02-17-2005, 06:46 PM
நீ என் கடவுள் அல்ல
நீ எனக்கு கடவுளும் அல்ல!!
நீ அசிங்கமானவன்
நீ இருட்டறையில் வாழும் ஈனப்பிறவி
உன் மீது சதா
அழுகிய பழங்கள்,
புளித்த பால் வாடை
மனிதன் செய்வானா இப்படி?
நான் நிச்சயம் செய்யமாட்டேன்
உன்னை நான் தீண்டமாட்டேன்
என் நினைவிலும்
உனக்கு இந்தக் கதி எனில்
உன் பேர் சொல்லி உன்னைப்போற்றும்
உன் முன் வணங்கும் கடையர்களை
நான் ஏறெடுத்தும் பார்பதில்லை
புரியவில்லை,
இந்தத் தீண்டாமை என்னிடமிருந்து
அவர்களுக்கு உன் மூலமாய்
எப்படி வந்ததென்று?
(தீண்டாமை நிமித்தம் கோவிலில் மறுக்கபட்டவர்களுக்கு சமர்ப்பணம்)
-----------------------------------------------------------------------
ஆயிரம் குழந்தைகள்?!
அவளுக்கு
இன்னும் மணமாகவில்லை!
எப்படி சாத்தியம்!
ஒரே சலசலப்பு!
அந்த கிராமத்து வீட்டிலே!
பெண் பார்க்க வந்தவன்
கிளம்பத் தயாரானான்!
"1000" ஓவியங்களை அவள் நீட்ட
அவன் நெளிந்தான்.
படைப்புகள் கலைஞனுக்கு குழந்தைகள் அன்றோ?
-------------------------------------------------------------------
"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா?
மனசே என் மனசே
எதை நீ தேடுகிறாய்?
சொல்லிவிட்டுத் தேடு!
கரங்கள் உண்டு சேவை செய்ய!
கண்கள் உண்டு கண்டு சொல்ல!
ஒருவேளை...
உணர்வை நீ தேடினால்?!!
நான் என்ன செய்ய?!
அது உன்னில்லிருந்தே பிறக்கிறது!
"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா?
-----------------------------------------------------------------------
Life நட்பு+=வலைப்பூ;
காலை மாலை
ஏன் இரவிலும்
எந்த நேரமும்
சந்திப்போம்
விடியலை தாண்டியும் உரையாடுவோம்
பட்டம் பெற்றோம்
வெவ்வேறு உலகம் ஆனோம்
மின்னஞ்சல் பரிமாற்றம்
எப்போதாவது நடக்கும்.
"How are u?!
I am fine.
How is work going on.
Have a nice day."
இதுவே அதன் சாராம்சம்.
வறண்டு விட்ட உறவானது.
ஜீவனற்ற உயிரானது.
ஆனால் இன்று நட்பு
புத்துயிர் பெற்று
தமிழே ஜீவனாகி
"வலைப்பூ"வாய் பூத்திருக்கிறது!
----------------------------------------------------------------------
விடுதலை வேண்டும்
விடுதலை வேண்டும்
எனக்கு
என்னுள் இருந்துகொண்டு
என்னையே ஆட்டிபடைக்கும்
மனசிடமிருந்து!
நீ எனக்கு கடவுளும் அல்ல!!
நீ அசிங்கமானவன்
நீ இருட்டறையில் வாழும் ஈனப்பிறவி
உன் மீது சதா
அழுகிய பழங்கள்,
புளித்த பால் வாடை
மனிதன் செய்வானா இப்படி?
நான் நிச்சயம் செய்யமாட்டேன்
உன்னை நான் தீண்டமாட்டேன்
என் நினைவிலும்
உனக்கு இந்தக் கதி எனில்
உன் பேர் சொல்லி உன்னைப்போற்றும்
உன் முன் வணங்கும் கடையர்களை
நான் ஏறெடுத்தும் பார்பதில்லை
புரியவில்லை,
இந்தத் தீண்டாமை என்னிடமிருந்து
அவர்களுக்கு உன் மூலமாய்
எப்படி வந்ததென்று?
(தீண்டாமை நிமித்தம் கோவிலில் மறுக்கபட்டவர்களுக்கு சமர்ப்பணம்)
-----------------------------------------------------------------------
ஆயிரம் குழந்தைகள்?!
அவளுக்கு
இன்னும் மணமாகவில்லை!
எப்படி சாத்தியம்!
ஒரே சலசலப்பு!
அந்த கிராமத்து வீட்டிலே!
பெண் பார்க்க வந்தவன்
கிளம்பத் தயாரானான்!
"1000" ஓவியங்களை அவள் நீட்ட
அவன் நெளிந்தான்.
படைப்புகள் கலைஞனுக்கு குழந்தைகள் அன்றோ?
-------------------------------------------------------------------
"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா?
மனசே என் மனசே
எதை நீ தேடுகிறாய்?
சொல்லிவிட்டுத் தேடு!
கரங்கள் உண்டு சேவை செய்ய!
கண்கள் உண்டு கண்டு சொல்ல!
ஒருவேளை...
உணர்வை நீ தேடினால்?!!
நான் என்ன செய்ய?!
அது உன்னில்லிருந்தே பிறக்கிறது!
"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா?
-----------------------------------------------------------------------
Life நட்பு+=வலைப்பூ;
காலை மாலை
ஏன் இரவிலும்
எந்த நேரமும்
சந்திப்போம்
விடியலை தாண்டியும் உரையாடுவோம்
பட்டம் பெற்றோம்
வெவ்வேறு உலகம் ஆனோம்
மின்னஞ்சல் பரிமாற்றம்
எப்போதாவது நடக்கும்.
"How are u?!
I am fine.
How is work going on.
Have a nice day."
இதுவே அதன் சாராம்சம்.
வறண்டு விட்ட உறவானது.
ஜீவனற்ற உயிரானது.
ஆனால் இன்று நட்பு
புத்துயிர் பெற்று
தமிழே ஜீவனாகி
"வலைப்பூ"வாய் பூத்திருக்கிறது!
----------------------------------------------------------------------
விடுதலை வேண்டும்
விடுதலை வேண்டும்
எனக்கு
என்னுள் இருந்துகொண்டு
என்னையே ஆட்டிபடைக்கும்
மனசிடமிருந்து!
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

