08-22-2003, 10:20 PM
Mathivathanan Wrote:[quote=AJeevan]
அன்பின் இளங்கோ மற்றும் மதிவதனனுக்கு ,
என் தாழ்மையான நன்றிகள்.
இந்தியாவுக்கும் எமக்கும் கலாச்சார - மத - இன ஒற்றுமைகள் எத்தனையோ இருக்கின்றன. அதில் ஒன்றை மதிவதனன் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். தமிழுக்கும் மலையாளத்துக்கும் போல் சிங்களத்துக்கும் கன்னடத்துக்கும் இடையே பல வார்த்தை ஒன்றுமைகள் இருக்கின்றன. தமிழ்-சிங்கள மொழிகளில் போர்த்துகல் வார்த்தைகள் பல இடங்களில் கலந்து கிடக்கின்றன.(உம் :- மேசை, கதிரை, அல்மாரி , பொத்தான் . . . . . இப்படித் தொடர்கிறது.)
ஆனால் நாம் வெளி நாடுகளுக்கு வந்து எத்தனை மொழிகளைக் கற்றுவிட்டோம். யோசித்தால் நம்பவே முடியாதது. ஆனால் உண்மை. மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம்.
நன்றி அஜீவன் ஒரு விடயத்தை மட்டும் தொட்டிருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள தொடர்பை.. குறிப்பாக கேரளாவுக்கும் தமிழுக்கும் உள்ள தெடர்புபற்றி எழுதியபோது \"றோ\" என்ற பட்டமும் கிடைத்த து}ற்றல்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.. அதை விடுவோம்.. 87 ஆண்டுவரை அரவணைத்து அப்பன் அம்மா மாமன் மாமி எனக் கொண்டாடியவர்கள் ஏன் தற்போது து}ற்றுகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. ஒருமொழி படிப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் பலமொழி படிப்பதை பாராட்டி சந்தர்ப்பவாதிகளாக செயற்படுவதையும் உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. அதையும் விடுவோம்.. போத்துகேயர் மாத்திரமல்ல ஒல்லாந்தர் ஆங்கிலேயரிடமிருந்தும் பலவற்றை எடுத்தும் கொடுத்தும் உள்ளோம்.. அதனால் எடுத்த சொற்களை தமிழல்ல என நீக்கியவுடன் சரித்திரம் அழிந்துவிடுமா..? புதிய சரித்திரம் எழுதுவதனால் பழைய சரித்திரம் மறைந்துவிடுமா..? நமது ஆதிகால வரலாறுப் புத்தகங்கள் பலவும் பலஇடங்களில் இருக்கின்றன.. அவை எப்போதும் உண்மை வரலாறு என்று வந்து பறைசாற்றிக்கொண்டிருக்கும்.. இந்தியத் தமிழருக்கு ஒருபாடமாக அமையும் என்பது எனது நம்பிக்கை.. நன்றி வணக்கம்.
Truth 'll prevail

