டு வந்த பாரதிராஜாவின் படங்களில் தேவர் அடையாளம் பெரிதுபடுத்த பட்டிருப்பினும், தேவர் அடையாளத்தை முழுமையாய் கொண்டாடும் விதமாய் தேவர்மகன் படமே முதலில் வெளிவந்தது. கதை தேவர்களின் அடையாளமான 'அறுவாள், வெட்டு குத்து' குறியீடுகளை எதிர்த்து எடுக்க பட்டதாய் காட்டிகொண்டாலும், அப்படி ஒரு நோக்கம் உணமையிலேயே கதைக்கு இருந்தாலும், படம் தேவர்களால் தங்கள் அடையாளமாய் பார்க்கப்பட்டது. தேவர் வீட்டு வைபவங்களில் மீண்டும், மீண்டும் அந்த படம் காட்டப்பட்டது. தேவர் சாதி சங்கத்தவர்கள் கமலை போய் பார்த்தார்கள். சமூகத்தில் தேவர்களின் சாதி பெருமையை, அதன் மூலமாக சாதிவெறியை தூண்டி எரியவிடுவதாகவே இருந்தது. இதன் பிண்ணணியிலேயே கிருஷ்ணசாமியின் 'சண்டியர்' படத்திற்கான எதிர்ப்பை பார்க்கவேண்டும். அதை பிறகு இன்னொரு பதிவில் பார்போம்.
இதற்கு பின் வந்த பாரதிகண்ணம்மா தேவர் மகனின் அணுகுமுறையையே (தேவன் என்ற ஜாதி அடையாளத்தை தூக்கி பிடித்து கொண்டாடிவிட்டு, அவர்களிடம் உள்ள குறையாய் ஜாதிபிரச்சனையை சொல்வதையே) கொண்டிருந்தாலும், தேவர் ஜாதியினரின் பலத்த எதிர்பிற்கு உள்ளனது. இத்தனைக்கும் தலித்களாக சித்தரிக்கபடும் பல பாத்திரங்கள் மிகவும் கேவலபடுத்த பட்டிருக்கும். (உதாரணமாய் பொண்ணை வடிவேலுவிடம் 'செட்டப்' பண்ணிகொள்ள சொல்லும் ஒரு அப்பன்.) இத்தகைய சித்தரிப்புகள் வருடபோக்கில் மாறி வந்திருப்பதை காணமுடியும். 'கில்லி' படத்தில் கூட மதுரைவாழ் வில்லன் பிரகாஷ் ராஜின் ஜாதி நுட்பமாய் குறிக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் 'காதல்' திரைப்படம் (சடங்கு வைபவத்தில் வரும் பாடலின் வரிகள் தவிர்த்து) எங்கேயும் தேவர் அடையாளம் ஜாதி பெருமையாக கொண்டாடப் படாமல், அதற்கு மாறாக ஜாதி வெறியாக எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. மிக குறைவான காட்சிகளிலானாலும் தீவிரமான முறையில் சித்தரிக்க பட்டிருக்கிறது. கடைசி காட்சியில் 'அவளை வெட்டுரா, ராஜேந்திரா!' என்று கத்தும் அப்பத்தா, கதநாயகியை கூடி அடிக்கும் பெண்கள்! ஆண்களை விட பெண்களிடம் ஜாதிவெறி வெளிப்படும்போதே அதன் நோய்கூறு தன்மையை விளங்கிகொள்ள முடியும். கதாநாயகியை உறவுக்கார பெண்கள் கூடி அடிக்கும் அந்த காட்சி மிகுந்த அர்த்தமுள்ளதாகும்.
இத்தனை இருந்தும் ஒரு இயல்பாய் நடந்திருக்க வேண்டிய ஒரு முதலிரவை வலிந்து தடுத்தன் மூலம் பாலாஜி சக்திவேல் ஒரு பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறார். படத்தில் ஜாதி பிரச்சனை சாமர்த்தியமாக பேசபடுகிறது. ஒரு முதலிரவு காட்சியை புகுத்துவதன் மூலம் எந்த பிரச்சனையும் இயக்குனருக்கு வர வாய்பில்லை. 'கட்டாயத்தின் பேரில்' புகுத்தப் படும் கிளர்ச்சி பாடலான 'கிறு கிறு கிறு வென ..' என்ற பாடலை ஒரு முதலிரவு பிண்ணணியில் படமாக்கியிருக்க முடியும். மேன்சனில் தனித்திருக்கும் போது இடை புகுவதை விட, ஒரு முதலிரவு காட்சியாய் அது பொருத்தமாக வந்திருக்கும். ஆனால் இயக்குனருக்கு அதை செய்ய மனம் வரவில்லை. இதற்கு பின்னுள்ள தனிப்பட்ட மற்றும் உளவியல் காரணங்கள் மிகவும் ஆராயபட வேண்டும்.
பெண்களை உறவு கொள்வதை முன்வைத்து ஒரு சமூக பிரச்சனையை அணுகுவது குறித்து கேள்விகள் சிலருக்கு இருக்க கூடும். ரவி ஸ்ரீனிவாஸ் திண்ணையில் அப்படி ஒரு கேள்வியை ('காடு' நாவல் குறித்து) முன்வைத்து, அது சுத்தமாய் திரிக்கப்பட்டு வேறு திசையில் போய்விட்டது. அப்படி பட்ட கேள்விகளை கைவசம் வைத்துகொண்டிருக்க வேண்டும். அதை கேட்டுபார்த்து பார்வை எந்த திசையில் போகிறது என்று விழிப்புடன் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கே பேசியிருப்பது ஒரு யதார்த்தம் எவ்வாறு திரிக்க படுகிறது, திரிக்க படுவதன் பிண்ணணியில் என்ன கருத்தாக்கங்கள், மதிப்பீடுகள் இருக்கின்றன என்பதும், அத்தகைய மதிப்பீடுகள் மீறப்படுவதன் அரசியல் குறித்தும்.
இப்போதய நிலமை இதுதான். 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. காதல் படத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் யதார்த்தமாய் உறவு கொள்ள இயக்குனரால் அனுமதிக்க படுவதில்லை. மாறாக யதார்த்தமாய் அந்த தலித் அடித்து பைத்தியமாக்க படுகிறான்.
காதல் படத்தை இப்போழுதும் தமிழின் குறிப்பிட தகுந்த படங்களில் ஒன்றாக நினைத்தாலும், அதற்கு தொடர்ந்து கொண்டிருக்கும் பாராட்டுகள் கொஞ்சம் ஓவராய் தெரிகிறது. அதனால் பிரச்சனை எதுவும் பெரிதாய் வரப் போவதில்லை. இந்த படத்தினால் ட்ரண்ட் அமைந்து எடுக்கபட போகும் எதிர்கால படங்களில் என்ன வருகிறது என்று பார்போம்.
நன்றி....http://rozavasanth.blogspot.com
எனது காதல் குறித்த கடந்த பதிவு, படம் பார்த்த மறுதினம் அவசரத்தில் எழுதப்பட்டது. மூன்று நாட்கள் முன்பு தற்போக்கு சிந்தனையில் ஏதோ பொறிதட்ட, படத்தை இறக்கி, கவனமாய் கடைசி சில காட்சிகளை பார்த்த பிறகு, நான் எழுதியதில் உள்ள ஒரு தவறு தெரிந்தது. (இதற்கு முன் முதல் பாதி படத்தை ஒரு பத்து முறையாவது இறக்கி பாத்திருபேன். ) அது குறித்து பேசும் முன், இப்போதும் காதலை முன்வைத்து இப்படி ஒரு படம் வருவதை, ஹிட்டாவதை ஆரோக்கியமானதாகவும், கலையம்சம் என்பதாக படம் குறித்து சொன்னவைகளையும் மீண்டும் வலியுறுத்தி கொள்கிறேன்.
கடந்த பதிவு படம் குறித்த விமர்சனமாக எழுதப்படவில்லை. படம் குறித்து பலர் நல்லவிதமாய் எழுதியுள்ளதை பொதுவாய் ஒப்புகொண்டு எழுதப்பட்டது. படம் காதல் குறித்தது எனினும், கதை காதலோடு கல்யாணம் என்ற சமூக கருத்தாக்கத்தையும் யதார்த்தமாய் தொட்டுசெல்கிறது. இதற்கு மாறாக உறவு, அதாவது பாலியல் உறவு என்பது குறித்து படக்கதை யதார்தத்திற்கு முரணாக மௌனம் சாதிக்கிறது.
எண்ணிக்கையில் அடக்கவியலாத வகைகளில் பேசப்பட்டும், இன்னும் இந்த காதல் என்பது குறித்து குண்ட்ஸாக கூட வரையருக்க முடிவதில்லை. திருமணமும், பாலியல் உறவும் மிக தெளிவான வார்த்தைகளில் விளக்க கூடியவை, வரையரைக்குள் அடங்க கூடியவை. அதற்கு பின் எந்த கற்பித தன்மையும் இல்லை. இவை இரண்டுடன் மிக நெருங்கிய தொடர்புடையதெனினும், இவற்றின் அடிப்படையில் மட்டும் காதல் என்ற ரொமாண்டிக் கற்பிதத்தை விளக்க இயலவில்லை. குறைந்த படசம் விளக்க நமக்கு விருப்பமில்லை. இது குறித்து விவாதிப்பதல்ல இப்போதய நோக்கம்.
கடந்த பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.
"'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!"
படம், நம்ம கதாநாயகி/நாயகன் ஓடிவந்து சென்னையில் வீடு தேடும் காட்சிகளில், சமூகத்தில் கல்யாணம் என்ற கருத்தாக்கத்திற்கு வைத்திருக்கும் அதீதமான மரியாதையை காட்சிபடுத்துகிறது. ஆனால் அதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே தூக்கிபிடிக்கிறது. வீட்டை விட்டு ஒடி வந்து இன்னும் பெண் கழுத்தில் தாலி ஏறாத நிலையில், வாடகைக்கு வீடு கிடைப்பது மட்டுமல்ல பிரச்சனை. காதலர்களாய் இருக்கும்வரை மேன்ஷன் வாலிபர்கள் 'ஃபிகரை தள்ளி கொண்டு வந்ததாய்' பார்கிறார்கள். துப்பறிய முயலுகிறார்கள். கல்யாணம் என்ற ஓற்றை நிகழ்வு அவர்கள் பார்வையை தலை கீழாக்குகிறது. அதுவரை 'சான்ஸ் கிடைக்குமா' என்று நாக்கை தொங்க போட்டு ஆர்வம் காட்டுபவர்கள், ஒரு மஞ்சள் தாலி தெருவோர குட்டி கோவிலில் கட்டப்பட்ட உடன் 'ஸிஸ்டராக' பார்கின்றனர். இன்றைய திரைப்படங்களில் தாலியை தூக்கிகாட்டி கதாநாயகியை வசனம் பேச வைக்காவிட்டாலும், தாலி மகிமை இப்படி வேறு வகைகளில் பேசப்படுகிறது.
இதை படத்தின் மீதான விமர்சனமாக இதை சொல்லவில்லை. சமுதாய மதிப்பீடுகளை -அதுவும் பார்வையாளருக்கு பிரச்சனை உண்டு பண்ணாத உவப்பான மதிப்பீடுகளை - சற்று மிகைபடுத்தி, பார்வையாளரை நெகிழ வைப்பதாக, ஒரு வெகுஜன சினிமா பொதுவாய் செய்ய கூடியதுதான் இங்கே படமாகியிருக்கிறது.
என் நண்பர்கள் இருவர் (அதாவது கணவன் மனைவி அல்லது துணைவன் துணைவி) பதிவு திருமணம் செய்தவர்கள். ஆனால் (ஏதோ கொள்கை பிடிப்பாய்) தாலி கட்டி கொள்ளவில்லை. சென்னையில் 'டீஸன்டாய்' வீடு கிடைக்க அவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நேரடியாக 'கல்யாணம் ஆச்சுங்கறீங்க, தாலியில்லையே!' என்று கேட்பார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனை - இதை ஒரு பிரச்சனையாய் காண்பிக்காமல், தாலி ஏறியவுடன் மற்றவர்கள் காட்டும் பாசத்தை நெகிழவைப்பதாக கட்டமைத்து காட்டியிருப்பினும் - யதார்தத்துடன் காட்டபட்டுள்ளது. ஆனால் யதார்தத்திற்கு முரணாக கல்யாணம் ஆனவுடன் இயல்பாகவும் மரபாகவும் இறங்கவேண்டிய காரியம் குறித்து மட்டும் மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனம் தற்செயலானதாக தெரியவில்லை.
படத்தில் என்ன நடக்கிறது? முந்தய நாள் தாலி ஏறாத காரணத்தால் தங்க வீடு கிடைக்கவில்லை. இரவை தியேட்டரிலும், பஸ் பயணத்திலும் செலவழித்துவிட்டு, மறுநாள் காலை தோழன் ஏற்பாடு செய்த பணத்தில் பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்துகொண்டு, நடுரோட்டில் ஒரு கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டிகொண்டு, அதை ஒரு மேன்ஸன் மேட் பார்த்து, மேன்ஸனில் எல்லோரும் பணம் பிரித்து, 'ரிசப்ஷனுக்கு' ஏற்பாடு செய்து, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, புதுவீட்டில் எவர்சில்வர் பாத்திரங்கள் ஜமுக்காளம் சகிதமாய் பால் காய்ச்சி குடியேறி . . . . . . இத்தனைக்கு பிறகு என்னய்யா நடக்கும்? இயல்பாக இருந்தாலும் சரி, அல்லது மரபு கலாச்சார ரீதியாகவும், வழக்கமான சினிமாத்தனமாக கூட என்ன நடக்க வேண்டும்? சாந்தி முகூர்த்தம் முதலிரவு என்று பல வார்த்தைகளால் அழைக்கபடும் ஜல்சாதானே!
இங்கேதான் அவ்வளவு யதார்த்தமாய் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சித்தரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட படம் பார்வையாளனை டபாய்கிறது. கதாநாயகன் இதற்கு பிறகு ஒரு வொர்க் ஷாப்பில் தனக்கு தெரிந்த மெகானிக் வேலைக்கு ( ஒரு மேன்சன்காரன் சிபாரிசு சொல்லி) போகிறான். அதாவது இரண்டு நாட்களாய் ஓயாத அலைச்சலில் இருப்பவர்களை, அன்றய தினம்தான் திருமணமானவர்களை ஒரு நல்ல சாப்பாடு போட்டு ஒய்வெடுத்து ஜல்ஸாவில் ஈடுபட உதவாமல் மொத்த மேன்சன் கூட்டம் போய்விட, யதார்த்தமாய் மறுநாள் ஏற்பாடு செய்து ஹீரோ போகவேண்டிய வேலைக்கு அன்றே போகிறான். கதாநாயகி வாசலில் குழாயடியில் குடம் நீரை தூக்க முடியாமல் தூக்கி கீழே போட்டு, முருகன் (ஹீரோ பேரு) ஸ்டோர்ஸ் பாத்திரத்தை செல்லமாய் சிணுக்கி சமைக்க தொடங்குகிறாள்.
இதற்கு நடுவில் மதுரையிலிருந்து ஓடிப்போன பெண்ணை தேடி துப்பறிந்து அவர் சித்தப்பா கோஷ்டி அடியாட்களுடன் கிளம்பி சென்னை வருகிறது. நல்ல வார்த்தை நைச்சியம் பேசி காதலர்களை மதுரைக்கு திரும்ப கூட்டி போகிறது. போகிற வழியெல்லாம், மதுரை போய் சேரும்வரையிலும் சேர்ந்த பின்னும் ஒரே வெளிச்சம். அதாவது காட்சிகள் பகலிலே நிகழ்கின்றன. இவ்வளவு துல்லியமாய் யதார்தத்தை காண்பித்த கதை சொல்லல் இடையில் ஒருநாள் இரவை முழுசாய் முழுங்கியிருப்பதை காணலாம்.
இப்படி ஒரு லாஜிக்கல் பிரச்சனையாக பார்க்காவிட்டால் கூட, கதை இயக்குனரின் முழு ஆளுகைக்கு உட்பட்டது. சித்தப்பா ஒரு நாள் தாமதமாய் தேடி வந்திருக்க முடியும். இயல்பாக நடந்திருக்க வேண்டிய முதலிரவு நடந்திருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது இயக்குனருக்கு காதலர்கள் உறவு கொள்வது ஒப்புதலில்லை, குறைந்த பட்சம் அப்படி ஒரு காட்சியமைக்க மனசில்லை என்பதாகவே தெரிகிறது.
எவ்வளவு பெரிய வாய்ப்பை அவர் தவறவிட்டிருக்கிறார்! சேரனும், சரி பாலாஜி சக்திவேலும் சரி, யதார்த்தமாக சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற ஒரு செய்கையை, சினிமாவில் எந்த தற்செயல் தன்மையின்றி மிகவும் சுய நினைவுடன் தணிக்கை செய்திருப்பது குறித்து ரொம்பவே யோசிக்க வேண்டியுள்ளது.
உலகம் முழுமையும் எல்லா சமூகத்திற்கும் தனது இனமானத்தை மதிப்பீடு செய்யும் சமாச்சாரமாக பெண்களின் கற்பு திகழ்ந்து வருகிறது. மேற்கும், மேற்கின் தாக்கத்தில் மற்றவையும் இதில் மாற்றங்கள் கண்டிருப்பினும், நம் சூழலில் இந்த மதிப்பீடு, ஒரு 'வாழ்வா சாவா' கேள்வியாக பிரச்சனைகளை கிளப்பிவருகிறது. தலித்கள் மீதான பல கலவரங்கள்/தாக்குதல்களுக்கு இப்படி ஒரு பிண்ணணி பொதுவாக இருக்கிறது.
சமூகத்தின் மீதான கருத்தியல் வன்முறையில் முதலிடம் வகிக்கும் பார்பனியம் இது குறித்து ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்களை உலகின் எந்த சமூகத்திலும் காணமுடியாது. இன்றைக்கும், திராவிட இயக்கத்தின் 70 ஆண்டுகளுக்கு மேலான பாதிப்பிற்கு பிறகும், தமிழ் சமூகத்தில் 'அய்யர் பொண்ணை தொட்டா விளங்காம' போய்விடும் நம்பிக்கை இருப்பதை கேட்கமுடியும். மனித இனம் சிந்திக்க தொடங்கியபின் உருவாக்கிய பிரதிகளில், மனவக்கிரத்தில் எதனுடனும் ஒப்பிடமுடியாத பிரதியாகிய மனுதர்மம் விலாவாரியாய் இது குறித்து பேசுகிறது. பார்பன பெண்ணை மற்றவர் தொடுவதன் பாவத்தன்மை குறித்து பேசும் போதே, மற்ற சமூகத்து பெண்கள் பார்பனனின் விந்தை 'வாங்கி கொள்ளும்' புண்ணியம் குறித்தும் பேசுகிறது. (கேரளாவில் இன்னும் அந்த வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சுமதி ரூபன் 'மாயா' படம் குறித்து எழுதியதையும், இந்த கருத்தாக்கம் பேசப்படும் இன்னொரு இடமாக 'சம்ஸ்காரா' நாவலையும் பார்கலாம்.) மனுதர்மத்தின் பல சட்டங்கள் பார்பன பெண்களின் இந்த 'நெறி பிறழ்தலை' தடுப்பதை அடிப்படையாய் கொண்டிருப்பதை காணமுடியும். அம்பேத்கார் 'சாதிகளின் தோற்றம்' குறித்த நூலில், சதி போன்ற பழக்கங்கள் கூட இந்த (சாதிகளுக்குள்ளான ) அகவுறவை கட்டிகாப்பதை முன்வைத்தே தோன்றியவையாக தர்க்க ஆதரங்களுடன் நிகழ்த்தி காட்டுகிறார். மனு தர்மத்தை ஏற்று கொள்ளவில்லை என்று சொல்லி, அதற்கு எதிரானதாக ஜெயமோகன் போன்றவர் தூக்கி பிடிக்கும் கீதையிலேயே அர்ஜுனன் போருக்கு எதிரான முக்கிய காரணமாய் இதை கூறுகிறான். அதாவது போரினால் ஏற்படப் போகும் ஆண்களின் இறப்பினால், தன் குலபெண்கள் நெறி தவறி போய் *தர்மத்திற்கு* கேடு வரப் போவதை ஒரு முக்கிய காரணமாய் போர் புரிய மறுப்பதற்கு சொல்கிறான்.
இந்த நம்பிக்கைகளின் பாதிப்பு இன்றும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்கிறது. கலப்பு மணம் ஓரளவு பரவலான பின்னும் கூட, அய்யர் பொண்ணை சைட் அடிக்கவும், ஜொள் விடவும் தயாராயிருந்தும், 'கை வைத்தால்' ஏற்படும் 'பாவம்' குறித்த நம்பிக்கை உயிர்ப்புடன் தொடர்வதை அறியமுடியும். ஆனால் தமிழ் சினிமா இதை உடைத்திருக்கிறது. வேதம் புதிதில் கதாநாயகன் காலி பண்ணபட்டாலும், பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் (எனக்கு தெரிந்து) முதல் முறையாக (கடைசியாகவும்?) இந்த 'புரட்சி' நடக்கிறது. (அரங்கற்றம் படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை இத்தகையதாய் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, அது ஒரு முக்கியமான படம் எனினும்.)
தேவர் என்ற ஜாதி பாலியல்ரீதியாக தலித் பெண்கள் மீது (அதன் பாதிப்பை அந்த சமூகத்தின் மீது) நிகழ்த்தும் வன்முறையை நேரடியாக திருநெல்வேலியில் பார்த்திருக்கிறேன். (90களில் தலித்களின் எதிர் தாக்குதலுக்கு பின் இது இல்லாமலாயிருப்பதாக அல்லது பெருமளவிற்கு குறைந்திருப்பதாகவே அறிகிறேன்.) ஆனால் ஒரு சினிமாவில் தேவர் பெண் தலித்தை காதலிப்பதையும், இறந்த பின் எரிந்துகொண்டிருக்கும் பிணத்தை உடன் கட்டையேறி ஒரு தலித் 'புணர்தல்' சைகைகள் செய்வதாலும், பாரதி கண்ணம்மா திரைப்படம் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் ஓட அனுமதிக்க படவில்லை.
இத்தனைக்கும் பாரதி கண்ணம்மா தேவர் என்ற அடையாளத்தை glorify செய்வதாகவே எடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாய் சொல்ல 'அய்யா தேவரய்யா' என்று கும்பிட்டபடி தலித்தான பார்திபன் பாடும் ஒரு பாட்டும், ஒரு கட்டத்தில் 'எவன் தேவன்?' என்ற கேள்வியை கேட்டு மாற்றி மாற்றி விஜயகுமார் 'தேவனு'க்கான இலக்கணமாய் அடுக்கும் வசனங்களை சொல்லலாம். அந்த வசனங்களை எழுதியவனை செருப்பை கழட்டி அடிக்க தோன்றும். அந்த அளவு ஜாதி பெருமை பேசும் வசனங்கள்!
கிராம யதார்தத்தை செல்லுலாயிடில், ரொமாண்டிஸிஸம் கலந்து, கொண்டு வந்த பாரதிராஜாவின் படங்களில் தேவர் அடையாளம் பெரிதுபடுத்த பட்டிருப்பினும், தேவர் அடையாளத்தை முழுமையாய் கொண்டாடும் விதமாய் தேவர்மகன் படமே முதலில் வெளிவந்தது. கதை தேவர்களின் அடையாளமான 'அறுவாள், வெட்டு குத்து' குறியீடுகளை எதிர்த்து எடுக்க பட்டதாய் காட்டிகொண்டாலும், அப்படி ஒரு நோக்கம் உணமையிலேயே கதைக்கு இருந்தாலும், படம் தேவர்களால் தங்கள் அடையாளமாய் பார்க்கப்பட்டது. தேவர் வீட்டு வைபவங்களில் மீண்டும், மீண்டும் அந்த படம் காட்டப்பட்டது. தேவர் சாதி சங்கத்தவர்கள் கமலை போய் பார்த்தார்கள். சமூகத்தில் தேவர்களின் சாதி பெருமையை, அதன் மூலமாக சாதிவெறியை தூண்டி எரியவிடுவதாகவே இருந்தது. இதன் பிண்ணணியிலேயே கிருஷ்ணசாமியின் 'சண்டியர்' படத்திற்கான எதிர்ப்பை பார்க்கவேண்டும். அதை பிறகு இன்னொரு பதிவில் பார்போம்.
இதற்கு பின் வந்த பாரதிகண்ணம்மா தேவர் மகனின் அணுகுமுறையையே (தேவன் என்ற ஜாதி அடையாளத்தை தூக்கி பிடித்து கொண்டாடிவிட்டு, அவர்களிடம் உள்ள குறையாய் ஜாதிபிரச்சனையை சொல்வதையே) கொண்டிருந்தாலும், தேவர் ஜாதியினரின் பலத்த எதிர்பிற்கு உள்ளனது. இத்தனைக்கும் தலித்களாக சித்தரிக்கபடும் பல பாத்திரங்கள் மிகவும் கேவலபடுத்த பட்டிருக்கும். (உதாரணமாய் பொண்ணை வடிவேலுவிடம் 'செட்டப்' பண்ணிகொள்ள சொல்லும் ஒரு அப்பன்.) இத்தகைய சித்தரிப்புகள் வருடபோக்கில் மாறி வந்திருப்பதை காணமுடியும். 'கில்லி' படத்தில் கூட மதுரைவாழ் வில்லன் பிரகாஷ் ராஜின் ஜாதி நுட்பமாய் குறிக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் 'காதல்' திரைப்படம் (சடங்கு வைபவத்தில் வரும் பாடலின் வரிகள் தவிர்த்து) எங்கேயும் தேவர் அடையாளம் ஜாதி பெருமையாக கொண்டாடப் படாமல், அதற்கு மாறாக ஜாதி வெறியாக எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. மிக குறைவான காட்சிகளிலானாலும் தீவிரமான முறையில் சித்தரிக்க பட்டிருக்கிறது. கடைசி காட்சியில் 'அவளை வெட்டுரா, ராஜேந்திரா!' என்று கத்தும் அப்பத்தா, கதநாயகியை கூடி அடிக்கும் பெண்கள்! ஆண்களை விட பெண்களிடம் ஜாதிவெறி வெளிப்படும்போதே அதன் நோய்கூறு தன்மையை விளங்கிகொள்ள முடியும். கதாநாயகியை உறவுக்கார பெண்கள் கூடி அடிக்கும் அந்த காட்சி மிகுந்த அர்த்தமுள்ளதாகும்.
இத்தனை இருந்தும் ஒரு இயல்பாய் நடந்திருக்க வேண்டிய ஒரு முதலிரவை வலிந்து தடுத்தன் மூலம் பாலாஜி சக்திவேல் ஒரு பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறார். படத்தில் ஜாதி பிரச்சனை சாமர்த்தியமாக பேசபடுகிறது. ஒரு முதலிரவு காட்சியை புகுத்துவதன் மூலம் எந்த பிரச்சனையும் இயக்குனருக்கு வர வாய்பில்லை. 'கட்டாயத்தின் பேரில்' புகுத்தப் படும் கிளர்ச்சி பாடலான 'கிறு கிறு கிறு வென ..' என்ற பாடலை ஒரு முதலிரவு பிண்ணணியில் படமாக்கியிருக்க முடியும். மேன்சனில் தனித்திருக்கும் போது இடை புகுவதை விட, ஒரு முதலிரவு காட்சியாய் அது பொருத்தமாக வந்திருக்கும். ஆனால் இயக்குனருக்கு அதை செய்ய மனம் வரவில்லை. இதற்கு பின்னுள்ள தனிப்பட்ட மற்றும் உளவியல் காரணங்கள் மிகவும் ஆராயபட வேண்டும்.
பெண்களை உறவு கொள்வதை முன்வைத்து ஒரு சமூக பிரச்சனையை அணுகுவது குறித்து கேள்விகள் சிலருக்கு இருக்க கூடும். ரவி ஸ்ரீனிவாஸ் திண்ணையில் அப்படி ஒரு கேள்வியை ('காடு' நாவல் குறித்து) முன்வைத்து, அது சுத்தமாய் திரிக்கப்பட்டு வேறு திசையில் போய்விட்டது. அப்படி பட்ட கேள்விகளை கைவசம் வைத்துகொண்டிருக்க வேண்டும். அதை கேட்டுபார்த்து பார்வை எந்த திசையில் போகிறது என்று விழிப்புடன் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கே பேசியிருப்பது ஒரு யதார்த்தம் எவ்வாறு திரிக்க படுகிறது, திரிக்க படுவதன் பிண்ணணியில் என்ன கருத்தாக்கங்கள், மதிப்பீடுகள் இருக்கின்றன என்பதும், அத்தகைய மதிப்பீடுகள் மீறப்படுவதன் அரசியல் குறித்தும்.
இப்போதய நிலமை இதுதான். 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. காதல் படத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் யதார்த்தமாய் உறவு கொள்ள இயக்குனரால் அனுமதிக்க படுவதில்லை. மாறாக யதார்த்தமாய் அந்த தலித் அடித்து பைத்தியமாக்க படுகிறான்.
காதல் படத்தை இப்போழுதும் தமிழின் குறிப்பிட தகுந்த படங்களில் ஒன்றாக நினைத்தாலும், அதற்கு தொடர்ந்து கொண்டிருக்கும் பாராட்டுகள் கொஞ்சம் ஓவராய் தெரிகிறது. அதனால் பிரச்சனை எதுவும் பெரிதாய் வரப் போவதில்லை. இந்த படத்தினால் ட்ரண்ட் அமைந்து எடுக்கபட போகும் எதிர்கால படங்களில் என்ன வருகிறது என்று பார்போம்.
நன்றி....http://rozavasanth.blogspot.com
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

