02-15-2005, 01:07 PM
யதார்த்தத்தை நோக்கி பயணிக்க வேண்டிய இந்தியா. - சிறி.இந்திரகுமார்.
ஆழ் தியானத்திலிருந்த ஒரு முனிவரின் தவம் திடிரென கலைந்து போனது போன்ற ஒரு நிலைமையைத்தான் இந்தியா இப்போது அனுபவிக்கிறது.
ஏன் இந்த தவம்கலைந்த நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால இப்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் இந்தியா ஆழ்த்தியானத்திலிருந்ததும் தவறு. தியானம் கலைந்து அந்தரிக்கும் இந்த நிலையும் தவறு.
அதாவது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சுனாமி சுழற்றிய சுழற்றல் இந்தோனிசியா, தாய்லாந்து, இலங்கை, பங்களாதேஷ், இந்தியா என எல்லா இடங்களிலும் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினாலும் இந்த தேசங்களை எல்லாம் இந்த நாடுகளின் பொருளாதாரரீதியிலான இழப்புக்களுக்கூடாக பார்க்கின்ற ஒரு போக்கே இப்போது காணப்படுகிறது.
ஆனால் இந்த சுனாமிப் பேரனர்த்தமானது இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருளாதார ரீதியிலான அழிவுகளுக்கு அப்பால் இந்தியா இந்துசமுத்திரப் பிரந்தியத்தின் பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை வெறும் பொருளாதார ரீதியிலான இழப்புக்களோடு மட்டும் மட்டுப்படுத்தி விடமுடியாது.
இந்த இந்தியாவுக்கான இழப்பை அல்லது தாகத்தை இந்த பிராந்திய வல்லரசின் அரசியல் ஸ்தானத்தில் ஏற்ப்படுத்தியுள்ள பெரியதொரு தாக்கத்திற் கூடாகவே பார்கவேண்டும்.
இப்பொழுது பெருமளவு இராஜதந்திரிகளும், அரசியல் நோக்கர்களும் இந்தியாவுக்கான இழப்பை இப்படித்தான் பார்கிறார்கள்.
இதற்குக் காரணம் இந்த விடயத்தில் இந்தியா சந்தித்துள்ள நவீன தோல்வி ஒன்றாகவே இதனைக் கருதுகிறார்கள்.
இந்தியா எவ்வளவுதான் அமைதியா தன்னைக்காட்டிக் கொண்டாலும் அது உள்ளுர குமறிக்கொண்டிருக்கிறது.
பிரந்திய வல்லரசு என்ற வகையில் அதன் கௌரவத்தில் கீறல் விழுந்து விட்டதாகவே அது கருதுகிறது.
இந்த சுனாமி விவகாரத்தை இந்தியா ஒரு சின்ன நடவடிக்கைமூலம் கையாண்டு விடும் நோக்கில் தனது நடவடிக்கைகளை முடக்கிவிட்டபோது. அமெரிக்காவோ, தான் எப்படி ஒரு பேரண்ட பேரரசாக தன்னைக்காட்டடிக் கொள்கிறதோ அதே போன்று இந்தப் பிராந்தியத்தில் இந்த விவகாரத்தை கையாள முனைந்தபோதே இதனை ஒரு பிரமாண்டமான விவகாரமாகக் கையாண்டது.
அமெரிக்காவின் இந்த பிரமாண்டமான நடவடிக்கையின் முன் இந்தியா எதுவும் செய்யமுடியாத ஒரு நிலைமையிலேயே இருந்தது.
இந்தியாவால் இந்தியாவுக்குள் மட்டும் தனித்துவத்தைப் பேணிக்கொண்டதே தவிர இந்தப் பிராந்தியத்தின் வல்லரசு என்ற வகையில் தனது தனித்துவத்தை இழந்துதான் போனது.
இந்தியாவுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்களுக்கு சர்வதேச உதவிகள் எவையும் தேவையில்லை எனக்கூறி தனது இழப்பை தானே நிவர்திசெய்து கொள்வதும் சுனாமி எச்சரிக்கை மையம் தொடர்பாக அதனை தானே நிறுவிக்கொள்ளும் எனக் கூறிக்கொண்டதும் இந்தியாவுக்குள் இந்தியாவின் தனித்துவத்தை பேணமட்டுமே இந்த அணுகுமுறை போதுமானதாவுள்ளது.
இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த நவீன இராஜதந்திரத்தோல்வியை எனி எவ்வாறு நிவர்த்திசெய்து கொள்ளப்போகிறது என்பது இந்தியாவுக்கு ஒரு பெரும்பிரச்சனையாக இருக்கும்.
இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த இராஜதந்திர நெருக்கடியானது இந்தியாவின் காலம் கடந்த வெளியுறவுக் கொள்கையின் இளமையின் வெளிப்பாடு என்பதே மெய்.
இதிலும் இந்தியாவின் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கூடாக பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
இலங்கை விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சம அந்தஸ்துக் கொண்டவர்கள் என்பது தான் இப்போதுள்ள கள நிலவரம்.
ஆனால் இந்தவிடயத்தில் இந்தியா இலங்கை அரசை நம்பிச் செயற்பட்டதே தவிர புலிகள் இயக்கத்தை கவனத்தில் எடுக்கவில்லை. இன்னமும் எடுக்கவில்லை.
எண்பத்து ஏழுகளின் பின்னர் இந்தியா இலங்கை விவகாரத்தில் சந்தித்த சில கசப்பான அணுபவங்களின் அடிப்படையில் ஒரு பழிவாங்கும மனோபவத்துடனேயேதான் தனது அணுகுமுறையை மேற்கொள்கிறதே தவிர காலத்துக்கு பொருந்திய புதிய மாற்றத்துக்கம் அணுகுமுறைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்ளவில்லை.
இதன் விளைவுகளின் ஒரு படியை இந்தியா இப்டீபாது அனுபவிதிதாகிவிட்டது. இந்தியா அனுபவிக்கும் இந்த நிலைமை இந்தியாவின் கொள்கையின் போக்கில் நீண்டகாலத்துக்கு ஒரு தாக்கத்தை செலுத்தவல்லதாகவே நிச்சயம் இருக்கப்போகிறது.
இந்தியா ஸ்ரீலங்கா அரசை தனது நண்பனாகவே கருதிச்செயற்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா அரசோ இந்திய நண்பனல்ல என்பதை தெளிவாகவே உணர்திவிட்டது.
இதனை இந்தியாவுடன் ஆலோசிக்காமல் அமெரிக்கப்படைகள் இலங்கைக்கு வருகைதர அழைத்தமையைப் பார்க்கலாம்.
அமெரிக்கபடைகள் இலங்கையில் நிலைகொண்டிருக்கும் வரை இந்தியாவுக்கு அடிவயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்ருடிப்பது போன்றதொரு நிலைமைதான்.
இதனால் இலங்கைக்கு முதலில் தனது படைகளை அனுப்பியதுபோன்று அதிலொரு தொகையை விரைவாக வெளியேற்றவும் செய்தது.
இதனூடாக இந்தியா ஒரு செய்தியை சொல்லியது. அதாவது இனி படைவிலகலை மேற்கொள்ளலாம் என்பதே அமெரிக்காவுக்கான அந்தச் செய்தி. ஆனால் அமெரிக்காவும் பதிலளிப்பதுபோன்றே தனது படைகளில் ஒரு தொகுதியை விலக்கிக்கொண்டது.
இப்பொழுது இரு நாடுகளினதும் எஞ்சிய தொகை படையினர் இலங்கையில் நிலை கொண்டுள்ளனர். இதில் முதலில் யார் படைவிலகலை மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதிலும் இந்த புதிய ஆட்டத்தின் போக்கின் ஒரு நிலைமையிருக்கிறது.
இதுவொரு பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற ஒரு நிலையாகவே இருக்கும்.
இந்த நிலையில் இனியாவது இந்தியாவின் போக்கில் இலங்கை விவகாரத்தில் புதியதொரு போக்கு தோன்றுமா என்பது முக்கியமானதாக இருக்கிறது.
இத்தகையதொரு போக்கு இந்தியாவின் கொள்கையில் ஏற்ப்படவேண்டும் என்ற கருத்துக்கள் இநதியாவிலுள்ள சில புத்திஜூவிகள் மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான சகாதேவன் அண்மையில் இதனைசுட்டிக்காட்டியிருந்தார் என்பது கவனிக்கதக்கது.
ஆனால் இத்தகையதொரு மாற்றம் நிகழுமா என்பது இன்னும் ஒரு தெளிவில்லாத நிலைமையிலே தான் இருக்கிறது.
இலங்கை விவகாரத்தில் ஒரு தவறான போக்கை காட்டிய முக்கியமானவர்களில் ஒருவரான இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்து சுனாமியின் பின் மாரடைப்பால் மரணமான ஜே.என்.டிக்ஷிற்றின் வெற்றிடத்தை ஏற்ப்படுத்தியுள்ள அதேவேளை ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது.
ஜே.என்.டிக்ஷிற் இலங்கை விவகாரத்தில் கையாண்ட அணுகுமுறையாகவும் தோல்வியினை சந்தித்ததை தன் கண்களாலேயே பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் தமிழ் மக்களையும் புலிகளையும் நண்பர்களாக கருதலாம்.
இந்தியாவுக்கு என்றும் எதிரானவர்களாக தமிழ் மக்களோ, புலிகளோ அல்லர் என்பதை பலமுறை தெளிவுபடுத்தியாகியம் விட்டாயிற்று.
ஆனால் இந்தியா தனது பழைய கசப்பான அனுபவத்தினூடாக தமிழர் விவகாரத்தை இப்போதும் பார்க்கிறது.
இந்த பழைய கசப்பான அனுபவம் என்பது ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றுமுழுதாக தனது நலனுக்கூடாக அணுகியதோடு மட்டுமல்லாது தனது நலனுக்காகப் பலியிடவும் துணிந்தபோது தான் அந்த அனுபவம் ஏற்ப்பட்டது.
எந்தவொரு நாடும் ஒரு விவகாரத்தை தனது நலனுக்கூடாகக் கையாள்வது வழமைதான் ஆனால் அதற்கும் ஒரு வரைமுறையும் அளவுகோலும் உண்டு. இந்தியா இந்தவரைமுறைகளை தாண்டியபோதுதான் அந்த கசப்பான அனுபவத்தை அது சந்தித்தது. இதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த நலையில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்து மறைந்து போன டிக்~pற்றின் இடத்துக்கு எம்.கே.நாராயணன் பாதுகாப்புத்துறை ஆலோசகராக கதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை சார் நடவடிக்கையாக இந்திய இலங்கை கரையோரப்பாதுகாப்பைப் பலப்படுத்த எழுநூற்று நாற்பத்து இரண்டு கோடி ரூபா செலவில் முதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது இந்தியாவின் கூடுதல் கவனம் இங்கு திசைமுகப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.
டிக்~pற்றின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த எழுபது வயதுக்காரரான எம்.கே. நாரயணன் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பின் முதல்வராக இருந்ததுடன் மன்மோகன்சிங் அரசின் காலத்தில் பிரதமர் அலுவலகத்தில் சிறப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டவர். இவர் இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்றும பாதுகாப்புச் சமூகத்தின் அதி புத்திசாலி உறுப்பினாகளில் ஒருவர் என்ற புகழைக் கொண்டவர் என்றும் தமிழின விரோதப்பாக்கை கக்கிவரும் ?இந்து? பந்திரிக்கை புகழ்கிறது.
அத்தோடு பிரதமர் அலுவலகத்தின் விசேட செயலாளராக நியமிக்கப்பட்ட போதே அவர் ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு கிளர்ச்சி நாகா அமைதிப்பேச்சுக்கள், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான விடயங்கள் என்பவை தொடர்பாகக் கையாண்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா புதிய மாற்றத்துக்கு தமிழ் மக்களுடனான நியாய பூர்வமான நடபுக்கும் உறவுக்கம் தன்னை தயார்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
ஆழ் தியானத்திலிருந்த ஒரு முனிவரின் தவம் திடிரென கலைந்து போனது போன்ற ஒரு நிலைமையைத்தான் இந்தியா இப்போது அனுபவிக்கிறது.
ஏன் இந்த தவம்கலைந்த நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால இப்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் இந்தியா ஆழ்த்தியானத்திலிருந்ததும் தவறு. தியானம் கலைந்து அந்தரிக்கும் இந்த நிலையும் தவறு.
அதாவது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சுனாமி சுழற்றிய சுழற்றல் இந்தோனிசியா, தாய்லாந்து, இலங்கை, பங்களாதேஷ், இந்தியா என எல்லா இடங்களிலும் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினாலும் இந்த தேசங்களை எல்லாம் இந்த நாடுகளின் பொருளாதாரரீதியிலான இழப்புக்களுக்கூடாக பார்க்கின்ற ஒரு போக்கே இப்போது காணப்படுகிறது.
ஆனால் இந்த சுனாமிப் பேரனர்த்தமானது இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருளாதார ரீதியிலான அழிவுகளுக்கு அப்பால் இந்தியா இந்துசமுத்திரப் பிரந்தியத்தின் பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை வெறும் பொருளாதார ரீதியிலான இழப்புக்களோடு மட்டும் மட்டுப்படுத்தி விடமுடியாது.
இந்த இந்தியாவுக்கான இழப்பை அல்லது தாகத்தை இந்த பிராந்திய வல்லரசின் அரசியல் ஸ்தானத்தில் ஏற்ப்படுத்தியுள்ள பெரியதொரு தாக்கத்திற் கூடாகவே பார்கவேண்டும்.
இப்பொழுது பெருமளவு இராஜதந்திரிகளும், அரசியல் நோக்கர்களும் இந்தியாவுக்கான இழப்பை இப்படித்தான் பார்கிறார்கள்.
இதற்குக் காரணம் இந்த விடயத்தில் இந்தியா சந்தித்துள்ள நவீன தோல்வி ஒன்றாகவே இதனைக் கருதுகிறார்கள்.
இந்தியா எவ்வளவுதான் அமைதியா தன்னைக்காட்டிக் கொண்டாலும் அது உள்ளுர குமறிக்கொண்டிருக்கிறது.
பிரந்திய வல்லரசு என்ற வகையில் அதன் கௌரவத்தில் கீறல் விழுந்து விட்டதாகவே அது கருதுகிறது.
இந்த சுனாமி விவகாரத்தை இந்தியா ஒரு சின்ன நடவடிக்கைமூலம் கையாண்டு விடும் நோக்கில் தனது நடவடிக்கைகளை முடக்கிவிட்டபோது. அமெரிக்காவோ, தான் எப்படி ஒரு பேரண்ட பேரரசாக தன்னைக்காட்டடிக் கொள்கிறதோ அதே போன்று இந்தப் பிராந்தியத்தில் இந்த விவகாரத்தை கையாள முனைந்தபோதே இதனை ஒரு பிரமாண்டமான விவகாரமாகக் கையாண்டது.
அமெரிக்காவின் இந்த பிரமாண்டமான நடவடிக்கையின் முன் இந்தியா எதுவும் செய்யமுடியாத ஒரு நிலைமையிலேயே இருந்தது.
இந்தியாவால் இந்தியாவுக்குள் மட்டும் தனித்துவத்தைப் பேணிக்கொண்டதே தவிர இந்தப் பிராந்தியத்தின் வல்லரசு என்ற வகையில் தனது தனித்துவத்தை இழந்துதான் போனது.
இந்தியாவுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்களுக்கு சர்வதேச உதவிகள் எவையும் தேவையில்லை எனக்கூறி தனது இழப்பை தானே நிவர்திசெய்து கொள்வதும் சுனாமி எச்சரிக்கை மையம் தொடர்பாக அதனை தானே நிறுவிக்கொள்ளும் எனக் கூறிக்கொண்டதும் இந்தியாவுக்குள் இந்தியாவின் தனித்துவத்தை பேணமட்டுமே இந்த அணுகுமுறை போதுமானதாவுள்ளது.
இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த நவீன இராஜதந்திரத்தோல்வியை எனி எவ்வாறு நிவர்த்திசெய்து கொள்ளப்போகிறது என்பது இந்தியாவுக்கு ஒரு பெரும்பிரச்சனையாக இருக்கும்.
இந்தியா இப்பொழுது சந்தித்துள்ள இந்த இராஜதந்திர நெருக்கடியானது இந்தியாவின் காலம் கடந்த வெளியுறவுக் கொள்கையின் இளமையின் வெளிப்பாடு என்பதே மெய்.
இதிலும் இந்தியாவின் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கூடாக பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
இலங்கை விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சம அந்தஸ்துக் கொண்டவர்கள் என்பது தான் இப்போதுள்ள கள நிலவரம்.
ஆனால் இந்தவிடயத்தில் இந்தியா இலங்கை அரசை நம்பிச் செயற்பட்டதே தவிர புலிகள் இயக்கத்தை கவனத்தில் எடுக்கவில்லை. இன்னமும் எடுக்கவில்லை.
எண்பத்து ஏழுகளின் பின்னர் இந்தியா இலங்கை விவகாரத்தில் சந்தித்த சில கசப்பான அணுபவங்களின் அடிப்படையில் ஒரு பழிவாங்கும மனோபவத்துடனேயேதான் தனது அணுகுமுறையை மேற்கொள்கிறதே தவிர காலத்துக்கு பொருந்திய புதிய மாற்றத்துக்கம் அணுகுமுறைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்ளவில்லை.
இதன் விளைவுகளின் ஒரு படியை இந்தியா இப்டீபாது அனுபவிதிதாகிவிட்டது. இந்தியா அனுபவிக்கும் இந்த நிலைமை இந்தியாவின் கொள்கையின் போக்கில் நீண்டகாலத்துக்கு ஒரு தாக்கத்தை செலுத்தவல்லதாகவே நிச்சயம் இருக்கப்போகிறது.
இந்தியா ஸ்ரீலங்கா அரசை தனது நண்பனாகவே கருதிச்செயற்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா அரசோ இந்திய நண்பனல்ல என்பதை தெளிவாகவே உணர்திவிட்டது.
இதனை இந்தியாவுடன் ஆலோசிக்காமல் அமெரிக்கப்படைகள் இலங்கைக்கு வருகைதர அழைத்தமையைப் பார்க்கலாம்.
அமெரிக்கபடைகள் இலங்கையில் நிலைகொண்டிருக்கும் வரை இந்தியாவுக்கு அடிவயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்ருடிப்பது போன்றதொரு நிலைமைதான்.
இதனால் இலங்கைக்கு முதலில் தனது படைகளை அனுப்பியதுபோன்று அதிலொரு தொகையை விரைவாக வெளியேற்றவும் செய்தது.
இதனூடாக இந்தியா ஒரு செய்தியை சொல்லியது. அதாவது இனி படைவிலகலை மேற்கொள்ளலாம் என்பதே அமெரிக்காவுக்கான அந்தச் செய்தி. ஆனால் அமெரிக்காவும் பதிலளிப்பதுபோன்றே தனது படைகளில் ஒரு தொகுதியை விலக்கிக்கொண்டது.
இப்பொழுது இரு நாடுகளினதும் எஞ்சிய தொகை படையினர் இலங்கையில் நிலை கொண்டுள்ளனர். இதில் முதலில் யார் படைவிலகலை மேற்கொள்ளப்போகிறார்கள் என்பதிலும் இந்த புதிய ஆட்டத்தின் போக்கின் ஒரு நிலைமையிருக்கிறது.
இதுவொரு பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற ஒரு நிலையாகவே இருக்கும்.
இந்த நிலையில் இனியாவது இந்தியாவின் போக்கில் இலங்கை விவகாரத்தில் புதியதொரு போக்கு தோன்றுமா என்பது முக்கியமானதாக இருக்கிறது.
இத்தகையதொரு போக்கு இந்தியாவின் கொள்கையில் ஏற்ப்படவேண்டும் என்ற கருத்துக்கள் இநதியாவிலுள்ள சில புத்திஜூவிகள் மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான சகாதேவன் அண்மையில் இதனைசுட்டிக்காட்டியிருந்தார் என்பது கவனிக்கதக்கது.
ஆனால் இத்தகையதொரு மாற்றம் நிகழுமா என்பது இன்னும் ஒரு தெளிவில்லாத நிலைமையிலே தான் இருக்கிறது.
இலங்கை விவகாரத்தில் ஒரு தவறான போக்கை காட்டிய முக்கியமானவர்களில் ஒருவரான இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்து சுனாமியின் பின் மாரடைப்பால் மரணமான ஜே.என்.டிக்ஷிற்றின் வெற்றிடத்தை ஏற்ப்படுத்தியுள்ள அதேவேளை ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது.
ஜே.என்.டிக்ஷிற் இலங்கை விவகாரத்தில் கையாண்ட அணுகுமுறையாகவும் தோல்வியினை சந்தித்ததை தன் கண்களாலேயே பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் தமிழ் மக்களையும் புலிகளையும் நண்பர்களாக கருதலாம்.
இந்தியாவுக்கு என்றும் எதிரானவர்களாக தமிழ் மக்களோ, புலிகளோ அல்லர் என்பதை பலமுறை தெளிவுபடுத்தியாகியம் விட்டாயிற்று.
ஆனால் இந்தியா தனது பழைய கசப்பான அனுபவத்தினூடாக தமிழர் விவகாரத்தை இப்போதும் பார்க்கிறது.
இந்த பழைய கசப்பான அனுபவம் என்பது ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றுமுழுதாக தனது நலனுக்கூடாக அணுகியதோடு மட்டுமல்லாது தனது நலனுக்காகப் பலியிடவும் துணிந்தபோது தான் அந்த அனுபவம் ஏற்ப்பட்டது.
எந்தவொரு நாடும் ஒரு விவகாரத்தை தனது நலனுக்கூடாகக் கையாள்வது வழமைதான் ஆனால் அதற்கும் ஒரு வரைமுறையும் அளவுகோலும் உண்டு. இந்தியா இந்தவரைமுறைகளை தாண்டியபோதுதான் அந்த கசப்பான அனுபவத்தை அது சந்தித்தது. இதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த நலையில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்து மறைந்து போன டிக்~pற்றின் இடத்துக்கு எம்.கே.நாராயணன் பாதுகாப்புத்துறை ஆலோசகராக கதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை சார் நடவடிக்கையாக இந்திய இலங்கை கரையோரப்பாதுகாப்பைப் பலப்படுத்த எழுநூற்று நாற்பத்து இரண்டு கோடி ரூபா செலவில் முதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது இந்தியாவின் கூடுதல் கவனம் இங்கு திசைமுகப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.
டிக்~pற்றின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த எழுபது வயதுக்காரரான எம்.கே. நாரயணன் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பின் முதல்வராக இருந்ததுடன் மன்மோகன்சிங் அரசின் காலத்தில் பிரதமர் அலுவலகத்தில் சிறப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டவர். இவர் இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்றும பாதுகாப்புச் சமூகத்தின் அதி புத்திசாலி உறுப்பினாகளில் ஒருவர் என்ற புகழைக் கொண்டவர் என்றும் தமிழின விரோதப்பாக்கை கக்கிவரும் ?இந்து? பந்திரிக்கை புகழ்கிறது.
அத்தோடு பிரதமர் அலுவலகத்தின் விசேட செயலாளராக நியமிக்கப்பட்ட போதே அவர் ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு கிளர்ச்சி நாகா அமைதிப்பேச்சுக்கள், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான விடயங்கள் என்பவை தொடர்பாகக் கையாண்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா புதிய மாற்றத்துக்கு தமிழ் மக்களுடனான நியாய பூர்வமான நடபுக்கும் உறவுக்கம் தன்னை தயார்படுத்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

