02-15-2005, 01:05 PM
உதவி புரிவதாக உறுதியளித்தவர்கள் கைகழுவி விட்ட அவலமான நிலை!
ஈராக் தீவிரவாதிகளினால் பயண கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையை வந்தடைந்த தனக்கு நட்டஈடு, நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதியளித்த இலங்கை வெளிநாட்டமைச்சு இன்றுவரை எந்தவிதமான உதவிகளையும் வழங்கவில்லையென தெரிவிக்கும் வத்தளையைச் சேர்ந்த தர்மேந்திரா ராஜரட்ணம் தனது குடும்பத்தின் வறுமை நிலையை வெளிநாட்டமைச்சருக்கு எடுத்துக்கூற பலமுறை முயன்றபோதும் அம்முயற்சியை வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் உதாசீனம் செய்வதாக கவலையுடன் தெரிவிக்கிறார்.
குவைத் நாட்டிற்கு தனது குடும்பத்தின் வறிய நிலை காரணமாகவே வருமானத்தைப் பெறுவதற்காக தொழில் செய்ய சென்றதாகவும், குவை நாட்டில் சிலகாலம் தொழில் புரிந்ததாகவும் பின்னர் தான் தொழில் புரியும் கம்பனியின் கட்டாய பணிப்பின் பெயரில் ஈராக் நாட்டிற்கு அமெரிக்க இராணுவத்திற்கான பொருட்களைக் கொண்டு சென்றபோதே ஈராக் தீவிரவாதிகளால் தான் கடத்தப்பட்டு 44 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்ததுடன் மிகுந்த மன விரக்தியையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தான் வீட்டு வறுமையைப் போக்குவதற்காகவே வெளிநாடு சென்றதாகவும் தனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையால் தனது குடும்பம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் தனது பிள்ளைகள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் உள்ளபோதும் அவர்களை ஒரு உயர்தர பாடசாலையில் சேர்ப்பதற்கு அனுமதி கிடைத்தும், அங்கு அவர்கள் செல்வதற்கு வசதிகள் இல்லாத நிலையில் தாம் இருப்பதாகவும், மிகவும் கண்கலங்கிய நிலையில் தெரிவித்தார்.
சொந்தக் குடியிருப்புகள் மற்றும் ஜீவனோபாயம் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கை வந்தபோது தனக்கும் பலர் அறுதல் வார்த்தைகள் கூறியதாகவும், வெளிநாட்ட அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தனக்கு நஷ்ட ஈடும் நிவாரணமும் பெற்றுத் தருவதாக உறுதிமொழிகள் அளித்ததாகவும் ஆனால், தான் நாடு திரும்பி இருமாதங்கள் சென்ற நிலையிலும் எதுவித தொடர்புகளும் தம்முடன் வைக்கவில்லையென்றும் தான் இதுபற்றி வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் விஸ்வ வர்ணபாலாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும் கடிதம் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லையென்றும் பின்னர் தான் பலமுறை வெளிநாட்டு அமைச்சுக்குச் சென்று அமைச்சர்களைச் சந்தித்து தனது நிலையைமை எடுத்துக்கூற அனுமதி கேட்டும் அது பலனளிக்கவில்லையென்று மிகவும் மனவேதனையுடன் தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய வேதனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதநிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவரது குடும்பத்திற்கு உதவ விரும்புவோர் தேசிய சேமிப்பு வங்கியின் வத்தளைக் கிளை 100850265403 என்ற டி.டி.இராஜரட்ணத்தின் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யலாம்.
தினக்குரல்
ஈராக் தீவிரவாதிகளினால் பயண கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையை வந்தடைந்த தனக்கு நட்டஈடு, நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதியளித்த இலங்கை வெளிநாட்டமைச்சு இன்றுவரை எந்தவிதமான உதவிகளையும் வழங்கவில்லையென தெரிவிக்கும் வத்தளையைச் சேர்ந்த தர்மேந்திரா ராஜரட்ணம் தனது குடும்பத்தின் வறுமை நிலையை வெளிநாட்டமைச்சருக்கு எடுத்துக்கூற பலமுறை முயன்றபோதும் அம்முயற்சியை வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் உதாசீனம் செய்வதாக கவலையுடன் தெரிவிக்கிறார்.
குவைத் நாட்டிற்கு தனது குடும்பத்தின் வறிய நிலை காரணமாகவே வருமானத்தைப் பெறுவதற்காக தொழில் செய்ய சென்றதாகவும், குவை நாட்டில் சிலகாலம் தொழில் புரிந்ததாகவும் பின்னர் தான் தொழில் புரியும் கம்பனியின் கட்டாய பணிப்பின் பெயரில் ஈராக் நாட்டிற்கு அமெரிக்க இராணுவத்திற்கான பொருட்களைக் கொண்டு சென்றபோதே ஈராக் தீவிரவாதிகளால் தான் கடத்தப்பட்டு 44 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்ததுடன் மிகுந்த மன விரக்தியையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தான் வீட்டு வறுமையைப் போக்குவதற்காகவே வெளிநாடு சென்றதாகவும் தனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையால் தனது குடும்பம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் தனது பிள்ளைகள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் உள்ளபோதும் அவர்களை ஒரு உயர்தர பாடசாலையில் சேர்ப்பதற்கு அனுமதி கிடைத்தும், அங்கு அவர்கள் செல்வதற்கு வசதிகள் இல்லாத நிலையில் தாம் இருப்பதாகவும், மிகவும் கண்கலங்கிய நிலையில் தெரிவித்தார்.
சொந்தக் குடியிருப்புகள் மற்றும் ஜீவனோபாயம் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கை வந்தபோது தனக்கும் பலர் அறுதல் வார்த்தைகள் கூறியதாகவும், வெளிநாட்ட அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தனக்கு நஷ்ட ஈடும் நிவாரணமும் பெற்றுத் தருவதாக உறுதிமொழிகள் அளித்ததாகவும் ஆனால், தான் நாடு திரும்பி இருமாதங்கள் சென்ற நிலையிலும் எதுவித தொடர்புகளும் தம்முடன் வைக்கவில்லையென்றும் தான் இதுபற்றி வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் விஸ்வ வர்ணபாலாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும் கடிதம் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லையென்றும் பின்னர் தான் பலமுறை வெளிநாட்டு அமைச்சுக்குச் சென்று அமைச்சர்களைச் சந்தித்து தனது நிலையைமை எடுத்துக்கூற அனுமதி கேட்டும் அது பலனளிக்கவில்லையென்று மிகவும் மனவேதனையுடன் தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய வேதனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதநிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவரது குடும்பத்திற்கு உதவ விரும்புவோர் தேசிய சேமிப்பு வங்கியின் வத்தளைக் கிளை 100850265403 என்ற டி.டி.இராஜரட்ணத்தின் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யலாம்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

