Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?
#5
kasthori Wrote:அன்பான நண்பர்களே,
அவசரப்படாது கீழே தரப்பட்டுள்ள விடயத்தை முழுமையாக வாசித்துவிட்டு உங்கள் கருத்தை முன்வையுங்கள்.

அண்மையில் "கங்காரு ஏன் நான்கு கால்களில் நடப்பதில்லை" என்றொரு சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகம் வாசித்தேன். அதிலே கங்காரு நான்கு கால்களில் நடக்காததற்கான காரணத்தைக் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் கங்காருவும் ஏனைய விலங்குகளைப்போல் நான்கு கால்களிற்தான் நடந்து திரிந்தது. ஒருநாள் அது உணவை உட்கொண்டுவிட்டு இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தின் கீழ் படுத்திருந்தது. அப்போது காடு தீப்பற்றிக்கொண்டது. வேகமாகப் பரவிய காட்டுத்தீயில் இருந்து தப்புவதற்காகக் கங்காரு கடுமையாகப் போராடியது. இறுதியில் அது காட்டுத்தீயிலிருந்து தப்பும்போது அதன் இரு முன்னங்கால்களும் தீயில் எரிந்து இப்போது இருக்குமளவிற்கு சிறியதாகிவிட்டன. அதனாற்தான அதன் முன்னங்காலின் அடிப்பகுதி கறுப்பாக இருக்கின்றது.

சரி இனி விடயத்திற்கு வருகிறேன். விஞ்ஞான ஏணியில் உலகம் தற்போது இருக்கும் இடம் என்ன? நாம் இப்போதும் எவற்றை எமது குழந்தைகளுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கின்றோம்? விஞ்ஞானத்திற்கும் எமக்கும் இடையிலான தொடர்பு இப்போதும் நேர்மாறுவிகித சமனாகத்தான் இருக்கின்றதா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
புத்தகத்தைப் படித்துவிட்டு இது இலங்கையில் அல்லது இந்தியாவில் அச்சடித்த புத்தகமாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட்டுப் பார்த்தால் அது அவுஸ்திரேலியாவில் அடித்த புத்தகம். அடப் பாவிகளா தமிழ் படிப்பிக்கிறோம் என்று கிழம்பி இதைத்தானா செய்துகொண்டிருக்கிறியள்.

சகோதரி!
இதில் எமது தவறும் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.
ஏனெனில் குழந்தைகள் படிக்கவேண்டும் என்பதற்காக கண்ணில் படும் புத்தகங்களை வாங்கி கொடுப்பதை விடுத்து, அவற்றை ஆராயவேண்டியது பெற்றோர்களது கடமை. வியாபாரம் வியாபித்து நிற்கும் உலகம் இது. இன்றைய பெற்றோர் கண்முடி இருந்து விட்டால் நாளைய சந்ததியினர் கண்முடிய பூனையாக இருப்பதில் வியப்பில்லை.
தன்னைத்தானே புத்திஜுவிகளாக நினைத்து கொள்பவர் விஞ்ஞான உலகத்தையும் மீறிய கற்பனா உலகத்தில் வாழ்பவர்கள். அப்படியானவா்களின் படைப்புகளில் ஒன்றகவே நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தினையும் நான் கருதுகிறேன். பெற்றோர்கள் முதலில் தங்களை தெளிவுபடுத்திக் கொண்டால் நல்லது. இன்றைய விதை நாளைய ஆலவிருட்சம் ஆவதும் அன்றில் நெருஞ்சிக் கொடியாவதும் அவர்கள் (பெற்றோர்) கையில்.! :oops: :oops:
:: ::

-
!
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 02-16-2005, 12:17 PM
[No subject] - by kasthori - 02-16-2005, 12:26 PM
[No subject] - by sinnappu - 02-16-2005, 02:37 PM
Re: நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்? - by Kurumpan - 02-16-2005, 03:58 PM
[No subject] - by Kurumpan - 02-16-2005, 03:59 PM
[No subject] - by sinnappu - 02-16-2005, 09:21 PM
[No subject] - by Niththila - 02-17-2005, 12:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)